உங்கள் வருகைக்கு நன்றி

தமிழக அரசின் புத்தாண்டு பரிசு !.

செவ்வாய், 31 டிசம்பர், 2013

பொதுமக்கள் தாங்கள் இருப்பிடத்தில் இருந்தே, மருத்துவ ஆலோசனை பெறும் வகையில், புதிய மருத்துவ சேவை திட்டம், '104' என்ற போன் இணைப்பு எண்ணில், துவக்கப்பட்டுள்ளது. இதில், 104 என்ற இந்த போன் எண்ணில் தொடர்பு கொண்டால், டாக்டர்கள் குழு, தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கும். தமிழகத்தில், அவசர கால, ஆம்புலன்ஸ் வசதிக்கு, '108' என்ற போன் எண்ணில் தகவல் தெரிவித்தால், உடனடியாக, ஆம்புலன்ஸ் வாகனம் வீடு வந்து சேரும். இந்தச் சேவைக்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, '104' என்ற போன் எண்ணில் தொடர்பு கொண்டால், முதலுதவி சிகிச்சை, மருத்துவ ஆலோசனைகள் தரும் புதிய சேவைத் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, புத்தாண்டு பரிசாக, இச்சேவையை துவக்கியுள்ளது. இதற்காக, ஆண்டுக்கு, 1.2 கோடி ரூபாய் அரசு நிதி அளிக்கிறது. இத்திட்டமும், அவசர கால, '108' ஆம்புலன்ஸ் திட்டத்தை, செயல்படுத்தும், 'ஜிவிகே' நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள், '104' என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, உடல்நல பாதிப்பு குறித்து தெரிவித்தால், நோயின் தன்மைக்கேற்ப, டாக்டர்கள் மருத்துவ ஆலோசனை தருவர். முதலுதவி ஆலோசனை மட்டுமின்றி, எந்த மாதிரியான மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும், தெரிவிப்பர். கர்ப்ப கால பிரச்னைகள், மாதவிடாய், மார்பக புற்றுநோய் குறி?த்து பெண்கள் பேசினால், விளக்கம் அளிக்க, பெண் டாக்டர்களும் உள்ளனர். மன அழுத்தம், மன சிதைவால் தற்கொலை முயற்சிக்கு செல்வோர், '104' போன் எண்ணை டயல் செய்தால், 'கவுன்சிலிங்' தரப்படும்.

Read more...

டீன்-ஏஜ் பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்?

சனி, 21 டிசம்பர், 2013


டீன்-ஏஜ் பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்? உங்கள் குழந்தைகள் நீங்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பதில்லையா? நீங்கள் கோபப்பட்டால், உங்களை விட அவர்கள் அதிக டென்ஷன் ஆகின்றனரா? இந்த பிரச்சனையை சமாளிக்க சில எளிய வழிமுறைகள்... 

* உங்கள் குழந்தை பிறந்த போது, அதன் மீது எவ்வளவு அக்கறையும், பாசமும் காட்டினீர்களோ, அதே அளவு, இந்த பருவத்திலும் காட்ட வேண்டும். இது, அவர்களின் முக்கியமான பருவம். நல்லது எது, கெட்டது எது என்று தெரியாமல் அவர்கள் தங்களுக்குள்ளாக குழம்பி தவிக்கும் பருவம் இந்த டீன் ஏஜ்.. இந்த வயதில் அவர்களுடன் அன்பாக இருப்பது மட்டுமின்றி, தோழமையுடனும் பழகுங்கள். அப்போது தான், அவர்களது வீண் பயம், குழப்பம் போன்றவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள முன்வருவர். ஏனெனில், இது, மன உளைச்சலுடனும், சோர்வுடனும் காணப்படும் பருவம். 


* உங்கள் பிள்ளைகள், நீங்கள் கூறுவதுபடி தான் செய்ய வேண்டும் என்று அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள். உதாரணமாக, "இந்த உணவை தான் நீ சாப்பிட வேண்டும், இன்றைக்கு இந்த டிரஸ் தான் போட்டுக் கொள்ள வேண்டும்` என்பது போன்ற, அவர்களது சிறு சிறு விஷயங்களில் நீங்கள் தலையிடாதீர்கள். அவர்கள் உணர்ச்சிகளுக்கும், விருப்பங்களுக்கும் இடம் கொடுங்கள். இதற்கு, முதலில் நீங்கள் உங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும். 


* இந்த டீன் ஏஜ் பருவத்தில் உள்ள அனைவருமே பொதுவாக, தங்கள் அழகு குறித்து கவலைப்படுவர். அதிலும், பெண்களை கேட்கவே வேண்டாம். எனவே, கண்ணாடி முன் நிற்கும் உங்கள் பெண்ணை, அனாவசியமாக திட்டாதீர்கள். சந்தேகக் கண் கொண்டு அவர்களைப் பார்க்காதீர்கள். இப்படி நீங்கள் நடந்து கொள்ளும் போது, அது அவர்களை எதிர்மறையாக சிந்திக்கத் தூண்டும். எனவே, உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள். 


* குழந்தைகளின் மன நிலையை புரிந்து கொள்ளுங்கள். முடிந்த வரை அவர்களிடம் அன்பாக இருங்கள். டீன் ஏஜ் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளிடம், கோபப்பட்டு உங்களால் எதையும் சாதிக்க முடியாது. அன்பால் மட்டுமே அவர்களை திருத்த முடியும். நீங்கள் கோபப்பட்டால், அவர்கள் டென்ஷன் ஆவர். உதாரணத்திற்கு, அவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால், அவர்களை வாய்க்கு வந்தபடி திட்டுவதை நிறுத்துங்கள். இப்படி செய்வதால், அவர்களுக்கு, உங்கள் மீது மட்டுமின்றி, படிப்பின் மீதும் வெறுப்பு வரும். எனவே, நீங்கள் அவர்கள் படிப்பிற்காக ஆகும் செலவு பற்றியும், படிப்பின் அவசியத்தைப் பற்றியும் அன்பாக எடுத்துக் கூறுங்கள். 


* உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையை அவர்கள் அறியாதவாறு கண்காணியுங்கள். சிலர், இந்த பருவத்தின் போது, சரியாக சாப்பிட மாட்டார்கள், தூங்க மாட்டார்கள். இது, டீன்-ஏஜ் வயதுள்ள அனைவரிடமும் காணப்படும் பொதுவான விஷயம். இதுகுறித்து, நீங்கள் கவலைப்பட வேண்டாம். என்றாலும், பிரச்னை அளவுக்கு அதிகமாக போகும் போது, மருத்துவரை அணுகுவது நல்லது.

Read more...

பெண்களுக்கு கால் வலி ஏன் வருகிறது?


பழங்காலத்தில் பெண்கள் அடுக்களையில் கீழே உட்கார்ந்து சமைப்பார்கள். ஆகையால் பழங்காலத்து பெண்களுக்கு இப்ப உள்ள பெண்கள் போல் இடுப்பு வலியோ கால் வலியோ கிடையாது.

ஆனால் இப்போது இருக்கிற மார்டன் உலகில் நின்று கொண்டு தான் சமைக்கிறோம். அந்த காலத்தில் ஆட்டுரல், அம்மி, கினற்றில் நீர் இறைப்பது போன்ற வேலைகளை செய்வதால் உடற்பயிற்சி என்பது அதிலேயே எல்லாம் கிடைத்து விடுகிறது.

இந்த காலத்தில் துவைக்க, அரைக்க, சாமான் கழுவ என்று எல்லாவற்றிற்கும் மிஷின் வந்து விட்டது. இப்படி மிஷின் இருந்தும் சிலருக்கு அதில் இருந்து எடுத்து காய போட சோம்பேறி தனமாக இருக்கிறது.

சமையலறையிலேயே இரண்டு மணி நேரமானலும் நின்று கொண்டு சமைக்கிறோம். சில‌ பேர் தான் கிச்ச‌னில் சேர் போட்டு கொண்டு கொஞ்ச‌ம் நேர‌த்திற்கொருமுறை உட்கார்ந்து கொள்வார்க‌ள். ஆனால் வேலைக்கு போகும் பெண்க‌ள், அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மா ச‌மைப்ப‌தால் அவ‌ர்க‌ளுக்கு நேர‌ம் இருக்காது.

வேலை பிஸியில் பெண்கள் காலையில் சாப்பிடும் டீ, டிபன் கூட மறந்து விடுகிறார்கள். இப்போது நிறைய பெண்களுக்கு சின்ன வயதிலேயே முதுகுவலி கால் வலி இடுப்புவலி, என்று வந்து விடுகிறது.

தகுந்த உடற்பயிற்சியின் மூலம் இது போன்ற வலிகளை தவிர்த்து கொள்ளலாம். முடிந்தவர்கள், நான்கு முறை மாடிப்படி ஏறி இரங்கலாம். ஸ்கிப்பிங் ஆடலாம். நீந்துதல் உடற்பயிற்சி செய்யலாம். நீந்துதல் உடற்பயிற்சி மூலம் அதிகப்படியான முதுகுவலி, இடுப்புவலி ,கால் வலி கூட சரியாகும். மன அழுத்தத்தையும் குறைக்கலாம். முடிந்த அளவு நடைபயிற்சி செய்யுங்கள். தினம் ஒருமணி நேரம் நடப்பதன் மூலம் சர்க்கரை வியாதி பிரஷரை கூட கட்டுபடுத்தலாம்.

Read more...

இல்லறம் நல்லறமாவது இல்லத்தரசிகளின் கையில் மட்டுமல்ல வாழ்க்கைத் துணைவனின் மனோபாவத்திலும் உள்ளது.

வெள்ளி, 20 டிசம்பர், 2013

பெண்கள் அலுவலகத்திலும், வீட்டிலும் படும் அவஸ்தைகள் ஏராளம். அதையும் தாண்டி பெண்கள் ஒரு பக்கம் அனைத்து துறைகளிலும் சாதித்து கொண்டு இருந்தாலும் மறு பக்கம் குடும்பத்தில் பிரச்சனைகளை எதிகொண்டு தான் இருக்கிறார்கள். பெண்களுக்கு கோபம் தான் வருகிறது. 

இதை வெளியில் காட்டினால் இவர்களுக்காக நாம் படுகின்ற இந்த அனைத்துக் கஷ்டங்களும் வீணாகி விடும். வேலைக்காரி வைத்துக் கொண்டோ அல்லது கணவன் குழந்தைகளுக்குத் தன்னிலை விளக்கித் தன்னுடன் ஒத்துழைக்குமாறு செய்வதன் மூலமாகவோ, நமது அலுவலகப் பணி, இல்லறம் என்ற இரட்டை குதிரைச் சவாரியை மிக லாவகமாகச் செய்ய முடியும். 

எல்லா வேலையும் நாம் தான் செய்ய வேண்டும் என்று இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து, பிறகு எரிச்சல் அடைந்து, குடும்பத்தில் மற்றவர்கள் சந்தோஷத்தையும் கெடுத்துக் கொள்வதை விட வேலைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால், அமைதியும் மகிழ்ச்சியும் தொடரும். 

இல்லறம் நல்லறமாவது இல்லத்தரசிகளின் கையில் மட்டுமல்ல வாழ்க்கைத் துணைவனின் மனோபாவத்திலும் உள்ளது. மனோபாவத்தை கணவனிடத்தில் கொண்டு வருவது கடினம். ஆண்களுக்கு அவரவர் வேலையே பெரிது. 

பெண்கள் சற்று ஆயாசமாக அவர்கள் அலுவலகத்தில் நடைபெறுவதை தெரிவித்தால் கூட, அது சுவாரசியமாக இருந்தால் கூட கணவன்மார்களுக்கு எரிச்சல் ஏற்பட்டு "போதும்மா உன் ஆபீஸ் புராணம்" என்று முடித்து வைப்பதைத்தான் நாம் பார்க்கிறோம். ஆனால் கணவனுக்கு ஒரு கஷ்டம் அலுவலகத்தில் ஏற்பட்டது என்றால் அவனது புலம்பல் அத்தனையும் மனைவி கேட்க வேண்டிய கட்டாயம்! 

இந்த முரண்பாடுகளைப் போக்குவது எப்படி. சும்மா விட்டுக் கொடுத்து போவது என்பதெல்லாம் பொய். ஏனெனில் விட்டுக் கொடுக்கும் பொறுப்பு எப்போதும் பெண்கள் தலையிலேயே விழுகிறது. ஆண்கள் தங்கள் வேலை தங்கள் சம்பளம் தங்கள் நண்பர்கள், தங்கள் பொழுது போக்கு என்று சுயநலமிகளாக இருப்பதைத் தவிர்த்தால் இல்லத்தரசிகளை ஹிஸ்டீரியா' மன நோயிலிருந்து காப்பற்றலாம்!

Read more...

விளையாட்டு விபரீதமானது

வெள்ளி, 13 டிசம்பர், 2013

பெரம்பூர் அடுத்த புளியந்தோப்பு நாகாத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (37). ரிக்ஷா ஓட்டி வருகிறார். இவரது மகன் சஞ்சய் (11), அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று விடுமுறை என்பதால் அதே பகுதியில் உள்ள சுந்தரம் 1-வது தெருவில் வசிக்கும் அத்தை சுதா வீட்டுக்கு சென்றான். சுதாவுக்கு குழந்தைகள் உள்ளனர். அவர்களுடன் சஞ்சய் விளையாடிக் கொண்டிருந்தான்.

கதவில் இருந்து ஸ்கிரீன் துணியை எடுத்துகழுத்தில் சுற்றிக் கொண்டு குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டினான் சஞ்சய். அப்போதுஎதிர்பாராதவிதமாக துணி கழுத்தை இறுக்கமாக சுற்றிக் கொண்டது. மூச்சுவிட முடியாமல் சிறுவன் தவித்தான். வெளியே சென்றிருந்த சுதாஅந்த நேரத்தில் வீடு திரும்பினார். சஞ்சய் சுயநினைவின்றி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பதற்றத்துடன் அவனை ஸ்டான்லி மருத்துவமனைக்கு தூக்கி சென்றார். 
டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டுசஞ்சய் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனால் சுதா கதறினார். இதையடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுகுடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Read more...

இஷ்டப்பட்டும், கடின உழைப்புடனும் செயல்பட்டால்?


மின்னணு பொறியியல் துறையில் பி.இ.பட்டம் பெற்றுமீன் பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள சதீஷ்குமார்: மின்னணு பொறியியல் படித்தேன். படிப்பு முடிந்தவுடன் வேலை தேடி சென்னையை வலம் வந்தேன். இரண்டு மாதங்கள் தேடியும் வேலை கிடைக்காததால்மனம் சோர்ந்து போனேன். ஒரு நாள் மெரீனா கடற்கரைக்குச் சென்று விட்டு திரும்பும் வழியில்மீன் இறக்குமதி வணிகத்தைக் கண்டேன். இருளில் சென்று கொண்டிருந்த என் வாழ்க்கைப் பயணத்தில்ஒரு ஒளியைக் காட்டியது போல் நடந்தது அந்நிகழ்வு. இன்று என் வாழ்க்கையையே அதுவெளிச்சத்தின் பாதையில் வழி நடத்துகிறது. என் சொந்த ஊரான ராமேஸ்வரம் கடல் சார்ந்த பகுதியாக இருப்பதால்அங்கு மீன் பிடித் தொழில் தான் முதன்மைத் தொழில். எனவேராமேஸ்வரத்தில் இருந்து மீன்களை வாங்கிசென்னையில் விற்கலாம் என நினைத்தேன். முதலீடே இல்லாமல்மீன் விற்பனைத் தொழிலைத் தொடங்கியதும்அதில் காலூன்ற கடுமையாக உழைக்க வேண்டி வந்தது. மாலை, 4.30 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் மீன்களை ஏற்றிச் சென்றுஅதிகாலை, 6.30 மணிக்கெல்லாம்சென்னை எழும்பூரை அடைவேன்.பின்அங்கிருந்து லைட்ஹவுஸ் வரை சென்றுமீன் விற்பனையை முடித்து விட்டுமீண்டும் மாலை, 5 மணிக்குசென்னையில் இருந்து ரயிலில் ஏறிஅதிகாலை, 5.30 மணிக்கு ராமேஸ்வரம் அடைவேன். என் தூக்கம் முழுவதும் ரயில் பயணங்களில் தான். மூன்று மாத கடுமையான உழைப்பிற்குப் பின்தற்போது நான் சொந்தமாக ஒரு டெம்போ வாங்கியுள்ளேன். இந்த டெம்போஎன் தொழிலுக்கு சற்று உதவியாக உள்ளது. தற்போதுநான் ஒரு பொறியாளர் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக சம்பாதிக்கிறேன்.வேலையில் நல்ல வேலைகெட்ட வேலை எனகவுரவம் பார்த்தால்நிச்சயம் நல்ல நிலைக்கு வர முடியாது. எந்த வேலையானாலும்இஷ்டப்பட்டும்கடின உழைப்புடனும் செயல்பட்டால்வெற்றி நிச்சயம்.

Read more...

எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வெறி !

ஒத்த பைசா கூட செலவில்லாமல் ஒரு நாளைக்கு 50 கிமீ வரை செல்லும் சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் சோலார் காரை பெங்களூரை சேர்ந்த இளைஞர் வடிவமைத்து அசத்தியுள்ளார்.
பெங்களூரை சேர்ந்தவர் சையது முசாக்கீர் அகமது. ஆட்டோமொபைல் ஆர்வலரான இவர் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் இருந்து வந்தார். இந்த நிலையில்தான்எரிபொருள் பிரச்னையால் நாளுக்கு நாள் ஏற்பட்டு வரும் பிரச்னைகளை கருத்தில்க்கொண்டு புதிய காரை வடிவமைக்க முடிவு செய்தார்.
Solar Car 

அதன்படிசுற்றுச் சூழலுக்கு துளி கூட மாசு ஏற்படுத்தாதமுழுக்க முழுக்க சூரிய சக்தியில் இயங்கும் காரை வெற்றிகரமாக வடிவமைதத்து அசத்தியுள்ளார். இது கான்செப்ட் மாடல் என்றாலும்ஸ்பான்சர் கிடைத்தால் வணிக ரீதியில் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அவர் கூறுகிறார்.
இதுகுறித்து சையது முஜாகீர் அகமது கூறுகையில்," இந்த காரில் முன்பக்க பேனட்கூரை மற்றும் பின்பகுதியில் மூன்று சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதிலிருந்து பகல் வேளையில் சூரிய சக்தியிலிருந்து பேட்டரியில் சேமிக்கப்படும் மின்சாரம் மூலம்ஒரு நாளைக்கு 50 கிமீ தூரம் ஒத்த பைசா செலவில்லாமல் செல்ல முடியும்.

ஸ்பான்சர் கிடைத்தால் இந்த காரை மேம்படுத்தி வணிக ரீதியில் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். இந்த காரை பிரபலப்படுத்துவதற்காக பெங்களூருவிலிருந்து கொச்சி வரை 600 கிமீ தூரம் சென்று வந்துள்ளேன்.

மேலும்ஊழலுக்கு எதிரான பிரச்சாரம் செய்யவதற்காக இந்த காரில் டெல்லி செல்லவும் திட்டமிட்டுள்ளேன். 50 கிமீ.,க்கு மேலும் பயணம் செல்ல வேண்டியிருந்தால் வீட்டு மின்சாரத்தை சார்ஜ் செய்தும் செல்லும் வகையில் பிளக் கொடுக்கப்பட்டுள்ளது," என்றார்.

இந்த இளம் சாதனையாளரின் திட்டத்தை ஊக்குவிக்க விரும்புவோர் பின்வரும் இமெயில் மற்றும் மொபைல்போன் நம்பர்களில் தொடர்பு கொள்ளலாம். solarahmed1@yahoo.com என்ற இமெயில் முகவரியிலும், 9845229757 என்ற மொபைல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Read more...

ஒரு பொருளை பயன்படுத்தும் போது, அதனால், எந்த மாதிரியான பாதிப்புகள் வரும்

வெள்ளி, 8 நவம்பர், 2013

நாம் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது, ஒரு பொருளை பயன்படுத்தும் போது, அதனால், எந்த மாதிரியான பாதிப்புகள் வரும் என்பது பற்றிதான். நம் தோலுக்கு ஹேர் டை ஒப்புக் கொள்ளாவிட்டால், சிறிய கொப்புளங்கள் வரலாம். சிலருக்கு, முகத்தின் இரு பக்கங்களிலும் கறுக்கும், முகம் முழுக்க கறுப்பதும் உண்டு. தோல் தடித்து அரிப்பு வரும். சில நேரங்களில் ஒவ்வாமை ஏற்படவும் வாய்ப்பு உண்டு. ஹேர் டையில் பி.பி.டி., எனும் வேதிப் பொருள் உள்ளது. இது சூரிய ஒளியை அதிகமாக உறிஞ்சி, தலைமுடிக்கு நல்ல கறுப்பு நிறத்தைத் தரக் கூடியது. நாம் பயன்படுத்தும் ஹேர் டையில் இந்த பி.பி.டி.,யின் அளவு 2.5 என்ற அளவிற்கு குறைவாக இருக்க வேண்டும். அதுதான் நல்ல ஹேர் டை. அதேபோல் அமோனியா இல்லாத ஹேர் டையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அமோனியா அமிலத்தன்மை உடையது. அமிலத்தின் குணம் எந்த பொருளின் மீது பட்டாலும் அதை அரித்துவிடும். ஹேர் டையை குறைந்தது, ஒரு மாத இடைவெளியில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். போட்ட பின், சீப்பால் சீவக் கூடாது. கறுப்பு நிறம் வெயிலை ஈர்க்கும் என்பதால் டை போட்டு விட்டு, வெளியில் போவது தவிர்க்கப்பட வேண்டும். இப்போது பல நிறங்களில், ஹேர் கலரிங் வருகிறது.

Read more...

யார் கிண்டல் செய்தாலும், நான் அதை பொருட்படுத்தாமல் இருந்ததால்,

தன்னம்பிக்கை இழக்காத மாற்றுத் திறனாளி சங்கரலிங்கம்: சிவகாசி அருகில் உள்ள கிராமத்தில் ஓர் ஏழ்மை குடும்பத்தில் நான்காவது மகனாக பிறந்தேன்.நான் பிறந்த எட்டாவது மாதத்தில் நடந்தேன். ஆனால்என் மூன்றாவது வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டேன். நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போதுகுடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை நிறுத்தி விட்டுசில வருடங்கள் என் தந்தை வைத்திருந்த பெட்டிக் கடையில் அவருக்கு உதவியாக இருந்தேன். என் 19ம் வயதில்வறுமை காரணமாக நாங்கள் குடும்பத்துடன்சிவகாசிக்கு வந்தோம். சில காலம் டீ கடையிலும்தீப்பெட்டித் தொழிற்சாலையிலும் பணிபுரிந்தேன்.ஆனால்அதில் எனக்கு திருப்தி இல்லை. சுயதொழில் செய்ய விரும்பிய நான்பிளாட்பாரத்தில் காய்கறி கடை நடத்தினேன். எனக்காகதினமும் காய்கறி வாங்கும் என் தாய் படும் கஷ்டத்தைப் பார்த்துஅந்த தொழிலையும் விட்டு விட்டேன்.என் அண்ணன் வைத்திருந்த ஆட்டோவை கஷ்டப்பட்டு ஓட்டிப் பழகினேன். அதுவே பிற்காலத்தில் எனக்கு கைகொடுத்தது. ஒரே இடத்தில் எனக்கு வேலை செய்ய பிடிக்காததால்சொந்தமாக ஆட்டோ வாங்க கடன் கேட்டேன். சில சிரமங்களுக்கு பின்நண்பர்கள் உதவியால் கடன் கிடைத்தது. இரவுபகல் பாராது கடுமையாக உழைத்ததற்கு பயனாகஇரண்டு ஆட்டோவுக்கு உரிமையாளர் ஆகி உள்ளேன். யார் கிண்டல் செய்தாலும்நான் அதை பொருட்படுத்தாமல்தன்னம்பிக்கையுடன் உழைத்ததற்குக் கிடைத்த பரிசு தான் ஆட்டோ!

Read more...

உண்மையை சிந்தித்துப் பார்க்க நேரம் இல்லையா? மனம் இல்லையா?

புதன், 30 அக்டோபர், 2013

இந்தியாவில் வாழும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களில் 20 விழுக்காட்டினர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.  
 இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் 1947ஆம் ஆண்டு 32 வயதாக இருந்தது. அது 2011ஆம் ஆண்டு 63.4 ஆக உயர்ந்தது. இதில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோரின் எண்ணிக்கை 7.1 விழுக்காடாக உள்ளது.
இதேபோல் வரும் 2050ஆம் ஆண்டுக்குள் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 326 விழுக்காடாகவும், 80 வயதிற்கு மேற்பட்ட முதியோரின் எண்ணிக்கை 700 விழுக்காடாகவும் உயரும் வாய்ப்புள்ளது என்றும் அந்த ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.
தற்போது 1.71 கோடி பேர் மனநோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். வரும் காலங்களில் இந்த எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்றவாறு மருத்துவமனை வசதிகளும், பணியாளர்களின் தேவைகளும் அதிகரிக்கும் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு முதியவர்கள் மனநலம் பாதிக்கப்படுவதற்குக் காரணம் குடும்பத்தினரின் அரவணைப்பு இல்லாததே! பெற்று வளர்த்த பிள்ளைகளே தங்களைப் புறக்கணிக்கும்போது பெற்றவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? அந்த வேதனையின் உச்சமே மன இறுக்கமாகி மன நோயாக மாறுகிறது என்று மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
"அன்னையையும் பிதாவையும்வும் பாரமாகக் கருதுகிற இளைய தலைமுறையை என்னென்பது? பத்து மாதம் சுமந்து பெற்ற தாயின் வயிற்றில் இருந்தபோது அவள் பாரமாகக் கருதியிருந்தால் இன்று நாம் பூமியில் பிறந்திருக்க முடியுமா? இதை எண்ணிப் பார்க்க இளைய தலைமுறைக்கு நேரமில்லை.
விலங்குகளின் குட்டிகள் நடக்கத் தொடங்கியதும் தாயை விட்டுப் பிரிந்து விடுகின்றன; பறவைக் குஞ்சுகள் சிறகு முளைத்ததும் தாயை விட்டு பறந்து விடுகின்றன. மனிதர்களும் அப்படியிருந்தால் பகுத்தறிவு பெற்று என்ன பயன்? நமக்கும், விலங்குகளுக்கும் வேறுபாடு என்ன?
"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்பார்கள். பழுத்த மட்டையைப் பார்த்து பச்சை மட்டை சிரித்ததாம். எவ்வளவு காலத்துக்கு இளமை இப்படியே இருக்கப் போகிறது? எல்லாருமே முதுமையை நோக்கியே பயணம் செய்கிறோம். இதுதான் உண்மை. இந்த உண்மையை சிந்தித்துப் பார்க்க நேரம் இல்லையா? மனம் இல்லையா?
"ஒரு தாய் 10 குழந்தைகளைப் பேணி வளர்க்கலாம்; 10 குழந்தைகள் ஒரு தாயைப் பேணுவது அரிது' என்பது சீனப் பழமொழி. "அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்றார் ஒளவைப் பிராட்டி. அருமையான காரியங்களைச் செயல்படுத்துவதே அறிவுடைய மனிதர்களின் அடையாளம். அந்த அடையாளங்களை இழந்து விட்டு வாழ்வதால் பயன் என்ன?
பிள்ளைகளைப் பெற்று வளர்த்து படிக்க வைத்து வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு பல பெற்றோர்கள் தனிமையில் தனி வீட்டில் தவிக்கின்றனர். பணம் இருந்தும் உதவிக்கு ஆளில்லை; உறவுக்கும் யாருமில்லை; உபசரிப்புக்கும் யாருமில்லை. இதனைத் தெரிந்து கொண்ட திருடர்கள் அவர்களது பணத்துக்காகப படுகொலை செய்யும் பரிதாபப் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எங்கே இருக்கிறது மனிதநேயம்?
திருவள்ளுவர் கூறியது போல உறுப்புகளால் மட்டும் ஒருவர் மனிதராக மாட்டார். கூர்மையான அறிவு பெற்றிருந்த போதும் மனிதப் பண்பு இல்லாதவர்கள் மரங்களைப் போன்றே மதிக்கப்படுவர்.
அரம்போலும் கூர்மைய ரேணும் மரம்போல்வர் மக்கட் பண்பு இல்லாதவர் என்று குறள் கூறுகிறது.
காயை விடக் கனி சுவையானது. இளைஞர்களைவிட முதியவர்கள் அறிவோடு அனுபவமும் வாய்க்கப் பெற்றவர்கள். இந்த மூத்தவர்களின் அறிவையும், அனுபவத்தையும் இளைய தலைமுறை பயன்படுத்திக் கொள்வது அவர்களது முன்னேற்றத்துக்கு உதவும். வீட்டுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் பயன்படும்.
இளைஞர்களின் ஆற்றலும், முதியவர்களின் அனுபவமும் இணைந்து செயல்படும்போதுதான் ஒரு நாடு வளர்ச்சியை நோக்கி முன்னேறும். ஆனால், இங்கே ஆட்சியிலும், அரசியல் கட்சிகளிலும் மூத்தவர்களின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கிறது.
இளைஞர்களும், மாணவர்களும் அவர்களுக்கு எடுபிடிகளாகவும், ஏணியாகவுமே பயன்படுத்தப்படுகின்றனர். இந்த கெடுபிடிகளால் ஆர்வமுள்ள படித்த இளைஞர்கள் வெறுப்படைந்து ஒதுங்கி விடுகின்றனர்.
இங்கு நடப்பது "மக்களாட்சி' என்று கூறப்பட்டாலும் வாரிசு அரசியலே தலைதூக்கி நிற்கிறது. தலைவர்கள் தங்கள் வாரிசுகளையே கட்சியிலும், ஆட்சியிலும் புகுத்திடும் போக்கே எங்கும் காணப்படுகிறது. மக்களாட்சி என்ற பெயரில் மன்னர் ஆட்சியே. இங்கே இளைஞர்களுக்கும். மூத்தவர்களுக்கும் இட்டு நிரப்ப முடியாத இடைவெளி.
"எல்லாரும் இந்நாட்டு மன்னர்' என்பதும், "மக்கள் குரலே மகேசன் குரல்' என்பதும் இங்கே பேச்சளவில்தான்.
சமுதாயத்தில் இளைஞர்கள் மூத்தவர்களை மதிப்பதில்லை. அரசியலில் முதியவர்கள் இளைஞர்களை மதிப்பதில்லை. இந்தப் போக்கு நல்லதில்லை.
மூத்த குடிமக்களைப் போற்றிக் காக்கும் பொறுப்பு அவர்களது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, அரசாங்கத்திற்கும் இருக்கிறது. உழைத்து ஓய்வு பெற்றவர்களை இறுதிவரை காக்கும் கடமையிலிருந்து அரசுகள் பின்வாங்கக் கூடாது.
நாம் நம் முன்னோரை நேசிக்கவே தயங்குகிறோம்; மூத்தோரை ஆதரிக்கவே யோசிக்கிறோம். இன்று நம் சமுதாயம் இருக்கும் நிலையில் ஒரு மனிதனுக்கு முதுமை என்பது வரமா அல்லது சாபமா? 

Read more...

பாஸ்போர்ட் பெறுவது மிக எளிது !.

வெள்ளி, 25 அக்டோபர், 2013

கல்லூரி படிப்பில் இறுதி யாண்டில் காலடி பட்டதும் வேலை கொடுக்க பன்னாட்டு நிறுவனங்கள் கல்லூரி வாசலுக்கு படையெடுக்கின்றன. திறமையும்படிப்பும்கையில் பாஸ்போர்ட்டும் இருந்தால் வெளிநாட்டில் வேலை ரெடி. ஆனால் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவேண்டும் என்றாலே முகத்தில் கவலை ரேகை படர்ந்து விடுகிறது. பாஸ்போர்ட் வாங்குவது எளிதான விஷயமே. விண்ணப்பத்தில் சரியான தகவல்களை கொடுத்தால் அதிகபட்சம் 45 நாட்களுக்குள் கிடைக்கிறது.

பாஸ்போர்ட் விண்ணப்பத்தை இணையதளத்திலேயே டவுன்லோடு செய்யலாம். சாதாரண முறை யில் பாஸ்போர்ட் வாங்க முகவரி சான்றுக்கு 2 இணைப்புகள்(ரேஷன் கார்டுவங்கி கணக்கு பாஸ் புத்தகம்வாக்காளர் அடையாள அட்டைடிரைவிங் லைசென்ஸ் இவற்றில் ஏதாவது 2), தட்கல் முறையில் வாங்க 3 சான்று தேவைப்படும். கல்லூரிகளில் படிப்பவர்கள் தங்கள் கல்லூரி முதல்வரிடமிருந்து போட்டோவுடன் கூடிய அத்தாட்சி சான்றுஎஸ்எஸ்எல்சி அல்லது பிளஸ் 2 சான்று, 1989க்கு பிறகு பிறந்தவர்களாக இருந்தால் பிறப்பு சான்று(பெயர் கட்டாயம் இடம் பெற்றிருக்கவேண்டும்)கல்லூரி அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைக்கவேண்டும். சான்று ஆய்வுக்கு செல்லும்போது அசல் சான்றுகளை கொண்டு செல்லவேண்டும்.

இவற்றுடன் முன் சரிபார்ப்பு உறுதி செய்ய மாவட்ட எஸ்.பிகுடியிருக்கும் பகுதியை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லது தாசில்தாரிடம் கூட சான்று பெற்றிருந்தால் பாஸ்போர்ட் பெறுவது மிக எளிது. சாதாரண முறையில் பாஸ்போர்ட்டுக்கு ரூ.ஆயிரமும்தட்கல் முறையில் பெற யீ2500ம் கட்டணமாக செலுத்தவேண்டும். தமிழகத்தில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் சென்னைதிருச்சிகோவைமதுரை ஆகிய இடங்களில் உள்ளன.

Read more...

கவனமா காலடி எடுத்து வெச்சு மேலே மேலே போங்க!

பெரிய வெற்றிகளை அடைந்த பிரபலங்களைப் பார்த்திருக்கிறீர்களா? அவர்களும் நம்மைப்போல் திடீரென்று ஒரு திருப்புமுனை. ஒரே தாவலில் வெற்றியை தொட்டுவிடுகிறார்கள். இந்தத் தாவல் எப்படி நிகழ்கிறது? இந்தக் கேள்வியை முன்வைத்துப் பேசும் சமீபத்திய புத்தகம். "தி லீப்' (The Leap) இதன் ஆசிரியர் ரிக் ஸ்மித்.
இந்த ரிக் ஸ்மித்தும் நம்மைப்போலச் சாதாரணமான ஒரு வாழ்க்கையில் முடங்கிக் கிடந்தவர்தான். ஆஃபீஸ், சம்பளம், பிரமோஷன், போனஸ் என்று சின்னச் சின்ன சந்தோஷங்களில் திருப்தியடைந்து கொண்டிருந்தவர், திடீரென்று ஒரு புத்தகம் எழுதினார்; பிரபலமானார், வெற்றிகரமான எழுத்தாளராக நாடு முழுவதும் சுற்றி வந்தார்.
அந்த சமயத்தில் வெற்றியாளர்கள் பலருடைய வாழ்க்கைகளை ஊன்றிப் படித்து அவர்களின் மூன்று வெற்றி ரகசியங்களை கண்டுபிடித்திருக்கிறார்.
"தி லீப்' புத்தகத்தில் ரிக் ஸ்மித் அழகான உதாரணங்களோடு விவரிக்கும் அந்த மூன்று விஷயங்கள் இதோ:
        
1.              உங்களுடைய "கலர்' என்ன என்று கண்டுபிடியுங்கள்
முதலில், இங்கே ரிக் ஸ்மித் "கலர்' என்று குறிப்பிடுவது நம்முடைய தோலின் நிறத்தை அல்ல. நாம் நிஜமாகவே நம் வாழ்க்கையைக் கொண்டு என்ன செய்ய விரும்புகிறோம் என்பதைத்தான்.
2.                    
உதாரணமாக, ஒருவர் ஏதோ ஒரு அலுவலகத்தில் குமாஸ்தாவாக இருக்கலாம். ஆனால், அவருக்குள் என்ளைக்காவது பெரிய நடிகராக வேண்டும் என்கிற தாகம் இருக்கும். அதுதான் அவருடைய "கலர்'.
2. அந்த கலரை வைத்து வண்ணம் தீட்டுவதற்கு ஏற்ற ஒரு யோசனையை திட்டத்தைத் தேடிப் பிடிப்பது. அந்த யோசனை பெரிய அளவில் இருக்கட்டும் என்கிறார்.

உதாரணமாக, நீங்கள் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று நினைத்தால், லோக்கல் டீம் ரேஞ்சுக்கு யோசிக்காதீர்கள்; இந்திய அணியில் இடம் பிடிக்கவேண்டும், வேர்ல்ட் கப் ஜெயிக்கவேண்டும் என்கிற அளவுக்கு ஆசைப்படுங்கள். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். அடுத்து, அந்த யோசனையில் சுயநலம் இருக்கக்கூடாது. அதாவது, நீங்கள் பெரிய கிரிக்கெட் வீரராக வந்தால் அதன்மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்கிற சுயநல நோக்கத்தோடு மட்டும் அதில் இறங்கினால், சுற்றியிருக்கிற மற்றவர்கள் யாரும் உங்களுக்கு மனம் வந்து உதவமாட்டார்கள்.
அதற்குப் பதிலாகப் பொதுநல நோக்கம் கொண்டு செயல்படுகிறவர்களுக்கு எல்லோருடைய ஆதரவும் கிடைக்கும். அவர்களுடைய முன்னேற்றமும் வேகமாக இருக்கும்.
அப்படியானால், என்னுடைய சொந்த லாபத்தைப் பற்றி நான் நினைக்கவே கூடாதா?
3.                     நினைக்கலாம். பொதுநலத்தோடு ஓரமாகக் கொஞ்சம் சுயநலமும் கலந்திருந்தால் தப்பில்லை. அதேசமயம் வெறும் சுயநலம்தான் உங்களுடைய இலக்கு என்றால் கஷ்டம். அதில் மற்றவர்களுக்கும் உதவுகிற ஒரு நோக்கமும் இருந்தால், அந்த நல்லெண்ணமே உங்களை தூக்கிவிடும்.
4.                     கடைசியாக, எளிமையான யோசனை. நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பது எல்லோருக்கும் தெளிவாகப் புரியவேண்டும். இதுவா, அதுவா என்று புரியாமல் குழப்பியடித்தால் "பய ஒரு மாதிரி' என்று மற்றவர்கள் விலகிப் போய்விடுவார்கள். யாரும் உதவமாட்டார்கள்.
5.                     சரி. கலர் கிடைச்சாச்சு, யோசனையும் கிடைச்சாச்சு, அடுத்து என்ன? எகிறவேண்டியதுதானே? அதுதான் கூடாது.
6.                    
3. "நீங்கள் யோசித்து வைத்திருக்கும் விஷயம் என்னதான் உயர்வானதாக இருந்தாலும், அதை நம்பி ஓரளவுக்குமேல் ரிஸ்க் எடுக்காதீர்கள். கவனமாகக் காலடி எடுத்துவையுங்கள்' என்கிறார் ரிக் ஸ்மித்.

இதென்ன கூத்து? பொதுவாக ரிஸ்க் எடுத்தால்தானே நிறைய ஜெயிக்க முடியும் என்று சொல்வார்கள்?
உண்மைதான். ஆனால், அதேசமயம் கண்மூடித்தனமாக ரிஸ்க் எடுப்பதும் தவறு. இப்போது நீங்கள் இருக்கும் நிலையிலிருந்து அடுத்து செல்லவிருக்கும் நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். அந்தப் பாதையில் ஏதாவது சிரமங்கள், தடைகள் வந்தால் எப்படிச் சமாளிப்பது என்று மாற்று யோசனைகளைப் பக்காவாகத் தயார் செய்து கொள்ளுங்கள். ஆரம்பத்தில் ஆழம் பார்த்துக் காலை விடுங்கள் களம் ஓரளவு பழகியபிறகு புகுந்து விளையாடலாம்.
சுருக்கமாகச் சொன்னால், உங்க கலரைத் தெரிஞ்சுக்கோங்க, அதுக்கு ஏற்றதுபோல் ஒரு பெரிய யோசனையைக் கண்டுபிடிங்க, கவனமா காலடி எடுத்து வெச்சு மேலே மேலே போங்க!   
நன்றி - குமுதம் 

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets