உங்கள் வருகைக்கு நன்றி

பள்ளி செல்லும் குழந்தை அடம்பிடிக்க காரணமும், அதற்கான தீர்வும்.

புதன், 27 ஜூன், 2018


சில குழந்தைகள், பள்ளிக்கு கிளம்பும் முன், வயிறு வலிக்கிறது அல்லது உடம்பு சரியில்லை எனக் கூறி, லீவு போட்டதும், ப்ரீயாகி, ஜாலி மூடுக்கு மாறி விடுவர்.மீண்டும் மறுநாள் காலை, பள்ளி செல்லும் போது இப்பிரச்னை தொடர்ந்தால், குழந்தையுடன் உட்கார்ந்து பேசுங்கள். அவர்கள் பேச வாய்ப்பு கொடுத்து, காது கொடுத்து கேளுங்கள். வீட்டில் பேச தயங்கும் குழந்தைகளை, வெளியே அழைத்து சென்று, பிரச்னையை கேட்டு அறிந்து களையுங்கள். இன்றைய பெற்றோரில் பலர், குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கும் பெயரில், தொடர்ச்சியாக பாடம் எடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர்களை குற்றம் சொல்லி வந்தால், பிரச்னை பெரிதாகுமே தவிர, தீர்வு கிடைக்காது.குழந்தைகளை, மிரட்டியோ, அதட்டியோ அல்லது அடித்தோ பள்ளிக்கு அனுப்பினாலும், பள்ளியில் நாட்டம் இல்லாமல் போய்விடும். இப்படி அனுப்பும்போது, அது, பெற்றோர் - குழந்தை இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தும்.சில குழந்தைகளுக்கு, உண்மையிலேயே உடம்பில் ஏதாவது பிரச்னை இருக்கலாம். இதை உறுதிப்படுத்த, மருத்துவரிடம் அழைத்து சென்று அவர், 'எந்த பிரச்னையும் இல்லை' என்றால், குழந்தையிடம் நெருக்கம் காட்டி, பிரச்னையை கண்டறியுங்கள்.பள்ளிக்குச் செல்ல மறுக்கும் குழந்தையை, தொடர்ச்சியாக கண்காணியுங்கள். குறிப்பாக, அவர்களுக்கு பயம் மற்றும் பதற்றம் ஏற்படுவது போல் தோன்றினால், முறையான கவுன்சிலிங் தர வேண்டும்.இன்று சில பெற்றோர், தங்கள் குழந்தைகள் பள்ளி செல்ல மறுத் தால், ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகம் சரியில்லை என, அனுமானித்து விடுகின்றனர். இதுதவிர, படிப்பில் பிரச்னை, கேலிப் பிரச்னை மற்ற மாணவர்களிடம் சண்டை எனவும் இருக்கலாம். அதை சரியான முறையில் ஆராய்ந்து, சிந்தித்து செயல்படுங்கள்.குறிப்பாக, பெற்றோர் பள்ளி சென்று, ஆசிரியரிடம் பேச வேண் டும். ஒரு கூட்டு முயற்சியால், குழந்தையை இந்தப் பிரச்னையில் இருந்து சரி செய்யலாம்.உடல் நிலை சரியில்லாமல் வீட்டில் இருக்கும்போது, 'டிவி' பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது உள்ளிட்ட விஷயங்களை அனுமதிக்கக் கூடாது. மீறி பயன்படுத்தினால், அது அவர்களை மேலும் வீட்டோடு இருக்க வழி வகுக்கும்.நல்ல பழக்கத்தை ஊக்கப்படுத்துங்கள். உதாரணமாக, பள்ளிக்குச் செல்லாமல் தொடர்ச்சியாக இருந்து, ஒரு நாள் பள்ளி சென்று வரும்போது, அவர்களுக்குப் பிடித்த உணவை வீட்டில் செய்து கொடுங்கள். தொடர்ச்சியாக பள்ளிக்குச் சென்று வந்தால், சிறு பரிசு கொடுத்து ஊக்கப்படுத்துங்கள்.மேலே கூறியவற்றை பெற்றோர் கடைபிடித்தாலே, குழந்தையின் பிரச்னை நிச்சயம் சரியாகும். தேவையெனில், மனநல நிபுணரை கலந்தாலோசிக்கலாம்.

Read more...

மருத்துவமனையில், நோயாளியை பார்க்க செல்கிறீர்களா ?


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். 
ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் அல்லது இருவர் போனால் போதும். 13 வயதுக்கு குறைந்த மற்றும், 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் செல்வதை தவிர்க்கலாம்.
உடல்நலம் இல்லாதவர்களை பார்க்கச் செல்லும் போது, பூச்செண்டு கொடுப்பது நல்லதல்ல. அதிலிருக்கும் சிறு பூச்சிகள், நோயாளிக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம்; பூஞ்சைகள் நோய்த் தொற்றை உண்டாக்கலாம்.
தன்னம்பிக்கை தரும் விதமாக, அவர்களிடம் பேச வேண்டும். 'நாங்கள் உங்களுக்கு துணை நிற்போம்' என்று, நம்பிக்கை அளிக்க வேண்டும். 'விரைவில் குணமாகிவிடும்' என, உற்சாகம் தர வேண்டும்; அவர்களின் மனவலிமையை அதிகப்படுத்த வேண்டும்.
தனி அறையில் இல்லாமல், 'செமி பிரைவேட்' அறைகளில், நான்கு நோயாளிகள், ஒரு அறையை பகிர்ந்து இருப்பர். ஒவ்வொருவருக்குமான நோயின் தன்மை, வலி, துாங்கும் நேரம் வெவ்வேறாக இருக்கும். இத்தகைய சூழலில், பார்வையாளர்கள் மெதுவாக பேச வேண்டும்.
புற்றுநோய்க்கான, 'கீமோதெரபி' மருத்துவம் செய்யும் போது தலைமுடி கொட்டும். முடியை பாதுகாப்பதை விட, உயிரை பாதுகாப்பதே முக்கியம். 
இத்தகைய சூழலில், கூகுளில் தேடுவது தேவையற்ற பயத்தையும், பீதியையும் ஏற்படுத்தும். உங்கள் உடலில் உண்டாகும் பாதிப்புகளின் அடிப்படையில், மருத்துவரிடம் நேரடியாக ஆலோசனை பெறுவதே, தெளிவை ஏற்படுத்தும்.
மருத்துவமனையில் நர்ஸ், டாக்டர், உதவி மருத்துவர் போன்றோர், ஒரே நாளில், பல நோயாளிகளை கவனிக்க வேண்டியிருக்கும். அதனால், சில நேரங்களில் அவர்கள், எரிச்சலுடனும், கோபத்துடனும் நடந்து கொள்வர். அவற்றை பெரிதாக்கி, அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள தேவையில்லை.
மருத்துவர்களிடம் தேவையான கேள்விகளை யோசித்து கேட்க வேண்டும். முக்கியமாக, நோயாளிக்கு பீதியை ஏற்படுத்தக் கூடாது.
வயிறு மற்றும் கிட்னி தொடர்பான சிகிச்சைக்கு, நோயாளி ஒரு நாளில் எடுத்துள்ள, திட, திரவ உணவு அளவு, சிறுநீர், மலம் அளவீடுக்காக, 'இன் புட், அவுட் புட்' சார்ட் எடுப்பர்; அதை வைத்து, நோய் எந்தளவு குணமாகியுள்ளது என்பதை மதிப்பிடுவர்.
அவ்வாறு இருக்கையில், நோயாளி மீதம் வைத்த உணவை, 'அட்டெண்டர்' சாப்பிட்டால், நோயின் தன்மையை கணக்கிட முடியாது என்பதால், கவனமாக இருக்க வேண்டும்.
நோயாளிக்கு ஓய்வும் அவசியம் என்பதால், பார்வையாளர் நேரத்தில் மட்டும், சந்திப்பது சரியாக இருக்கும். நோயாளியை கவனிக்கும் போது, சரியான துாக்கம் இருக்காது. நோயாளி முறையாக மருந்து, உணவு எடுத்துக் கொள்ள உதவும் மனநிலையிலும், அட்டெண்டர் இருக்க வேண்டியது அவசியம்.A

Read more...

மூளையை ஆரோக்கியத்திற்கான வழிகள்.


மனிதன் வளர வளர, மூளையும் வளரும். ஆனால், 45 வயது முதல், மூளை தன் வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் துவங்கும்.கருத்தரித்த நான்காவது வாரத்திலேயே, குழந்தையின் மூளை வளர துவங்கி விடும். அப்போது, தாய் ஆரோக்கியமான சூழலில் இருந்தால், குழந்தைக்கு மூளை குறைபாடு ஏற்படாமல் தவிர்க்கலாம்.கருவுற்ற நான்காவது வாரத்தில், நிமிடத்திற்கு 2.50 லட்சம் நரம்பணுக்கள் குழந்தையின் உடலில் உருவாகின்றன. இவ்வாறு, நமக்கு தேவையான அனைத்து நரம்பணுக்களும், பிறப்பதற்கு முன்பே உருவாகி விடும். குறைப்பிரசவத்தால் மூளை வளர்ச்சி தடைபட வாய்ப்புள்ளதால், பிற்காலத்தில் மூளை சார்ந்த பல பிரச்னை வர வாய்ப்புள்ளது.குழந்தையின் மூளை, ஆறு வயதுக்குள்ளேயே, 95 சதவீத வளர்ச்சியை எட்டி விடும். இந்த பருவத்தில் மூளை மிகவும் ஆற்றல் நிறைந்ததாக இருக்கும். குழந்தை பருவத்தில், மூளை தனக்கு தேவையானதை விட, இரண்டு மடங்கு நியூரான்களை உற்பத்தி செய்யும். 20 வயதாகும் போது, மூளை நன்றாக வளர்ந்து விடும். அதனால், மூளையில் உள்ள வரிப் பள்ளங்கள் விரிவடையும். 20 - 90 வயது வரை, மூளை அதன் எடையிலிருந்து, 5 - 10 சதவீதத்தை இழக்கிறது.நம் மூளையின் உச்சக்கட்ட செயல்திறன், 22 வயதில் துவங்கி, ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளே நீடிக்கும். அதன்பின், ஞாபக சக்தி, பணி ஒருங்கிணைப்பு திறன், திட்டமிடல் திறன் குறைந்து விடும்.மேலும், 45 - 49 வயதுக்குள் ஆண்களும், பெண்களும், 3.6 சதவீத மூளைத்திறனை இழந்து விடுகின்றனர். அதன்பின், காரணத்தை ஆராயும் திறன், புரிந்து கொள்ளும் திறன், ஞாபகசக்தி ஆகியவை, வெகுவாக குறைய துவங்கும்.வயதான பருவத்தில், நாம் தொடர்ச்சியாக மூளையின் செல்களை இழந்தபடியே இருப்போம். நரம்பணுக்களில் செய்திகளை கடத்தும் பகுதியான, 'டெண்ட்ரைட்ஸ்' அதிக அளவில் சிதைவடையும். 65 - 70 வயதுக்குள் ஆண்களுக்கு, 9.6 சதவீதமும், பெண்களுக்கு, 7.4 சதவீதமும் மூளை இழப்பு ஏற்படும்.இதுதவிர, 80 வயதில், நம் மூளை சிறிது எடையை இழந்து, அளவிலும் சிறிது சுருங்கி விடும். மூளை சுருங்கு வதால், அறிவாற்றல் சார்ந்த திறமைகள் குறையும். வயதானவர்களுக்கு ஞாபக சக்திக்கு உதவும், 'ஹிப்போ காம்பஸ்' சுருங்குவதால், அவர்களுடைய நினைவாற்றல் குறைய துவங்கும்.தொடர்ந்து ஏதாவது படித்துக் கொண்டிருப்பது, மூளையை ஆரோக்கியமாக வைக்க உதவும். வாரத்தில் குறைந்தது மூன்று நாட்கள், தொடர்ந்து, 45 நிமிடம் நடப்பது, மூளைக்கு நல்லது. தினமும், எட்டு மணிநேரம் உறங்குவது, ஞாபக மறதி அபாயத்தை குறைக்கும்.உயர் ரத்த அழுத்தம், மூளை சுருங்குவதை வேகப்படுத்துவதுடன், மூளைத்திறன் குறைபாட்டுக்கும் வழிவகுக்கும் என்பதால், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.

Read more...

குழந்தை ஆரோக்கியமாக இருப்பதற்கான அறிகுறி.

புதன், 20 ஜூன், 2018

8 மதிப்பெண்வாங்கினால், 'பாஸ்!'
குழந்தை நல மருத்துவர், தனசேகர் கேசவலு: குழந்தை பிறந்ததும், தலை உச்சி நன்றாக மூடியிருக்கிறதா; சிசுவின் கண்களில் சிவப்பு நிறம் இல்லாமல் இருக்கிறதா; இதயத் துடிப்பு, கை மற்றும் கால்களில் நாடித் துடிப்பு; ஆணோ, பெண்ணோ, பாலின உறுப்பு சரியாக இருக்கிறதா; மலத் துவாரம் இருக்கிறதா; இடுப்பெலும்பு, கால் மூட்டு, பாதம், தொப்புள், முதுகெலும்பு, தோள்பட்டை எலும்பு சரியாக இருக்கின்றனவா என, மருத்துவர், 'செக்' செய்வார்.பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை வருவது, நார்மலான விஷயம் தான். இது, சராசரியாக ஒரு வாரம் வரை இருந்து சரியாகி விடும். பிறந்த குழந்தையின் உச்சந்தலை வழியாக வெப்பம் வெளியேறும் என்பதால், தலையையும், கூடவே பாதத்தையும் மூடியே வைக்க வேண்டும்.பிறந்த, 48 மணி நேரத்துக்குள் குழந்தை கறுப்பாக, முதல் மலம் கழிக்க வேண்டும். இது, குழந்தை ஆரோக்கியமாக இருப்பதற்கான அறிகுறி. அப்படிப் போகவில்லை எனில், மலத் துவாரத்தை, 'செக்' செய்ய வேண்டும். தாயின் உடல் சூட்டிலேயே குழந்தையை வைத்திருக்க வேண்டும்; சீம்பால் கொடுப்பதை தவற விடக்கூடாது.ஒரு குழந்தை பிறந்த உடனேயே, அதன் சருமத்தின் நிறம், இதயத் துடிப்பு, அழுகை, கை, கால்களை உதைப்பது, மூச்சு விடுதல் என, இரண்டு மதிப்பெண் வீதம், 10 மதிப்பெண் வழங்குவர் மருத்துவர்கள்.சருமத்தின் நிறம், 'பிங்க்'காக இருந்தால், இரண்டு மதிப்பெண். உடல் முழுக்க, 'பிங்க்' நிறம்; ஆனால், கை கால்களில் மட்டும் நீல நிறம் இருந்தால், ஒன்று; உடல் முழுக்க நீல நிறம் இருந்தால், ஜீரோ.ஒரு நிமிடத்துக்கு, 100 இதயத் துடிப்புகளுக்கு மேலே இருந்தால், இரண்டு மதிப்பெண். 100க்கும் குறைவாக இருந்தால், ஒன்று; துடிப்பு இல்லையென்றால், ஜீரோ. சத்தமாக அழுதால், இரண்டு; சத்தமில்லாமல் முகத்தில் மட்டும் அழுகை தெரிந்தால், ஒன்று; அழுகையே இல்லையென்றால், ஜீரோ.கை, கால்களை நன்கு உதைத்துக் கொண்டால், இரண்டு; பலவீனமாக உதைத்துக் கொள்கிறது என்றால், ஒன்று; கை, காலை அசைக்கவே இல்லை எனில், ஜீரோ.சத்தமாக அழுகிற பிள்ளை மூச்சு விடுவதிலும், இரண்டு மதிப்பெண் வாங்கி விடும். பலவீனமாக அழுகிற குழந்தையின் மூச்சும் பலவீனமாக இருக்கும் என்பதால், ஒன்று; மூச்சில்லை என்றால், ஜீரோ மதிப்பெண்.இதில், குறைந்தபட்சமாக, எட்டு மதிப்பெண் வாங்கினால், அந்த குழந்தை, 'பாஸ்' என அர்த்தம். இதற்கும் மேல், ஒன்பது - 10 என்றால், அன்றைய, 'ஹாஸ்பிடல் டாப்பர்' அந்தக் குட்டி தான்.ஆனால், இந்த மதிப்பெண் டெஸ்டில், குழந்தை முதலில், 10 வாங்கி, அடுத்த, ஐந்து நிமிடத்தில், ஆறு வாங்கினால், பிரச்னை இருப்பதாக அர்த்தம். இதுவே முதல் நிமிடத்தில், ஆறு வாங்கி, ஐந்து நிமிடத்தில், 10 மதிப்பெண் வாங்கினால், குழந்தையை அம்மாவிடம் பால் குடிக்க அனுப்பி விடலாம்.ஆனால், தொடர்ந்து, குழந்தை, ஐந்து - ஆறு மதிப்பெண்ணிலேயே இருந்தால், 'எமர்ஜென்சி கேர்' சிகிச்சை அளிக்கப்படும். இதை பச்சிளம் குழந்தை நிபுணர் பார்த்துக் கொள்வர்; எனவே கவலை வேண்டாம்.

Read more...

கரு வளர்ச்சி முதல், குழந்தை பிறப்பு வரை


கருத்தரித்தவுடன் ஓய்வு தேவையில்லை! கரு வளர்ச்சி முதல், குழந்தை பிறப்பு வரை கூறும், சென்னையை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் தனசேகர் கேசவலு: கருவில் முதுகுத்தண்டு வளரத் துவங்கும் முதல் மாதத்தில், அதற்கு தேவையான, 'போலிக் ஆசிட்' சத்து, அம்மாவின் உடலில் இருந்து கிடைக்க வேண்டும். கர்ப்பிணிக்கு அந்த சத்து குறைபாட்டை நீக்க, கருத்தரித்தல் உறுதி செய்யப்பட்ட உடனேயே மருத்துவர், போலிக் ஆசிட் மாத்திரையை பரிந்துரைப்பர்.உடனடியாக குழந்தை பெறும் முடிவில் இருந்தால், மருத்துவ ஆலோசனையுடன், திருமணமான உடனும்; ஓர் இடைவெளிக்குப் பின், குழந்தை பெறும் முடிவில் உள்ளோர், கருத்தரிப்பதற்கு முன்னரே மருத்துவ ஆலோசனையுடன் இந்த மாத்திரையை எடுக்கலாம். கருவுற்ற முதல் மூன்று மாதங்கள், தாம்பத்யத்தை தவிர்க்க வேண்டும். அந்த நேரத்தில் உறவு கொண்டால், வயிற்றின்மீது அழுத்தும் கனம் காரணமாக, ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சில பெண்களுக்கு, கருவின் நஞ்சுக்கொடி, கருப்பை வாயின் பின்பக்கமே இருக்கும். இவர்கள் உறவு கொள்ளும் போது, ரத்தப்போக்கு ஏற்பட அதிக சாத்தியங்கள் இருக்கின்றன.அதேபோல், கருத்தரித்தவுடன் ஓய்வு தேவையில்லை. அசவுகரியமாக உணரும் வேலைகளையும், வயிற்றை அழுத்தும்படியான வேலைகளையும் மட்டும் தவிர்த்தால் போதுமானது. 30களின் ஆரம்பத்தில் திருமணம் செய்து, 30களின் மத்தியில் கருத்தரிக்கிற பெண்களை, 'ஹை ரிஸ்க் கேட்டகரி'யில் வகைப்படுத்தலாம். காய்ச்சாத பச்சை பாலில், கிருமிகள் இருக்கும் என்பதால், கர்ப்ப காலத்தில் அருந்தக் கூடாது. முன் தினம் சமைத்த உணவை, மறுநாள் சாப்பிடக் கூடாது. அசைவ உணவுகளை, சமைத்த நான்கு மணி நேரத்துக்குப் பின், சாப்பிடக் கூடாது. பிரிஜ்ஜில் வைத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். புளித்த தயிரை உணவில் சேர்க்கக் கூடாது.கருத்தரித்த முதல் ஆறு மாதங்களில், கருவின் உடல் பாகங்கள் உருவாகும். அப்போது அம்மாவுக்கு நோய் தாக்கினால், குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால் தான், கருத்தரித்த உடனே, தடுப்பூசி போடப்படுகிறது.சுகப் பிரசவத்தின் போது, குழந்தையின் தலை சற்று பெரிதாகவோ, அம்மாவின் ஜனன பாதை சிறியதாக இருந்தாலோ, 'போர்செப்ஸ்' பயன்படுத்தி, குழந்தை வெளியே எடுக்கப்படும்.அதேபோல், நஞ்சுக்கொடி கருப்பையின் வாய்க்கு பின்புறத்தில் இருப்பது, அம்மாவின் இடுப்பு எலும்பு சிறியதாக இருப்பது, செயற்கை முறை கருத்தரிப்பில் குழந்தைகளை பத்திரமாக எடுக்க வேண்டிய தேவை. தாய்க்கு நீரிழிவு இருப்பது, குழந்தையின் இதய துடிப்பு குறைவது அல்லது அதிகரிப்பது போன்ற மருத்துவ காரணங்களால், சிசேரியன் செய்யப்படும்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets