உங்கள் வருகைக்கு நன்றி

குழந்தைக்கு தாய்பாலின் முக்கிய பங்கு.

புதன், 11 ஜூலை, 2018


பச்சிளம் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியில், முக்கிய பங்கு வகிப்பது, தாய்ப்பால் தான். பொதுவாக, நிறை மாதத்தில் பிறந்த குழந்தை, ஒரு நாளுக்கு குறைந்தது, 3 - 4 மணி நேரத்துக்கு ஒரு முறை, அம்மாவிடம் பால் அருந்த வேண்டும். குறை மாதத்தில் பிறந்த குழந்தை எனில், இந்த இடைவேளை இரண்டு, மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை என, சற்று குறையும். குடித்த தாய்ப்பால் ஜீரணித்து, தயிர் போல சிறிதளவு வெளியேறினால் பிரச்னை இல்லை. ஆனால், செரிக்க முடியாமல், தாய்ப்பாலை அப்படியே குழந்தை வாந்தி எடுத்தால், உடனே கவனிக்க வேண்டும். வாந்தி, பச்சை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது ஆபத்தின் அறிகுறி.பிறந்த, 10 - 15 நாட்கள் வரை, குழந்தையின் எடை, 10 - 15 சதவீதம் குறையும். அதன்பின், குழந்தை தினமும், 15 - 20 கிராம் வரை எடை கூடும்; இந்த அளவு, குழந்தைக்கு குழந்தை வேறுபடும். பிறந்த குழந்தையின் தலையில், இரண்டு குழிகள் இருக்கும். ஒன்று, உச்சிக்குழி. இரண்டாவது தலையின் பின் பக்கத்தில் இருக்கும். முன் குழி சிறிது சிறிதாக மூட, 18 மாதமும், பின் குழி, 9 - 12 மாதங்களில் மூடிவிடும்.குழந்தையின் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், முன் குழியானது ஆழ்ந்து காணப்படும். மூளைக்குள் நீர் அதிகமாக இருந்தால், குழிப்பகுதியில் கை வைத்து பார்த்தால், லேசான வீக்கம் தெரியும். அந்த காலப் பாட்டிகள் சிலர், குழந்தைக்கு தலைக்கு குளிப்பாட்டிய பின், உச்சிக்குழியில் ஈரம் போக, அந்த இடத்தில் விபூதி அல்லது முகத்துக்கு உபயோகிக்கும் பவுடரை வைப்பர். இவற்றையெல்லாம் செய்யக் கூடாது. குழந்தையின் உச்சிப் பகுதியில் இயல்பாகவே உஷ்ணம் அதிகமாக இருக்கும். அதனால் ஈரம் இருந்தாலும், தானாகவே காய்ந்து விடும்.குழந்தையின் வயிற்று வலியை, 'கிரைப் வாட்டர்' நீக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை. 1800களில் மலேரியாவை குணப்படுத்த கண்டறியப்பட்ட மருந்து தான், கிரைப் வாட்டர். அது வயிற்று வலியை சரி செய்வதாக யாரோ கூற, அதனுடன் ஆல்கஹாலை கலந்து விற்க ஆரம்பித்து விட்டனர். அதனால் தான், கிரைப் வாட்டர் குடித்த குழந்தைகள், ஆழ்ந்து துாங்குகின்றனர். தாயின் கதகதப்பு தேவைப்பட்டாலும், டயாப்பரில், சிறுநீர், மலம் தங்கினாலும், குழந்தைகள் சிணுங்குவர். இவை தவிர, அதிகமான ஓசை, சொர சொரப்பான டிரஸ், பெர்ப்யூம், பவுடர் வாசனை கூட, குழந்தையை அழ வைக்கலாம்.குழந்தையின் முகத்தில், பவுடர் போடவே கூடாது. உலர்வு தன்மைக்காகவும், மூத்திர வாடையை தவிர்ப்பதற்காகவும் மட்டும், தொடை பகுதிகளில் போடலாம். அதையும் கைகளால் தொட்டு தடவ வேண்டும்; 'பப்' பயன்படுத்த வேண்டாம். இரும்புச் சத்துக்கான சொட்டு மருந்து, வைட்டமின் சொட்டு மருந்துகளை, டாக்டர் கூறினால் மட்டுமே கொடுக்கலாம்.

Read more...

குழந்தைகளின் ஒரு வயதிலிருந்தே

சனி, 7 ஜூலை, 2018


குழந்தைகளின் ஒரு வயதிலிருந்தே, விளையாட்டுப் பொருள்களை, விளையாடி முடித்த பின்னர் மீண்டும் எடுத்து வைக்கப் பழக்குங்கள். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கக் கற்றுக்கொடுங்கள். இதனால் பொறுப்பு உணர்வும் நேர மேலாண்மையும் அவர்களுக்குக் கைகூடும்.குழந்தைகளின் ஆறு, ஏழு மாதங்களில் இருந்தே, தின்பண்டங்கள், பொம்மைகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பழக்கத்தைச் சொல்லிக்கொடுங்கள். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, ஸ்நாக்ஸ் பாக்ஸில் எக்ஸ்ட்ரா இரண்டு பிஸ்கட்கள், சாக்லேட்கள் வைத்துவிட்டு, 'உன் பிரெண்டு யாராச்சும் கேட்டா ஷேர் பண்ணு' என்று சொல்லி அனுப்புங்கள். எதிர்காலத்தில் உங்கள் குழந்தை தலைமைப்பண்புடன் விளங்க, இந்தச் சிறு தொடக்கம் நிச்சயம் கைகொடுக்கும்.மூன்று வயதுக்குப் பிறகு, குழந்தைகளுக்குப் பணத்தின் மதிப்பைச் சொல்லிக்கொடுங்கள். தினமும் அவர்களுக்கு பாக்கெட் மணி கொடுத்து உண்டியலில் சேமிக்கச் சொல்லலாம். அவர்களின் அத்தியாவசியத் தேவைக்கு, பெற்றோர் அனுமதியுடன் அவர்களுடைய சேமிப்புப் பணத்தை எடுத்தே செலவு செய்ய அனுமதிக்கலாம். பணத்தின் மதிப்பை உணர்வதால், பார்க்கும் பொருள்களையெல்லாம் அடம்பிடித்துக் கேட்டு வாங்கித் தரச் சொல்லும் பழக்கம் அவர்களை அண்டாது.குழந்தைகளுக்கு இரண்டு வயதிலிருந்தே புத்தகங்களை நண்பர்களாக்குவது அவசியம். அவர்களின் வயதுக்கும் ஆர்வத்துக்கும் ஏற்ற புத்தகங்களை வாங்கிக் கொடுக்க, ஒரு குட்டி ஜீனியஸ் உருவாக ஆரம்பிப்பான்/ஆரம்பிப்பாள்.இரண்டு வயதுக்குள், அவர்களுக்கு டாய்லெட் ட்ரெய்னிங் கொடுத்திருக்க வேண்டும். சாப்பிடும் முன், விளையாடிய பின் கைகளைக் கழுவுவது, இரு வேளை பல் துலக்குவது மற்றும் குளிப்பது என்று ஆரோக்கிய விஷயங்களையும் வளர வளரக் கற்றுக் கொடுங்கள்.● 10 வயதுக் குழந்தைகளுக்கு, 'ஓர் இடத்திலோ அல்லது யாரிடமோ பேசும்போது, நீ மட்டுமே பேசாமல், மற்றவர்கள் சொல்வதையும் உள்வாங்க வேண்டும்' என்று வலியுறுத்துங்கள். அதேபோல, குழந்தைக்கு அதுவரை தெரியாத ஒரு விஷயம் பற்றிய பேச்சு வந்தால், 'அதெல்லாம் எனக்குத் தெரியாது' என்று ஒதுங்காமல், புதிய விஷயங்களைக் கவனித்துக் கேட்க அறிவுறுத்துங்கள்.உணவு உண்ணும்போது சிந்தாமல், மிச்சம் வைத்து வீணாக்காமல் இருக்கப் பழக்கப்படுத்துங்கள். பொது இடங்களில் சாப்பிடும்போது ஸ்பூன், போர்க், டவல் பயன்படுத்தும்போது கடைப்பிடிக்க வேண்டிய 'டேபிள் நாகரிகம்' பற்றிக் கற்றுக்கொடுங்கள்.
மற்றவர்களுக்கு உதவும் பழக்கத்தைக் குழந்தைகளிடம் விதையுங்கள். அழகு, அறிவு, பொருளாதாரம் என எதன் அடிப்படையிலும் அடுத்தவர்களின் மனது புண்படும்படி அவர்களைத் தாழ்த்திப் பேசுவது தவறு என்பதைச் சொல்லிக்கொடுப்பதன் மூலம், உங்கள் குழந்தையை மனித நேயத்துடன் வளர்த்தெடுக்கலாம்.

Read more...

வெளிநாடுகளுக்கு முருங்கை இலையை ஏற்றுமதி

புதன், 4 ஜூலை, 2018


வெளிநாடுகளுக்கு முருங்கை இலையை ஏற்றுமதி செய்து வரும், திருநெல்வேலி மாவட்டம், கடகுளம் கிராமத்தை சேர்ந்த டெல்சன்: 5 ஏக்கர் நிலத்தில், இயற்கை முறையில் முருங்கை போட்டுள்ளேன். இயற்கை விவசாயம் செய்யும், 30 ஏக்கர் முருங்கைத் தோட்டங்களை, கடந்தாண்டு குத்தகை எடுத்து, கீரை பறித்தோம். இந்தாண்டு, குத்தகையின்றி, அதே தோட்டங்களில் இருந்து, 1 கிலோ கீரை, 15 ரூபாய்க்கு வாங்கிக் கொள்கிறேன்.

ஒரு ஈர்க்கு முருங்கை இலையை பறித்து, ஒரு மணி நேரம் வைத்து, வேகமாக ஆட்டிப் பார்த்தால், இலை உதிரக்கூடாது. பறித்த இலைகளை தண்ணீர் தெளித்து, பாலித்தீன் கவரில் வைத்து, ஐஸ் பாக்சில், 24 மணி நேரம் வைப்போம். அப்போதும் இலைகள் வாடாமல், உதிராமல் இருக்க வேண்டும்.செடி முருங்கை கீரைகள், ஏற்றுமதிக்கு ஏற்றதல்ல; மர முருங்கை கீரை தான் பறிப்போம். பறித்த கீரைகளை பருத்தி துணியில் கட்டி, 'பேக்கிங்' கூடம் எடுத்து வருவோம். தார்பாலின் ஷீட்டில், தண்ணீர் தெளித்து கீரைகளை, அரை அடி உயரத்துக்கு அடுக்கி, லேசாக தண்ணீர் தெளிப்போம்.

அதன்பின், காய்ந்த மற்றும் பழுப்பு இலை, பூக்களை நீக்கி, 150 கிராம் அளவு, பாலித்தீன் கவருக்குள் வைத்து, ரப்பர் பேண்டு போடுவோம். அடுத்து, 65 லிட்டர் கொள்ளளவு கொண்ட தெர்மாகோல் பெட்டிகளில், மூன்று ஐஸ் கட்டிகளை வைத்து, அதன் மேல் தண்ணீர் உறிஞ்சாத பேப்பரை விரித்து, 25 கீரை பாக்கெட்டுகளை அடுக்குவோம். அதன் மேல் ஐஸ் கட்டி, 25 கீரை கட்டு, மூன்றாவது அடுக்காக, 10 கீரை கட்டு என, மேலேயும் ஐஸ் கட்டி வைத்து, ஒரு பெட்டியில், 60 கட்டு கீரை அடுக்குவோம்.
மாதத்தில், 10 நாட்கள் துபாய், எட்டு நாள் கத்தார், ஐந்து நாள் ஓமன், இரண்டு நாள், லண்டன் என, தினமும், 400 கிலோ முருங்கைக் கீரையை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறேன். இவ்வாறு, 25 நாட்களில், 10 ஆயிரம் கிலோ முருங்கைக் கீரை ஏற்றுமதி வாயிலாக, நான்கு லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
கீரை கொள்முதல், பறிப்பு, பேக்கிங் கூலி, வேன் வாடகை, விமான கட்டணம், தெர்மாகோல் பெட்டி, ஐஸ்கட்டி, மின் கட்டணம் அனைத்தும் சேர்த்து, 2.70 லட்சம் ரூபாய் செலவு போக, மாதம், 1.30 லட்சம் ரூபாய் வரை, லாபம் கிடைக்கிறது.
ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, கேரள மாநிலம், கொச்சின் பேக் ஹவுசுக்கு போய், சுங்கத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டியுள்ளது. இதனால், போக்குவரத்து நேரம், செலவு அதிகமாகிறது. 
தமிழகத்தின் விமான நிலைய பகுதிகளில், பேக் ஹவுசை கொண்டு வந்தால், ஏற்றுமதியாளர்களுக்கு வசதியாக இருக்கும்; ஏற்றுமதியை அதிகப்படுத்தவும் முடியும். அந்த வசதி கிடைத்தால், நானே, 100 பேருக்கு வேலை கொடுக்க முடியும். அந்தளவு முருங்கைக்கீரைக்கு தேவையுள்ளது.

தொடர்புக்கு: 90806 60084.

Read more...

நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பதால்,


முதுகில் உள்ள தசைகளுக்கு இயக்கம் இல்லாமல் போகிறது. ஆகையால், முதுகில் உள்ள தசைகள் செயல் இழந்து, இறுக்கமற்றதாக மாறிவிடுகிறது. இதனால், முதுகுத்தண்டு மற்றும் தண்டுவடத்தில் வளைவு ஏற்படு கிறது. முதுகில் உள்ள நரம்பு சேதம் அடைவதால், கால்களுக்கு செல்லும் நரம்பில் பிரச்னை ஏற்பட்டு, மூட்டு வலி, கண்டைச்சதை வலி, தொடை வலி ஏற்படும்.இப்படி நீண்ட நேரம் அமர்ந்து இருப்பதால், தோலோடு ஒட்டியிருக்கக் கூடிய தசைகள் தளர்வதால், 'யூரிட்டர்' எனக்கூடிய சிறுநீர்ப்பைக்கு, சிறுநீரை அனுப்பக்கூடிய குழாய், நேராக இல்லாமல் வளைய ஆரம்பிக்கும். இதனால், சிறுநீரகப் பிரச்னை, சிறுநீர்க்கல் போன்றவை ஏற்படும். மேலும், 30 வயதுக்குக் கீழ் உள்ள இளைஞர்களுக்கு, வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை உண்டாக்குகிறது. இளம்பெண்கள் எனில், கருப்பையில் உள்ள குழாய்களுக்கு, ரத்தம் செல்வதில் தடை ஏற்படுகிறது.இதுதவிர, மன மகிழ்ச்சியை தரக்கூடிய, 'எண்டார்பின்' என்ற ஹார்மோன் சுரப்பு குறைகிறது. இதனால், இளம் வயதிலேயே முதுமையுடன், பல நோய்களும் வந்து விடுகின்றன. ஒரு நாளைக்கு ஒவ்வொருவரும், ஆறு முறையாவது சிறுநீர் கழிக்க வேண்டும். சிறுநீர்ப் பையின் கொள்ள ளவான, 300 - 600 மி.லி., அளவுக்கு, நீர் சிறுநீர் பையை அடையும் அளவுக்கு டீ, காபி, ஜூஸ் அல்லது நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கச் செல்லும் முன், குறைந்தது, 50 முறையாவது நின்ற இடத்தில் இருந்து குதிக்க வேண்டும். இது, சிறுநீர் பையை சீராக செயல்பட வைப்ப துடன், தசைகளையும் வலுப்படுத்தும், சிறுநீரை, சிறுநீர் பைக்கு கொண்டு வரும் குழாயும் நேராகும். மேலும், இவ்வாறு அதிக நேரம் அமர்ந்து இருப்போருக்கு, உடலில் உள்ள கழிவுகள் சரிவர வெளியேறாமல் உடலில் ஆங்காங்கே தங்கியிருக்கும். அதை அகற்றவும் இந்த முறை உதவுகிறது. அலுவலகத்தில் உள்ளோர் கழிவறைக்கு வெளியில் உள்ள இடத்தில் கூட, இதை செய்யலாம்.இதுதவிர, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து நடப்பதுடன், 'ஸ்கிப்பிங்' செய்வது போன்று குதிக்கவும். இப்படி செய்வதால், வேலைப்பளுவில் இருந்து மனம் விடுபடும். உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி தரும். குதிக்க முடியாத சூழலில் இருப்போர், உதைப்பது போல் கால்களை ஆட்ட வேண்டும். கைகளை ஆட்ட வேண்டும். மணிக்கட்டை சுழற்றலாம். இதன் மூலம், 'எண்டார்பின்' ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கலாம்; இது, உடலுக்கு வரும் கெடுதலைப் போக்கும்.நீண்ட நேரம் அமர்ந்து இருப்பதால், உடல் உழைப்பு குறைவாக இருக்கும் என்பதால், குறைந்த அளவு கொழுப்புள்ள உணவு சாப்பிடலாம். நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால், உடலில் உள்ள கழிவை அகற்றுவதோடு, சிறுநீரகப் பிரச்னைகளில் இருந்து காக்கும்.


Read more...

சென்னை பல்கலை, தனியார் கல்லுாரிகளில் இலவச கல்வி வழங்கப்படுகிறது.

பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, சென்னை பல்கலை சார்பில்தனியார் கல்லுாரிகளில் இலவச கல்வி வழங்கப்படுகிறது. இந்த திட்டம், மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெறும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும், அவர்களின் குடும்பத்துக்கும் வழிகாட்டும் வகையில், சென்னை பல்கலை நடத்தும், இலவச மாணவர் சேர்க்கை, எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.பல்கலையின் பெரும் முயற்சியால், 80க்கும் மேற்பட்ட முன்னணி
கல்லுாரிகள், இலவச கல்வி திட்டத்தில் மாணவர்களை சேர்க்க முன்
வந்துள்ளன.சென்னை பல்கலையின் துணைவேந்தர் துரைசாமி, பதிவாளர் சீனிவாசன் மேற்பார்வையில், பேராசிரியர் ஜோதி சிவஞானம் தலைமையிலான இலவச மாணவர் சேர்க்கை கமிட்டியினர், இலவச திட்டத்துக்கு மாணவர்களை தேர்வு செய்கின்றனர். இந்த திட்டத்தில், 2017ம் ஆண்டில், 200 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டு, 600 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு, ஜூன், 29 முதல், சென்னை பல்கலையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, மாணவர் தேர்வு நடந்து வருகிறது. நேர்முகத் தேர்வு முடிந்து, இந்த வார இறுதியில் இலவச கல்விக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், மூன்று ஆண்டுகளும், கல்விக் கட்டணம் செலுத்த தேவை இல்லை. கட்டண சுமையை, அவர்கள் படிக்கும் அந்தந்த தனியார் கல்லுாரிகளே ஏற்றுக்கொள்கின்றன.மற்ற பல்கலைகளும், இந்த திட்டத்தை, தங்கள்இணைப்பு கல்லுாரிகளில் செயல்படுத்தினால், மாநிலம் முழுவதும், பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெறும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், தரமான உயர் கல்வியை இலவசமாக பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டணம் திரும்ப கிடைக்கும் : இலவசக் கல்வி திட்டத்தில், லயோலா கல்லுாரி, ஸ்டெல்லா மேரீஸ், விவேகானந்தா, எத்திராஜ், டி.ஜி.வைஷ்ணவா, குருநானக், ஏ.எம்.ஜெயின் என, முன்னணி கல்லுாரிகளில், பி.காம்., - பி.எஸ்சி., என, முன்னணி படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த திட்டத்தில் தேர்வாகும் மாணவர், ஏற்கனவே ஒரு கல்லுாரியில், ஒரு பாடப்பிரிவில் சேர்ந்திருந்தால், அவர் இலவச கல்வி திட்டத்தில் தேர்வாகும் போது, அந்த கல்லுாரி இடத்தைவிரும்பினால் அவருக்கு ஒதுக்கப்படும். அந்தகல்லுாரியில், அவர் செலுத்திய கட்டணமும் திரும்ப வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

'வெளிப்படைத்தன்மை' : இலவசக் கல்வி திட்டத்தில், மிக வெளிப்படைத் தன்மையுடன், எந்த சிபாரிசுக்கும் இடமின்றி, மாணவர்களை தேர்வு செய்கிறோம். அதனால், இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாங்கள் நிர்ணயித்துள்ள தகுதிக்கு உரியவர்களே, பெரும்பாலும் விண்ணப்பிக்கின்றனர். மற்ற வசதியுள்ள மாணவர்கள், தாங்களாகவே விண்ணப்பிப்பதில்லை. இந்த திட்டத்தின் வெற்றிக்கு அதுவும் முக்கிய காரணம்

துரைசாமி, துணைவேந்தர், சென்னை பல்கலைக்கழகம்

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets