உங்கள் வருகைக்கு நன்றி

சென்னை பல்கலை, தனியார் கல்லுாரிகளில் இலவச கல்வி வழங்கப்படுகிறது.

புதன், 4 ஜூலை, 2018

பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, சென்னை பல்கலை சார்பில்தனியார் கல்லுாரிகளில் இலவச கல்வி வழங்கப்படுகிறது. இந்த திட்டம், மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெறும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும், அவர்களின் குடும்பத்துக்கும் வழிகாட்டும் வகையில், சென்னை பல்கலை நடத்தும், இலவச மாணவர் சேர்க்கை, எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.பல்கலையின் பெரும் முயற்சியால், 80க்கும் மேற்பட்ட முன்னணி
கல்லுாரிகள், இலவச கல்வி திட்டத்தில் மாணவர்களை சேர்க்க முன்
வந்துள்ளன.சென்னை பல்கலையின் துணைவேந்தர் துரைசாமி, பதிவாளர் சீனிவாசன் மேற்பார்வையில், பேராசிரியர் ஜோதி சிவஞானம் தலைமையிலான இலவச மாணவர் சேர்க்கை கமிட்டியினர், இலவச திட்டத்துக்கு மாணவர்களை தேர்வு செய்கின்றனர். இந்த திட்டத்தில், 2017ம் ஆண்டில், 200 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டு, 600 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு, ஜூன், 29 முதல், சென்னை பல்கலையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, மாணவர் தேர்வு நடந்து வருகிறது. நேர்முகத் தேர்வு முடிந்து, இந்த வார இறுதியில் இலவச கல்விக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், மூன்று ஆண்டுகளும், கல்விக் கட்டணம் செலுத்த தேவை இல்லை. கட்டண சுமையை, அவர்கள் படிக்கும் அந்தந்த தனியார் கல்லுாரிகளே ஏற்றுக்கொள்கின்றன.மற்ற பல்கலைகளும், இந்த திட்டத்தை, தங்கள்இணைப்பு கல்லுாரிகளில் செயல்படுத்தினால், மாநிலம் முழுவதும், பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெறும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், தரமான உயர் கல்வியை இலவசமாக பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டணம் திரும்ப கிடைக்கும் : இலவசக் கல்வி திட்டத்தில், லயோலா கல்லுாரி, ஸ்டெல்லா மேரீஸ், விவேகானந்தா, எத்திராஜ், டி.ஜி.வைஷ்ணவா, குருநானக், ஏ.எம்.ஜெயின் என, முன்னணி கல்லுாரிகளில், பி.காம்., - பி.எஸ்சி., என, முன்னணி படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த திட்டத்தில் தேர்வாகும் மாணவர், ஏற்கனவே ஒரு கல்லுாரியில், ஒரு பாடப்பிரிவில் சேர்ந்திருந்தால், அவர் இலவச கல்வி திட்டத்தில் தேர்வாகும் போது, அந்த கல்லுாரி இடத்தைவிரும்பினால் அவருக்கு ஒதுக்கப்படும். அந்தகல்லுாரியில், அவர் செலுத்திய கட்டணமும் திரும்ப வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

'வெளிப்படைத்தன்மை' : இலவசக் கல்வி திட்டத்தில், மிக வெளிப்படைத் தன்மையுடன், எந்த சிபாரிசுக்கும் இடமின்றி, மாணவர்களை தேர்வு செய்கிறோம். அதனால், இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாங்கள் நிர்ணயித்துள்ள தகுதிக்கு உரியவர்களே, பெரும்பாலும் விண்ணப்பிக்கின்றனர். மற்ற வசதியுள்ள மாணவர்கள், தாங்களாகவே விண்ணப்பிப்பதில்லை. இந்த திட்டத்தின் வெற்றிக்கு அதுவும் முக்கிய காரணம்

துரைசாமி, துணைவேந்தர், சென்னை பல்கலைக்கழகம்

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets