உங்கள் வருகைக்கு நன்றி

இஷ்டப்பட்டும், கடின உழைப்புடனும் செயல்பட்டால்?

வெள்ளி, 13 டிசம்பர், 2013


மின்னணு பொறியியல் துறையில் பி.இ.பட்டம் பெற்றுமீன் பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள சதீஷ்குமார்: மின்னணு பொறியியல் படித்தேன். படிப்பு முடிந்தவுடன் வேலை தேடி சென்னையை வலம் வந்தேன். இரண்டு மாதங்கள் தேடியும் வேலை கிடைக்காததால்மனம் சோர்ந்து போனேன். ஒரு நாள் மெரீனா கடற்கரைக்குச் சென்று விட்டு திரும்பும் வழியில்மீன் இறக்குமதி வணிகத்தைக் கண்டேன். இருளில் சென்று கொண்டிருந்த என் வாழ்க்கைப் பயணத்தில்ஒரு ஒளியைக் காட்டியது போல் நடந்தது அந்நிகழ்வு. இன்று என் வாழ்க்கையையே அதுவெளிச்சத்தின் பாதையில் வழி நடத்துகிறது. என் சொந்த ஊரான ராமேஸ்வரம் கடல் சார்ந்த பகுதியாக இருப்பதால்அங்கு மீன் பிடித் தொழில் தான் முதன்மைத் தொழில். எனவேராமேஸ்வரத்தில் இருந்து மீன்களை வாங்கிசென்னையில் விற்கலாம் என நினைத்தேன். முதலீடே இல்லாமல்மீன் விற்பனைத் தொழிலைத் தொடங்கியதும்அதில் காலூன்ற கடுமையாக உழைக்க வேண்டி வந்தது. மாலை, 4.30 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் மீன்களை ஏற்றிச் சென்றுஅதிகாலை, 6.30 மணிக்கெல்லாம்சென்னை எழும்பூரை அடைவேன்.பின்அங்கிருந்து லைட்ஹவுஸ் வரை சென்றுமீன் விற்பனையை முடித்து விட்டுமீண்டும் மாலை, 5 மணிக்குசென்னையில் இருந்து ரயிலில் ஏறிஅதிகாலை, 5.30 மணிக்கு ராமேஸ்வரம் அடைவேன். என் தூக்கம் முழுவதும் ரயில் பயணங்களில் தான். மூன்று மாத கடுமையான உழைப்பிற்குப் பின்தற்போது நான் சொந்தமாக ஒரு டெம்போ வாங்கியுள்ளேன். இந்த டெம்போஎன் தொழிலுக்கு சற்று உதவியாக உள்ளது. தற்போதுநான் ஒரு பொறியாளர் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக சம்பாதிக்கிறேன்.வேலையில் நல்ல வேலைகெட்ட வேலை எனகவுரவம் பார்த்தால்நிச்சயம் நல்ல நிலைக்கு வர முடியாது. எந்த வேலையானாலும்இஷ்டப்பட்டும்கடின உழைப்புடனும் செயல்பட்டால்வெற்றி நிச்சயம்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets