உங்கள் வருகைக்கு நன்றி

அறிகுறிகளால் நோய்களை கண்டறியலாம்!

ஞாயிறு, 28 ஜூலை, 2019


நோய் பாதிப்புகளை அறிவிக்கும், அறிகுறிகள் குறித்து கூறும், பொது மருத்துவர், விஷால்: நோய்களை அடையாளம் காட்டும் கண்ணாடி, அறிகுறி. சாதாரண சளித் தொந்தரவில் துவங்கி, புற்று நோய் வரை, பல்வேறு நோய்களுக்கான அறிகுறி, பசியின்மை. எனவே, எந்த நிலையிலும் இதை அலட்சியப்படுத்தக் கூடாது. பொதுவாக, இரைப்பையின் உட்சுவர்களில் அழற்சி உண்டாவதற்கான அறிகுறியாக, பசியின்மை இருக்கும். தைராய்டு, காச நோய் போன்ற பாதிப்புகளுக்கும், இது ஓர் அறிகுறி.காது, சருமம் ஆகியவற்றில் நோய் தொற்று ஏற்பட்டாலோ, சளி அதிகமானாலோ, தாடை வீங்கத் துவங்கும். தாடை எலும்புகளுக்கு கீழும், தொண்டையின் மேற்புறத்திலும் காணப்படும் நிணநீர்க் கணுக்களின் வீக்கமே, அந்த அறிகுறி. ஏதேனும் நோய் தொற்று உடலைத் தாக்க முயன்றால், அதைத் தடுக்கும் வேலைகளை, இவை செய்யும். இறந்த செல்களும், நோய் தொற்றுக்கு காரணமான பாக்டீரியாவும் அந்தப் பகுதியில் சென்று தேங்குவதால், தாடையின் கீழ்ப்பகுதியில் வீக்கம் ஏற்படும்.ஆனால், நாள் முழுவதும் சோர்வாக இருப்பது, சிறிய செயல்களை செய்தால் கூட, சோர்வு ஏற்படுவது போன்றவை, உடல்நிலை பாதிக்கப்படப் போவதை முன்னரே உணர்த்தும் அறிகுறி. ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பது, காச நோய், சர்க்கரை நோய், மன அழுத்தம் ஆகியவற்றுக்கான அறிகுறியாகவும், சோர்வு இருக்கலாம். ஓரிரு நாட்களுக்கு மேல் சோர்வு நீடித்தால், மருத்துவரை அணுகுவது அவசியம். உயர் ரத்த அழுத்தம், மூளையில் கட்டி, மூளை ரத்தக் குழாய்களில் கசிவு போன்ற பிரச்னைகளின் துவக்க நிலையில், தீராத தலைவலி இருக்கும். சாதாரண தலைவலி, சில மணி நேரத்தில் குணமாகி விடும். தொடர்ந்து நீடித்தால், காரணத்தை கண்டறிய வேண்டும்.மாதக் கணக்கில் தொடர் இருமல் இருந்தால், நுரையீரலில் அழற்சி ஏற்படுத்தும் நிமோனியா, காச நோய் போன்றவற்றின் அறிகுறியாக இருக்கக்கூடும். 'இன்ப்ளூயென்ஸா' எனப்படும் சளிக் காய்ச்சல் அல்லது 'ப்ளூ காய்ச்சல்' ஏற்படுவதன், பொதுவான அறிகுறி, உடல்வலி. அப்போது உடல், உற்பத்தி செய்யும், கரிம நைட்ரஜன் சேர்மமும், புரதமும், தசைகளில் வலியை ஏற்படுத்தும். உதாரணமாக, கணினியில் வேலை செய்பவர்களுக்கு கழுத்து வலியும், உட்கார்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு முதுகு வலியும் ஏற்படலாம்.உடலில் நுழைந்திருக்கும் பாக்டீரியா, வைரஸ் கிருமிகளைக் கொல்ல, உடல் தொடுக்கும் யுத்தமே, காய்ச்சல். சூட்டைத் தணிக்க, மருந்து எடுத்துக் கொள்வதை விட, காய்ச்சலுக்கான காரணம் அறிந்து, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

Read more...

நிறைவான வருமானம் கொடுப்பது, முருங்கை மட்டும் தான்.

வெள்ளி, 26 ஜூலை, 2019


குருஷ்' ரக முருங்கையை, இயற்கை முறையில் சாகுபடி செய்து வரும், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த, தர்மலிங்கம்: ஐந்தாம் வகுப்புக்கு மேல் பள்ளிக்கு போகாமல், சிறு வயதிலேயே அப்பாவுடன், வாழைக்காய் வியாபாரம் பார்க்கிறேன். 1982-ல், முருங்கைக்காய் விவசாயத்தை ஆரம்பித்தேன்.ஆரம்பத்தில், யாழ்ப்பாணம் முருங்கையை வைத்து, ரசாயன உரம் போட்டு வந்தேன்.கடந்த, 2008ல், பஞ்சகவ்யா தயாரிப்பு குறித்து புத்தகத்தில் படித்து, அதன்பின், ரசாயன உரங்களை நிறுத்தி, இயற்கைக்கு மாறினேன்.'குருஷ்' வகை முருங்கை ரகங்களை வளர்த்து வருகிறேன். யாழ்ப்பாணம் முருங்கைக்கு அடுத்தபடியாக, பிரபலமான ரகம் இது. இது, எப்படி எங்கள் பகுதிக்கு வந்தது என, தெரியவில்லை.இந்த ரக முருங்கைக்கு, தண்ணீர் அதிகம் தேவைப்படாது. காய்கள் நீளமாகவும், நுனி வளையாமலும் இருக்கும். காய்களைபறித்து, மூன்று நாள் வரை இருப்பு வைக்கலாம்.அதனால், இந்தப் பகுதியில் அதிகமாக, இந்த ரகத்தைத் தான் சாகுபடி செய்கின்றனர். எட்டு ஆண்டுகளுக்கு முன், போலையார்புரம் எனும் கிராமத்திலிருந்து, இந்த ரக முருங்கை குச்சிகளை வாங்கி வந்து நட்டேன்.எனக்கு, 10 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், 6 ஏக்கரில், குருஷ் முருங்கை உள்ளது. 4 ஏக்கரை, முருங்கை சாகுபடிக்காக தயார் செய்து வைத்துள்ளேன். 1 ஏக்கரில்,100 மரங்கள் நடவு செய்யலாம்.இதில் இருந்து ஆண்டுக்கு, 12 டன் வரை மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ முருங்கை, குறைந்தபட்சம், ௭ ரூபாய் முதல், அதிகபட்சம், 80 ரூபாய் வரை விலை போகிறது.மொத்தமாக கணக்கு பார்க்கும் போது, 1 கிலோவுக்கு, 30 ரூபாய்க்கு மேல் விலை கிடைக்கும்.அந்த வகையில், 12 டன் முருங்கை மூலமாக, 3.60 லட்ச ரூபாய் வருமானமும், இதர செலவுபோக, ஆண்டுக்கு, 1 ஏக்கர் முருங்கை மூலமாக, 3.30 லட்ச ரூபாய் லாபம் கிடைக்கிறது.மொத்தம், 6 ஏக்கருக்கும் சேர்த்து, 19.80 லட்ச ரூபாய் லாபம் கிடைக்கும்.முருங்கையில் இவ்வளவு வருமானமா என, கொஞ்சம் மலைப்பாகத் தான் இருக்கும்.உண்மையில், இதை விட அதிக லாபம் எடுக்கிறேன். சரியான முறையில் நடவு, தேவையான சமயத்தில் உரம், பருவத்தில் பராமரிப்பு என, கண்ணும் கருத்துமாக பராமரித்தால், இந்த வருமானம் சாத்தியம் தான்.அதிக பராமரிப்பு இல்லாமல், நிறைவான வருமானம் கொடுப்பது, முருங்கை மட்டும் தான்.தொடர்புக்கு: 9976011750.

Read more...

எலும்புகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை!

புதன், 24 ஜூலை, 2019


எலும்புகள் வலுப்பெற சாப்பிட வேண்டிய உணவுகளை கூறும், டயட்டீஷியன்.: எலும்பு தான், நம் உடலின் ஆதாரம். அதில் பாதிப்பு ஏற்பட்டால், உடலின் மொத்த இயக்கமும் பாதிக்கப்படலாம். எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், குறைபாடு காரணமாக அதில் வரும் பிரச்னைகளை முன்கூட்டியே தடுக்கவும், கால்சியம், மக்னீசியம், புரதம், பாஸ்பரஸ், போலேட், வைட்டமின், 'சி' மற்றும் 'டி' ஆகிய சத்துகள் தேவை. இவற்றில் மிக முக்கியமானவை கால்சியம், வைட்டமின், 'டி' மற்றும் மக்னீசியம் என்பதால், அவை அதிகமாக உள்ள உணவு களை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.பால், தயிர், சீஸ், வெண்ணெய் போன்ற பால் உணவுகளில், கால்சியம் நிறைந்திருக்கும். பால் உணவுகள் சார்ந்த ஒவ்வாமை உள்ளவர்கள், மேற்கூறிய உணவுகளுக்கு பதில் கசகசா, பச்சை நிற காய்கறிகள், கீரை வகைகள், புரொக்கோலி, எள், சியா விதைகள், பாதாம் போன்றவற்றை எடுத்துக் கொண்டால், கால்சியம் சத்து கிடைக்கும்.சூரிய ஒளியில், வைட்டமின், 'டி' சத்து அதிகம் உள்ளது. எனவே, காலை, 6:00 முதல், 9:00 மணி வரையும், மாலை, 4:00 முதல், 6:00 மணி வரையும், உடலில் சூரிய ஒளி படுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். உணவைப் பொறுத்தவரை முட்டை, மீன், மீன் எண்ணெய், காளான் போன்றவற்றை சாப்பிடலாம். கால்சியம் சத்தை முழுமையாகவும், முறையாகவும் உட்கிரகிக்க, வைட்டமின், 'டி' அவசியம். எலும்பு ஆரோக்கியம் மட்டுமன்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இது உதவும்.கீரை வகைகள், சூரியகாந்தி, பூசணி, எலுமிச்சை விதைகள், வால்நட், பாதாம், முந்திரி, பருப்பு வகைகள், சிறு தானியங்கள், கோதுமை, புழுங்கலரிசி, அவகேடோ போன்றவற்றில் மக்னீசியம் இருப்பதால், அவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.ஒவ்வொரு சத்துக்கும் தனித்தனியாக உணவு உட்கொள்வதை விட, கலவை உணவுகளாக சாப்பிடுவது நல்லது.உதாரணமாக, எள் + அடை உடன், ஆரஞ்சு பழம். எள்ளை பொடியாக்கி அடை மீது துாவியோ அல்லது சட்னியாக அரைத்தோ காலை உணவாக சாப்பிடலாம்; கால்சியம் அதிகம் கிடைக்கும்.சிறு தானியத்துடன் கீரையை சேர்த்து, மதிய உணவாக எடுத்துக் கொள்ளலாம். கீரையில் மக்னீசியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைந்திருக்கும்.புரொக்கோலியுடன், பச்சை நிற காய்கறிகள் சேர்த்த சூப்பை, மாலை நேரம் சாப்பிடலாம். புரொக்கோலி, கால்சியம் மற்றும் வைட்டமின், 'சி' நிறைந்தது. பச்சை நிற காய்கறி கள் அனைத்திலும், வைட்டமின், ', கே' மற்றும் போலேட் சத்துகள் நிறைந்துள்ளதால் அவற்றை சாப்பிடலாம்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets