உங்கள் வருகைக்கு நன்றி

கரு வளர்ச்சி முதல், குழந்தை பிறப்பு வரை

புதன், 20 ஜூன், 2018


கருத்தரித்தவுடன் ஓய்வு தேவையில்லை! கரு வளர்ச்சி முதல், குழந்தை பிறப்பு வரை கூறும், சென்னையை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் தனசேகர் கேசவலு: கருவில் முதுகுத்தண்டு வளரத் துவங்கும் முதல் மாதத்தில், அதற்கு தேவையான, 'போலிக் ஆசிட்' சத்து, அம்மாவின் உடலில் இருந்து கிடைக்க வேண்டும். கர்ப்பிணிக்கு அந்த சத்து குறைபாட்டை நீக்க, கருத்தரித்தல் உறுதி செய்யப்பட்ட உடனேயே மருத்துவர், போலிக் ஆசிட் மாத்திரையை பரிந்துரைப்பர்.உடனடியாக குழந்தை பெறும் முடிவில் இருந்தால், மருத்துவ ஆலோசனையுடன், திருமணமான உடனும்; ஓர் இடைவெளிக்குப் பின், குழந்தை பெறும் முடிவில் உள்ளோர், கருத்தரிப்பதற்கு முன்னரே மருத்துவ ஆலோசனையுடன் இந்த மாத்திரையை எடுக்கலாம். கருவுற்ற முதல் மூன்று மாதங்கள், தாம்பத்யத்தை தவிர்க்க வேண்டும். அந்த நேரத்தில் உறவு கொண்டால், வயிற்றின்மீது அழுத்தும் கனம் காரணமாக, ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சில பெண்களுக்கு, கருவின் நஞ்சுக்கொடி, கருப்பை வாயின் பின்பக்கமே இருக்கும். இவர்கள் உறவு கொள்ளும் போது, ரத்தப்போக்கு ஏற்பட அதிக சாத்தியங்கள் இருக்கின்றன.அதேபோல், கருத்தரித்தவுடன் ஓய்வு தேவையில்லை. அசவுகரியமாக உணரும் வேலைகளையும், வயிற்றை அழுத்தும்படியான வேலைகளையும் மட்டும் தவிர்த்தால் போதுமானது. 30களின் ஆரம்பத்தில் திருமணம் செய்து, 30களின் மத்தியில் கருத்தரிக்கிற பெண்களை, 'ஹை ரிஸ்க் கேட்டகரி'யில் வகைப்படுத்தலாம். காய்ச்சாத பச்சை பாலில், கிருமிகள் இருக்கும் என்பதால், கர்ப்ப காலத்தில் அருந்தக் கூடாது. முன் தினம் சமைத்த உணவை, மறுநாள் சாப்பிடக் கூடாது. அசைவ உணவுகளை, சமைத்த நான்கு மணி நேரத்துக்குப் பின், சாப்பிடக் கூடாது. பிரிஜ்ஜில் வைத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். புளித்த தயிரை உணவில் சேர்க்கக் கூடாது.கருத்தரித்த முதல் ஆறு மாதங்களில், கருவின் உடல் பாகங்கள் உருவாகும். அப்போது அம்மாவுக்கு நோய் தாக்கினால், குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால் தான், கருத்தரித்த உடனே, தடுப்பூசி போடப்படுகிறது.சுகப் பிரசவத்தின் போது, குழந்தையின் தலை சற்று பெரிதாகவோ, அம்மாவின் ஜனன பாதை சிறியதாக இருந்தாலோ, 'போர்செப்ஸ்' பயன்படுத்தி, குழந்தை வெளியே எடுக்கப்படும்.அதேபோல், நஞ்சுக்கொடி கருப்பையின் வாய்க்கு பின்புறத்தில் இருப்பது, அம்மாவின் இடுப்பு எலும்பு சிறியதாக இருப்பது, செயற்கை முறை கருத்தரிப்பில் குழந்தைகளை பத்திரமாக எடுக்க வேண்டிய தேவை. தாய்க்கு நீரிழிவு இருப்பது, குழந்தையின் இதய துடிப்பு குறைவது அல்லது அதிகரிப்பது போன்ற மருத்துவ காரணங்களால், சிசேரியன் செய்யப்படும்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets