உங்கள் வருகைக்கு நன்றி

உடலில் ஏற்படும் ஒவ்வொரு சத்தத்துக்கும் ஒரு காரணம் இருக்கு

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019


நம் உடலில் ஏற்படும் ஒவ்வொரு சத்தத்துக்கும், ஒரு காரணம் இருக்கும். எனவே, அவற்றை அலட்சியப் படுத்த கூடாது. மார்பு பகுதியில் விசில் ஒலிப்பது போன்ற சத்தம் கேட்கும். மூச்சுக் குழாயில் தற்காலிகமாக தசை சுருக்கம் ஏற்பட்டு, அடைப்பு ஏற்படுவதே, இதற்கு காரணம்.இதில், முதல் மற்றும் இரண்டு நிலைகள், மருத்துவர்கள் பரிசோதிக்கும்போது மட்டுமே சத்தம் கேட்கும். மூன்றாம் நிலை, அமைதியான புறச்சூழலிலும், நான்காம் நிலையில், நன்றாகவும் சத்தம் கேட்கும். சுவாசக் கோளாறு, ஆஸ்துமா பாதிப்புகளால் இது ஏற்படும். உடனடியாக சிகிச்சை எடுப்பது நல்லது.சிலருக்கு அடிக்கடியும், அதிக சத்தத்தோடும், தொடர்ச்சியாகவும் ஏப்பம் வரும். எண்ணெயில் சமைத்த, வறுத்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால், வயிற்றின் மேற்பகுதியில் வாயு உண்டாகி, இது ஏற்படுகிறது. எண்ணெயில் பொரித்த உணவு சாப்பிடுவதை குறைத்தால், இதில் இருந்து தப்பலாம். பாதாம், முந்திரி, பிஸ்தாவை அளவுக்கதிகமாக சாப்பிட்டால், வாயு தொல்லை ஏற்பட்டு, வயிற்றில், 'கடமுட' சத்தமும், வாயுவும் அடிக்கடி வெளியேறும் என்பதால், அளவாக சாப்பிடுவது நல்லது. வயதானவர்களில் சிலருக்கு, கால்களை மடக்கி, நீட்டும்போது, மூட்டுகளில், 'க்ளிக் க்ளிக்' என சத்தம் கேட்கும். முறையான உடற்பயிற்சியும், தேவைப்பட்டால் மூட்டுகளுக்கான திரவத்தை செயற்கையாக செலுத்தியும் சரிசெய்யலாம்.கழுத்து வீக்கம் மற்றும் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு, துாங்கும்போது மூச்சுக்குழாய் சுருங்கிவிடும். அதனால், நுரையீரலுக்கு போதிய ஆக்சிஜன் செல்லாமல், சற்று அழுத்தமாக மூச்சுவிடுவதால், குறட்டை சத்தமாக வெளியே வரும். இதற்கென உள்ள, 'பைபேப்' கருவியை, துாங்கும்போது வாயில் பொருத்தினால், குறட்டை சத்தம் வராது. தேவைப்பட்டால், அறுவை சிகிச்சை செய்தும் சரிசெய்யலாம்.சிலருக்கு காதுகளில் வித்தியாசமான ஒலி கேட்கும். இதற்கு, மொபைல் போனை அதிக சத்தமாக பயன்படுத்துவது, 'ஹெட்போனில்' அதிக சத்தமாக பாடல் கேட்பதை தவிர்க்க வேண்டும். யாரோ பேசுவது, கூப்பிடுவது போல சத்தம் கேட்டால், அது, மனநலம் சார்ந்த பாதிப்பாக இருக்கும் என்பதால், மனநல மருத்துவரிடம் செல்வது நல்லது. துாங்கும்போது சிலர், 'நறநற'வென பற்களை கடிப்பர். மூளை தொடர்பான பாதிப்பு இருந்தால், இந்த பிரச்னை வரலாம். மன நல பாதிப்புகளாலும் ஒரு சிலருக்கு, பற்களை கடிக்கும் பழக்கம் இருக்கலாம். அதற்கான சிகிச்சை மேற்கொண்டால், இதில் இருந்து விடுபடலாம்.

Read more...

மனநலத்தில் மட்டுமல்ல, உடல்நலத்திலும் தாக்கம்.

வெள்ளி, 12 ஏப்ரல், 2019


சோகமோ, மகிழ்ச்சியோ, கோபமோ, காதலோ... மனிதன் வெளிப்படுத்தும் ஒவ்வோர் உணர்வுக்கும், மூளை நரம்பில் நடக்கும் ரசாயன மாற்றங்களே காரணம். அந்த உணர்வுகள், மனநலத்தில் மட்டுமல்ல, உடல்நலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.நேர்மறை உணர்வுகள், மனதையும், உடலையும் இலகுவாக்கி, உடலுறுப்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். எதிர்மறை உணர்வுகளோ, மன அழுத்தத்தை கொடுத்து, உடல் நலன், மனநலனை பாதிக்கும்.'ஒரு நாளில்  வாய்விட்டு சிரிப்பதுடன், நகைச்சுவை உணர்வுடனும் இருப்பவர்களுக்கு, அன்று இரவு நிம்மதியான உறக்கம் வரும்' என்கிறது ஆய்வு. அதேபோல், எப்போதும் அதிக பதற்றத்துடன் இருப்பவர்களுக்கு, இதயத் துடிப்பும் அதிகமாக இருக்கும் என்பதால், உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.-சோகத்தை, அழுகை அல்லது பிறரிடம் பேசுவதன் மூலம் வெளிப்படுத்தாமல் தேக்கி வைத் தால், உடலுக்குள் அது தேங்கி, மன அழுத்தத்துக்கான ரசாயன மாற்றங்களை அதிகரிக்கும். மன அழுத்தத்துக்கு உள்ளாகும் பலருக்கு உடல் வலி, கழுத்துவலி, சோர்வு ஆகிய அறிகுறி இருக்கும்.'அதிகமாக கோபப்படுபவர்கள், தினமும் சண்டை போடுபவர்கள், அதிகமாக வாக்கு வாதம் செய்பவர்களுக்கு, பொதுவாக, நோய் குணமாவதற்கான திறன், உடலில் குறைவாக இருக்கும்' என, ஆய்வுகளில் கண்டறியப்பட்டுஇருக்கிறது. ஒருவரின் அன்பை உணரும்போது, மகிழ்ச்சிக்கான, 'ஹார்மோன்' உடலில் அதிகரிக்கும். அப்போது, மூளை உள்ளிட்ட பிற உடலுறுப்புகளின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும்; உடலும், மனமும் எப்போதும் விழிப்புணர்வுடனும் இருக்கும்.ஏதோ காரணத்துக்காக தீவிர பயத்துக்கு உள்ளானவர்களுக்கு, உடலில் தானாகவே மன அழுத்தத்துக்கான ஹார்மோனின் உற்பத்தி அதிகரிக்கும். இது, கல்லீரல், இதயம், சிறுநீரகத்தில் தாக்கத்தை வெளிப்படுத்தும். அதனால், அந்தந்த உறுப்புகள் சார்ந்த நோய் ஏற்படவும், ஏற்கனவே இருக்கும் நோய் தீவிரமாகவும் வாய்ப்பு அதிகம்.ஒரு நாளை எடுத்து கொண்டால், அன்று முழுக்க மகிழ்ச்சியாகவோ அல்லது துக்கமாகவோ இருப்போம் என்று கூற முடியாது. காலையில் மகிழ்ச்சியாகவும், மதியம் சோகத்திலும், மாலையில் பயத் திலும் சிக்கி தவிக்கலாம். நேர்மறை உணர்வுகள் மட்டுமன்றி, எதிர்மறை உணர்வுகளும் அவ்வப்போது வந்து போவது, மனித உடலில் அன்றாடம் நடக்கும் சாதாரண நிகழ்வே. ஆனால், எதிர்மறை உணர்வுகளின் அளவு அதிகரித்தாலோ, அவை நீடித்தாலோ தான் பிரச்னைகள் துவங்கும். எனவே, எத்தகைய எதிர் மறை உணர்வுகளையும் நீடிக்கவிட வேண்டாம்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets