உங்கள் வருகைக்கு நன்றி

விளையாட்டு விபரீதமானது

வெள்ளி, 13 டிசம்பர், 2013

பெரம்பூர் அடுத்த புளியந்தோப்பு நாகாத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (37). ரிக்ஷா ஓட்டி வருகிறார். இவரது மகன் சஞ்சய் (11), அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று விடுமுறை என்பதால் அதே பகுதியில் உள்ள சுந்தரம் 1-வது தெருவில் வசிக்கும் அத்தை சுதா வீட்டுக்கு சென்றான். சுதாவுக்கு குழந்தைகள் உள்ளனர். அவர்களுடன் சஞ்சய் விளையாடிக் கொண்டிருந்தான்.

கதவில் இருந்து ஸ்கிரீன் துணியை எடுத்துகழுத்தில் சுற்றிக் கொண்டு குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டினான் சஞ்சய். அப்போதுஎதிர்பாராதவிதமாக துணி கழுத்தை இறுக்கமாக சுற்றிக் கொண்டது. மூச்சுவிட முடியாமல் சிறுவன் தவித்தான். வெளியே சென்றிருந்த சுதாஅந்த நேரத்தில் வீடு திரும்பினார். சஞ்சய் சுயநினைவின்றி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பதற்றத்துடன் அவனை ஸ்டான்லி மருத்துவமனைக்கு தூக்கி சென்றார். 
டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டுசஞ்சய் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனால் சுதா கதறினார். இதையடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுகுடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets