உங்கள் வருகைக்கு நன்றி

கோதுமைப் புல்லின் பயன்கள்!

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

இயற்கை மருத்துவத்தில் பல நோய்களுக்கு அருகம்புல் பரிந்துரைப்பர். அதற்கு இணையான மருத்துவ குணம் கொண்டதே கோதுமைப்புல். இதுகுறித்த விழிப்புணர்வு நம்மில் பலரிடம் இல்லை.அது என்னங்க கோதுமைப்புல் என கேட்கிறீர்களா?கோதுமைப்புல் சாற்றை இயற்கை மருத்துவர்கள் 'பச்சை ரத்தம்' என்கின்றனர். இதில், உடலுக்கு தேவையான 19 அமினோ அமிலங்கள், 92 தாதுக்கள் உள்ளன. கால்சியம், இரும்பு சத்து, மக்னீசியம், விட்டமின்கள், புரோட்டீன்கள், என்சைம்கள் என, ஏராளமான சத்துக்கள் உள்ளன.செரிமானம், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஹீமோகுளோபின் அதிகரித்தல், மலச்சிக்கலுக்கு தீர்வு, சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல் என இதன் பலன்கள் ஏராளம். எளிய முறையில் வீட்டிலேயே தயாரித்து, பயன்படுத்தலாம். பெரிய மருத்துவ நிறுவனங்கள், உடல் பருமன் கட்டுப்படுத்தும் நிறுவனங்கள் இதனை பொடியாக்கி, மருந்துகளில் பயன்படுத்தி வருகின்றனர் என, மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கோதுமையை சுத்தமான நீரில், 12 மணி நேரம் ஊற வைத்து வடிகட்ட வேண்டும். அதை, ஈரத்துணியில் இறுக்க முடிந்து தொங்க விட்டு, 12 மணி நேரம் கழித்து எடுத்தால் முளைக்கட்டி விடும். பூ தொட்டியிலோ, வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பாத்திரத்தில் சிறிது மண் இருந்தால் போட்டு லேசாக விதைத்தால், எட்டு நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். அதை அரைத்து காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். சுவைக்காக சிறிது தேன் கலந்துகொள்ளலாம். இதுபோன்று வீட்டிலேயே விதைத்து தேவைக்கு ஏற்ப அறுவடை செய்து கொள்ளலாம்.

 

Read more...

வருமானம் தரும் கோதுமைப் புல் பொடி!

வெள்ளி, 31 டிசம்பர், 2021

வீட்டுத் தோட்டம் அமைத்து கொடுப்பது, பசுமைக் குடில் போட்டுத் தர்றது, பூங்கா உருவாக்குறது, சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பது என, பல வேலைகளைப் பார்த்தேன்.ஒரு கட்டத்தில், மனதில் வெறுப்பு ஏற்பட்டது. இந்த வருமானத்தை நம் ஊரிலேயே சம்பாதிக்கலாம் என தோன்றி, வேலையைத் துாக்கிப் போட்டு விட்டு ஊருக்கு வந்து விட்டேன்.இங்கு வந்ததும், விவசாயம் செய்யப் போறேன்னு சொன்னதும், வீட்டுல கொலை வெறியாகிட்டாங்க; நண்பர்கள், உறவினர்கள் எல்லாரும் கேலி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. எதையும் கண்டுக்காம என் முடிவில் தெளிவாக இருந்தேன்.திண்டுக்கல்லை விட்டு வெளியேறி, வட மாநிலங்களுக்குப் போயிட்டேன். ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்கள்ல இருக்கிற மக்கள், கோதுமை ஜூஸ் குடிப்பதைப் பார்த்தேன்; அது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

அவர்களிடம் விசாரித்ததில், நம் ஊரில் டீ குடிப்பது போல, அங்கு கோதுமைப் புல் ஜூஸ் குடிப்பது வழக்கம் என தெரிந்தது. உடனே அதைப் பற்றிய தகவலைத் தேட ஆரம்பித்ததில், அது உடம்பு ஆரோக்கியத்துக்கு நல்லது என்று தெரிந்தது.

இரண்டு கிலோ கோதுமை விதையுடன் திண்டுக்கல் திரும்பினேன். கோதுமைப் புல் வளர்த்து, அதைப் பொடி செய்து, பாட்டிலில் அடைத்து விற்கப் போறேன்னு சொன்னதும், மறுபடியும் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. கோதுமைப் புல் சாகுபடி செய்வதில் முனைப்பாக இறங்கினேன். எங்களுக்குச் சொந்தமான, 50 சென்ட் நிலத்தை உழுது பாத்தி பாத்தியாகத் தயார் செய்தேன். ௧ கிலோ கோதுமையை விதைத்தால், 3 கிலோ புல் கிடைக்கும்.
அதை வெட்டி, காய வைத்து அரைத்து பொடியாக்கினால், 100 முதல் 150 கிராம் வரை கிடைக்கும். மறுபடியும் அந்தப் பொடியை காய வைத்து பாட்டிலில் அடைத்து, விற்பனைக்கு அனுப்புகிறேன்.தினமும், 30 முதல் 40 பாட்டில் வரை விற்பனையாகிறது. சராசரியாக, 30 பாட்டில் வீதம், 10 ஆயிரத்து 470 ரூபாய் வருமானம் கிடைக்கும். சில சமயம் விற்பனையாகாமலும் இருக்கும்.
அந்த வகையில் மாதக் கணக்குப் பார்த்தால், 20 நாட்களுக்கு, 2 லட்சத்து 9 ஆயிரத்து 400 ரூபாய் கிடைக்கும். அதில், செலவு 70 ஆயிரம் ரூபாய் ஆகி விடும். அதுபோக, 1 லட்சத்து 39 ஆயிரத்து 400 ரூபாய் லாபமாக கிடைக்கும்.நாம் அருகம்புல் ஜூஸ் குடிப்பது போல், வட மாநிலத்தில் கோதுமை புல் ஜூஸ் குடிப்பது நமக்கு லாபத்தை ஏற்படுத்துகிறது.தொடர்புக்கு:97878 87288

கோதுமைப் புல் வளர்த்து அதை அரைத்துப் பொடியாக்கி, 'அமேசான்' வாயிலாக விற்பனை செய்து வரும், திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜ்குமார்:

Read more...

வீட்டை இப்படி பாதுகாக்க

 மழைக் காலத்தில் வீட்டின் உட்புற சுவர்களில் ஈரப்பதம் மற்றும் பூஞ்சை ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். வெளிப்புறச் சுவர் நேரடியாக மழை நீரில் நீண்ட நேரம் படும்போது, அது சுவர்களில் ஈரப்பதத்தை ஏற்படுத்தும். வெளிப்புற பூச்சு வேலை, பெயின்டிங்கின் தரம் மற்றும் வேலைப்பாடு மோசமாக இருந்தால், அது உள்சுவர்களின் ஈரப்பதத்துக்கு வழிவகுக்கும்.

நீரைத் தடுக்கும் பூச்சு செய்யப்படாவிட்டால், தண்ணீர் கசியும்; இது சுவர்களிலும் ஈரப்பதத்தை ஏற்படுத்தும்.ஒரு வீடு; அதனுள்ளே தண்ணீர் தேங்கவில்லை; ஆனால், வெளியே வீட்டைச் சுற்றி ஓரடிக்கு தண்ணீர் தேங்கியிருக்கிறது என வைத்துக் கொள்வோம். அந்நிலையில், அந்த வீட்டின் அடித்தளத்தில் உள்ள செங்கற்களில் நீர் ஊறும். அதன் தொடர்ச்சியாக அதன் மேலுள்ள செங்கற்களிலும் நீர் ஏறி, ஊறும்; இதை, 'கேப்பிலரி' என்கிறோம்.
இந்தப் பிரச்னையை எதிர்கொள்ளாமலிருக்க, அடித்தளத்தில் கான்கிரீட்டுடன், 'வாட்டர் ப்ரூபிங்' ரசாயனத்தைக் கலந்து, செங்கற்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் போடுவதன் வாயிலாக, ஈரப்பதம் தங்குவதைத் தவிர்க்கலாம். வெளிப்புறச் சுவரில் சிறிய விரிசல்கள் இருந்தாலும், அது சுவரில் ஈரப்பதத்துக்கு வழிவகுக்கும்; இதுவும் பூஞ்சையை உருவாக்கும்.
ஈரப்பதம் காரணமாக உருவான பூஞ்சையை, மழைக்காலம் முடிந்த பின் உப்புத் தாள் பயன்படுத்தி தேய்க்கலாம்; அதன்பின் மறுபடியும் பெயின்ட் அடித்துக் கொள்ளலாம். வெளிப்புறச்சுவரில், 'டேம்ப் ஷீத் ப்ரைமர்' என்ற பூச்சை, முதல் பூச்சாக பூச வேண்டும். கட்டடம் கட்டி முடித்ததும், வெளிப்புறத்தில் 'ஒயிட் சிமென்ட்'டால் பூசுவர். அதற்கு பதில் டேம்ப் ஷீத் ப்ரைமரை அடித்தால், கட்டடத்தை ஈரம் ஊடுருவாமல் பாதுகாக்கும்
இன்று பெரும்பாலான வீடுகளின் சுவர்களில் விரிசல்களைப் பார்க்கிறோம். அந்த விரிசல்களின் வழியே தண்ணீர் ஊடுருவி, சுவர்களில் ஈரப்பதம் தேங்கும். ஹார்டுவேர் கடைகளில், 'க்ராக் பில்லிங் பேஸ்ட்' என்றே பிரத்யேகமாக கிடைக்கும்; சிறிய விரிசல்களில் இந்த பேஸ்ட்டை வைத்து நிரப்புவர். சற்றே பெரிய விரிசல் என்றால், சிமென்ட்டும், நீரும் கலந்த கலவையான சிமென்ட் பால் கலவையை சிறிய குழாய் வழியே விரிசலுக்குள் செலுத்துவர். அது உள்ளே பயணித்து நிரம்பி, விரிசல்களை மூடும். வீட்டை இப்படி பாதுகாக்கலாம்!

சென்னையைச் சேர்ந்த கட்டடக் கலை நிபுணர் எஸ்.சதீஷ்குமார்

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets