உங்கள் வருகைக்கு நன்றி

அறிகுறிகளால் நோய்களை கண்டறியலாம்!

ஞாயிறு, 28 ஜூலை, 2019


நோய் பாதிப்புகளை அறிவிக்கும், அறிகுறிகள் குறித்து கூறும், பொது மருத்துவர், விஷால்: நோய்களை அடையாளம் காட்டும் கண்ணாடி, அறிகுறி. சாதாரண சளித் தொந்தரவில் துவங்கி, புற்று நோய் வரை, பல்வேறு நோய்களுக்கான அறிகுறி, பசியின்மை. எனவே, எந்த நிலையிலும் இதை அலட்சியப்படுத்தக் கூடாது. பொதுவாக, இரைப்பையின் உட்சுவர்களில் அழற்சி உண்டாவதற்கான அறிகுறியாக, பசியின்மை இருக்கும். தைராய்டு, காச நோய் போன்ற பாதிப்புகளுக்கும், இது ஓர் அறிகுறி.காது, சருமம் ஆகியவற்றில் நோய் தொற்று ஏற்பட்டாலோ, சளி அதிகமானாலோ, தாடை வீங்கத் துவங்கும். தாடை எலும்புகளுக்கு கீழும், தொண்டையின் மேற்புறத்திலும் காணப்படும் நிணநீர்க் கணுக்களின் வீக்கமே, அந்த அறிகுறி. ஏதேனும் நோய் தொற்று உடலைத் தாக்க முயன்றால், அதைத் தடுக்கும் வேலைகளை, இவை செய்யும். இறந்த செல்களும், நோய் தொற்றுக்கு காரணமான பாக்டீரியாவும் அந்தப் பகுதியில் சென்று தேங்குவதால், தாடையின் கீழ்ப்பகுதியில் வீக்கம் ஏற்படும்.ஆனால், நாள் முழுவதும் சோர்வாக இருப்பது, சிறிய செயல்களை செய்தால் கூட, சோர்வு ஏற்படுவது போன்றவை, உடல்நிலை பாதிக்கப்படப் போவதை முன்னரே உணர்த்தும் அறிகுறி. ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பது, காச நோய், சர்க்கரை நோய், மன அழுத்தம் ஆகியவற்றுக்கான அறிகுறியாகவும், சோர்வு இருக்கலாம். ஓரிரு நாட்களுக்கு மேல் சோர்வு நீடித்தால், மருத்துவரை அணுகுவது அவசியம். உயர் ரத்த அழுத்தம், மூளையில் கட்டி, மூளை ரத்தக் குழாய்களில் கசிவு போன்ற பிரச்னைகளின் துவக்க நிலையில், தீராத தலைவலி இருக்கும். சாதாரண தலைவலி, சில மணி நேரத்தில் குணமாகி விடும். தொடர்ந்து நீடித்தால், காரணத்தை கண்டறிய வேண்டும்.மாதக் கணக்கில் தொடர் இருமல் இருந்தால், நுரையீரலில் அழற்சி ஏற்படுத்தும் நிமோனியா, காச நோய் போன்றவற்றின் அறிகுறியாக இருக்கக்கூடும். 'இன்ப்ளூயென்ஸா' எனப்படும் சளிக் காய்ச்சல் அல்லது 'ப்ளூ காய்ச்சல்' ஏற்படுவதன், பொதுவான அறிகுறி, உடல்வலி. அப்போது உடல், உற்பத்தி செய்யும், கரிம நைட்ரஜன் சேர்மமும், புரதமும், தசைகளில் வலியை ஏற்படுத்தும். உதாரணமாக, கணினியில் வேலை செய்பவர்களுக்கு கழுத்து வலியும், உட்கார்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு முதுகு வலியும் ஏற்படலாம்.உடலில் நுழைந்திருக்கும் பாக்டீரியா, வைரஸ் கிருமிகளைக் கொல்ல, உடல் தொடுக்கும் யுத்தமே, காய்ச்சல். சூட்டைத் தணிக்க, மருந்து எடுத்துக் கொள்வதை விட, காய்ச்சலுக்கான காரணம் அறிந்து, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets