உங்கள் வருகைக்கு நன்றி

புதன், 20 மார்ச், 2019


வான்கோழி வளர்ப்பில் வருமானம் ஈட்டி வரும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த, சாலமன்: கல்லுாரி படிப்பை முடித்து, அப்பாவுக்கு ஓய்வு கொடுத்து, 4 ஏக்கரில், நெல், நிலக்கடலை என, சாகுபடி செய்து வந்தேன். அதே நேரத்தில், தரிசு நிலத்தில் நாட்டுக் கோழிகளை வளர்த்து, முட்டைகளை உற்பத்தி செய்ய நினைத்தேன்.அதற்காக, பல பண்ணைகளை பார்த்த போது தான், வான்கோழி பற்றி தெரிந்தது. தமிழகத்தில் அந்தளவு வான்கோழி பண்ணைகள் இல்லாததால், இதில் இறங்க முடிவு செய்தேன். அண்ணனுடன் சேர்ந்து, தரிசு நிலத்தை சீர்ப்படுத்தி, வான்கோழி பண்ணை ஆரம்பித்தோம்.ஆரம்பத்தில், ஒரு மாதமான, 550 வான்கோழி குஞ்சுகளை வாங்கி வந்து வளர்த்தோம். ஒரு மாத குஞ்சுகளை வாங்கினால், இறப்புகள் அதிகமாக இருக்காது. ஐந்தாறு மாதம் வளர்ந்தவுடன், ஆண் வான்கோழிகளை குறிப்பிட்ட அளவில் மட்டும் வைத்து, 300 வான்கோழிகளை விற்பனை செய்தோம். 15 கோழிகள், சண்டை மற்றும் வெப்பம் தாங்காமல் இறந்தன.இப்போது, 200 பெட்டை, 35 ஆண் வான்கோழிகள் உள்ளன. அத்துடன், 35 நிகோபாரி கோழிகளையும் வளர்த்து வருகிறோம்.வான் கோழிகள் எட்டு மாதத்தில், முட்டையிட ஆரம்பிக்கும். 30 மணி நேரத்துக்கு ஒருமுறை என, ஒரு வான்கோழியிலிருந்து, ஆண்டுக்கு, 60 முட்டை கிடைக்கும். இந்த முட்டைகளுக்கு, விற்பனை வாய்ப்பு அதிகம் இருக்கிறது.வான்கோழிகள் பொதுவாக அடை காப்பதில்லை என்பதால், 'இன்குபேட்டர்' கருவியில், முட்டைகளை வைத்து, குஞ்சுகளை வளர்க்க உள்ளோம். இரண்டாம் ஆண்டு கிடைக்கும் முட்டைகளுக்கு, குஞ்சு பொரிப்பு திறன் குறைவாக இருக்கும். எனவே, இந்த தாய்க்கோழிகளை, ஓராண்டு கழித்து, விற்பனை செய்து விடுவோம்.வான் கோழிகளுக்கு, 4 கிலோ சமச்சீர் உணவு கொடுத்தால், 1 கிலோ அதிகரிக்கும் என்பர். அதன்படி, தினமும் காலை, மக்காச்சோளம், தவிடு, அரிசி, கருவாட்டு துாளும்; மதியம், 'கோ-4, கோ5, சூப்பர் நேப்பியர்' மற்றும் அரைக்கீரை, பாலக்கீரை என, பசுந்தீவனங்களை கொடுக்கிறோம். மாலையில் மேய்ச்சலுக்கு அனுப்புவோம்.கொட்டகையில் எப்போதும் தண்ணீர் இருக்கும், தாகம் எடுக்கும் கோழிகள் தேவையான அளவு குடித்துக் கொள்ளும்.இறைச்சி மற்றும் முட்டை வாயிலாக, 2.49 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்தது. இதில், குஞ்சுகள் வாங்கியது, தீவனம், மருத்துவச் செலவு போக, 1.55 லட்ச ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.இப்போது, எங்களிடம் இருக்கும் வான் கோழிகளின் மதிப்பு, கிட்டத்தட்ட, 3 லட்ச ரூபாய்க்கு இருக்கும். இன்னும் ஓராண்டில், இந்த வான்கோழிகள் மூலமாக முட்டைகள் கிடைக்கும். அதெல்லாம் அப்படியே லாபம் தான்.தொடர்புக்கு: 89394 39480

Read more...

'எம்.ஆட்டோ'

ஞாயிறு, 17 மார்ச், 2019


ஆட்டோ ஓட்டும் பெண்கள்!

மக்கள் ஆட்டோ' தலைமை நிர்வாகி, யாஸ்மின்: 2013ல், நிறுவனர் மன்சூர் அலிகான் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, 'நம்ம ஆட்டோ' என்ற பெயரில், ஒரு சேவையை துவக்கினர். 

ஒருசில காரணங்களால், நண்பர்களைப் பிரிந்து, 'மக்கள் ஆட்டோ' என்ற பெயரில், புதிய நிறுவனத்தை துவங்கினார், மன்சூர் அலிகான். தொழில்நுட்பம், மொபைல் உபயோகத்திற்கு ஏற்றது  போல், 'எம்.ஆட்டோ' என, சுருக்கமாக வைத்துள்ளோம்.  எங்களுடைய முக்கிய குறிக்கோள், பெண்களுக்கு அதிகாரம், முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதே. 2014-ல், வாழ்வாதாரமற்ற,
10
பெண்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு பயிற்சி அளித்து, ஆட்டோ ஓட்டுனர் ஆக்கினோம். இன்னும் பல பெண்களைஎம்.ஆட்டோவில்
இணைத்து, அவர்களுக்கு, இந்த, 10 பெண்களை பயிற்சி அளிக்க வைத்தோம். தற்போது, 330 பெண்கள், ஆட்டோ ஓட்டுனராகி உள்ளனர்.
ஆட்டோவை, நாங்கள் வாங்கிக் கொடுப்பதில்லை. பயிற்சி பெற்றவுடன் ஆட்டோ வாங்குவதற்கான நிதி வசதி ஏற்பாடு செய்து, 'ஷ்யூரிட்டி'யும் கொடுத்து வாங்க, உதவி செய்வோம்.  அடுத்த கட்ட திட்டமாக, திருநங்கையருக்கும் பயிற்சி அளித்து ஆட்டோ ஓட்டுனராகவோ, அலுவலக டெலி காலிங் வேலைக்கோ அமர்த்தி, அவர்களுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளோம். வாடிக்கையாளரின்n நம்பிக்கை தன்மையை பெற, 'பானிக் பட்டன்' என்ற வசதியை உருவாக்கி உள்ளோம்.
வாடிக்கையாளர்கள் இந்த பட்டனை அழுத்தினால், உடனே எங்களுக்கு தகவல் வந்துஉங்களுக்கான உதவி செய்யப்படும். இந்த பட்டன், ஆட்டோ மற்றும் மொபைலில் எம்.ஆட்டோ, 'ஆப்' பிலும் இருக் கும்.
பெண்களுக்கு, பெண் டிரைவர் வேண்டுமென்றால், இந்த, 'ஆப்'பில் தேர்வு செய்து கொள்ளலாம். 'ஸ்மார்ட் போன்' இல்லாதவர்களுக்காக, தொலைபேசி மையமும் உள்ளது.  சென்னை, மதுரை, திருச்சியில் இச்சேவை உள்ளது. திருநெல்வேலியில் இப்போது தான் துவங்கி உள்ளோம்.
பெண் ஓட்டுனர்களுக்கென, பாதுகாப்பு நெறிமுறை, தற்காப்பு பயிற்சியும் அளிக்கப்படுகின்றன. ஓட்டுனர்களுக்கு பசி இருக்கக் கூடாது.
அவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும், அரிசியோ அல்லது அவர்களுக்கு தேவையான ஒரு சில பொருட்களையோ அவர்களது நடத்தை, ஈடுபாட்டை பொறுத்து வாங்கித் தருகிறோம். மொபைலில் எம்.ஆட்டோ, 'ஆப்' பிலும் இருக்கும்.

பெண்களுக்கு, பெண் டிரைவர் வேண்டுமென்றால், இந்த, 'ஆப்'பில் தேர்வு செய்து கொள்ளலாம். 'ஸ்மார்ட் போன்' இல்லாதவர்களுக்காக, தொலைபேசி மையமும் உள்ளது. 

சென்னை, மதுரை, திருச்சியில் இச்சேவை உள்ளது. திருநெல்வேலியில் இப்போது தான் துவங்கி உள்ளோம்.
பெண் ஓட்டுனர்களுக்கென, பாதுகாப்பு நெறிமுறை, தற்காப்பு பயிற்சியும் அளிக்கப்படுகின்றன. ஓட்டுனர்களுக்கு பசி இருக்கக் கூடாது.
அவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும், அரிசியோ அல்லது அவர்களுக்கு தேவையான ஒரு சில பொருட்களையோ அவர்களது நடத்தை, ஈடுபாட்டை பொறுத்து வாங்கித் தருகிறோம்.

Read more...

குழந்தையின் அறிவுத்திறன் பல மடங்கு மேம்படும்.

புதன், 13 மார்ச், 2019

குழந்தையின் கை நரம்பு, தசைகளை வலுவாக்கும், 'பைன் மோட்டார் திறன்' பயிற்சி மூளை, கை, கண் மூன்றும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான திறனை அதிகரிக்க, 'பைன் மோட்டார் திறன்' பயிற்சி என்று ஒன்று உண்டு. இதை குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்தினால், கவனிக்கும் திறன் அதிகரிக்கும்; கையெழுத்தும் அழகாகும். ஒன்றரை வயதில் இருந்தே, இப்பயிற்சி தரலாம். வீட்டில் சின்னச் சின்ன பயிற்சிகள் கொடுப்பதன் மூலமே, குழந்தைகளிடம் இத்திறனை அதிகரிக்கலாம். பானை அல்லது பக்கெட்டிலிருந்து கைகளில் தண்ணீர் அள்ளி, அதிகம் சிந்தாமல் அருகிலிருக்கும் வாட்டர் பாட்டில்களில் ஊற்றி நிரப்ப, பயிற்சி வழங்கலாம். இதனால், குழந்தைகளின் கை விரல்கள் வலுப்பெறும்; கவனத்திறனும் அதிகரிக்கும். குழந்தைகளின் உடையில் இருக்கும் பட்டன்களை, அவர்களே போட, பயிற்சி கொடுக்கலாம். முட்டைகளை வைக்கும் பெட்டியில், ஒவ்வொரு குழியிலும் ஒவ்வொரு நிறத்தை பெயின்ட் செய்து, குழந்தைகளிடம் பல நிறங்களில் பந்துகளை கொடுத்து, அந்தந்த நிற குழிகளில் நிரப்ப சொல்லலாம். பந்துகளுக்கு பதில், கூழாங்கற்களில் பெயின்ட் செய்தும் பயன்படுத்தலாம். பல்வேறு நிறமுடைய உருளை வடிவ வற்றல்களை வாங்கி கொடுத்து, நுாலில் கோர்க்கவும், நிறங்களை கற்கும் வயது எனில், குறிப்பிட்ட நிறத்தை சொல்லியும், கோர்க்க சொல்லலாம். இதனால், குழந்தைகள் எந்த பொருளையும் இறுக்கமாக பிடிக்கும் திறனை பெறுவர்; இது, நாளடைவில் அவர்கள் பென்சில், பேனாவை எளிதாக பிடித்து எழுத உதவும். இதுதவிர, நிறங்களையும் நினைவில் கொள்வர். வெவ்வேறு வண்ணங்களை குழந்தைகளின் விரலில் தடவி, ஒரு தாளில், அவர்களின் விரல்களை அச்சு வைக்க சொல்லலாம். 2 வயதுக்கு மேற்பட்டோர் எனில், விரல் அச்சுகளின் மூலம் வெவ்வேறு உருவங்களை உருவாக்க சொல்லலாம். இதனால், அவர்களின் கை தசைகள் வலுவடையும்; கற்பனைத்திறனும் விரியும். சீனா களிமண்ணில், அவர்களுக்கு பிடித்த உருவங்களை செய்ய சொல்லலாம் ஒன்றரை வயதுக்கு பின், 'க்ரேயான்ஸ், சாக்பீஸ்' கொடுத்து, கிறுக்க பழக்க வேண்டும். குழந்தையின் கைகளில், மொபைல் போன் கொடுப்பதை தவிர்த்து, உண்டியலில் சில்லரை நாணயங்களை போட செய்தல், பூப்பறிக்க கற்று கொடுத்தல், போன்ற பயிற்சிகளை, பள்ளியில் சேர்ப்பதற்கு முன் வழங்கினால், அவர்களின் அறிவுத்திறன் பல மடங்கு மேம்படும்.

குழந்தைகள் நல மருத்துவர், பழனிராஜ்:

Read more...

தேர்வு எழுத போறீங்களா?.

வெள்ளி, 1 மார்ச், 2019


இடைவிடாமல் விழுந்து விழுந்து படிக்கும் மாணவர்களை விட, இடையிடையே ஓய்வு எடுத்து படிக்கும் மாணவர்களால் தான், அதிகம் ஞாபகம் வைத்திருக்க முடிகிறது...' என்கின்றனர், ஜப்பான், 'பிசியலாஜிக்கல் சயின்ஸ்' நிறுவன ஆராய்ச்சியாளர்கள்.
* துாக்கம் குறைந்தால், கற்றுக்கொள்ளும் திறன், நோய் எதிர்ப்பு சக்தி, உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறன் போன்ற முக்கிய அம்சங்கள் பாதிக்கப்படும்.

* 'தேர்வு நேரத்தில், விடிய விடிய கண் விழித்து படிப்பது, தேர்வில் எதிர்மறையான பயனை கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது...' என, எச்சரிக்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.

* மாணவர்களே... ஆண்டு இறுதி தேர்வில், சிறப்பான மதிப்பெண் பெற வேண்டுமா? தேர்வு நடைபெறும் வாரத்தில், 'போதுமான நேரம் துாங்கி எழுங்கள்...' என்கின்றனர்.

* தேர்வு சமயங்களில், இரவு, 8:00 மணி நேரம் ஆழ்ந்து துாங்கி எழுந்த மாணவர்கள், தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்றிருப்பது அமெரிக்காவின், 'பேய்லர்' பல்கலை கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

* உடலின் நீர்சத்துக்கும், அறிவாற்றலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக, 'ஜியார்ஜிய இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

* 'உடலில் நீர்ச்சத்து குறைந்தவர்களுக்கு, அடிக்கடி கவனச் சிதறல் ஏற்படுவதால், தேர்வு காலங்களில், தினசரி, தேவையான அளவு தண்ணீர் குடிக்க தவறாதீர். தேர்வுக்கு செல்லும் முன், ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து சென்றால், அது, மூளையில், 'ஆல்பா' அலைகளை அதிகரிக்க செய்து, நினைவாற்றல் குறையாமல் இருக்க உதவுகிறது...' என்கின்றனர்.

* தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற வேண்டுமா... 'காலை உணவை தவிர்க்காதீர்... தேர்வு காலங்களில் எடுத்துக் கொள்ளும் உணவுகள் எளிமையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும்... காலை உணவை தவிர்க்கும் மாணவர்களுக்கு, தேர்வு நேரத்தில், கவனச் சிதறல் ஏற்படும்...' என, கண்டறிந்துள்ளனர், இங்கிலாந்து நாட்டு ஆராய்ச்சியாளர்கள்.

* மேலும் சில குறிப்புகள்: மேலும், 'கீரை வகைகள், 'ஒமேகா - 3' சத்துள்ள பருப்பு வகைகள் சிகப்பு நிற காய்கறிகள், பெர்ரி மற்றும் ஆரஞ்சு பழங்கள் ஆகியவை மூளையை இளமையாக வைக்க உதவுகிறது...' என்கின்றனர்.

* எப்போதும் காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து படிக்கவும். உங்கள் இடப்புறம், மின்விளக்கு இருக்கும்படி அமைப்பது நல்லது. நீங்கள் படிக்கும் இடத்தில், தேர்வு அட்டவணையை கண்ணில் படும்படி ஒட்டி வையுங்கள்

* தொடர்ந்து படிக்காமல், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சற்று அமைதியாக, 10 நிமிடம் கண்களை மூடி, படித்ததை நினைவுபடுத்திய பின், மீண்டும் படிக்க ஆரம்பித்தால், மூளை சுறுசுறுப்பாகும். ஞாபகத்துக்கு வராத பகுதியை மறு வாசிப்பு செய்து, புதிய பகுதிக்கு சென்று படிக்கலாம்

* துாக்கம் வருவது போல் இருந்தால், தோப்புக்கரணம் போட்டால், துாக்கம் போய், மூளை சுறுசுறுப்பாகி விடும். தண்ணீரை சிறிது சிறிதாக பருகுவதால், அதிக சக்தி பெற முடியும் 

* அடிக்கடி மாதிரி தேர்வுகள் எழுதி பயிற்சி பெறுவது, எழுதும் வேகத்தையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும்

* தேர்வு எழுத துவங்கும் முன், கேள்விகளை ஒருமுறைக்கு இருமுறை நன்கு படித்து, எதை எழுத போகிறீர்கள் என்பதை தீர்மானித்து, ஒரு பக்கத்திற்கு, 20 வரிகளாக, அழகான கையெழுத்துடன், தலைப்புகள் கொடுத்து, அடித்தல் திருத்தலின்றி எழுதவும்

* முக்கியமானவற்றிற்கு அடிக்கோடிட்டு, மதிப்பெண்ணுக்கு ஏற்றவாறு தேவையான படங்கள், 'க்ராப்ட்' போன்றவற்றோடு, சரியான கேள்வி எண்ணுடன் எழுதவும்


பெண்களின் உணர்வுகளை புரிந்துக்கொள்வதை விட பெண்களுக்கும் உணர்வுகள் உண்டு என்று புரிபவனே சிறந்தவன் 

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets