உங்கள் வருகைக்கு நன்றி

குழந்தைக்கு தாய்பாலின் முக்கிய பங்கு.

புதன், 11 ஜூலை, 2018


பச்சிளம் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியில், முக்கிய பங்கு வகிப்பது, தாய்ப்பால் தான். பொதுவாக, நிறை மாதத்தில் பிறந்த குழந்தை, ஒரு நாளுக்கு குறைந்தது, 3 - 4 மணி நேரத்துக்கு ஒரு முறை, அம்மாவிடம் பால் அருந்த வேண்டும். குறை மாதத்தில் பிறந்த குழந்தை எனில், இந்த இடைவேளை இரண்டு, மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை என, சற்று குறையும். குடித்த தாய்ப்பால் ஜீரணித்து, தயிர் போல சிறிதளவு வெளியேறினால் பிரச்னை இல்லை. ஆனால், செரிக்க முடியாமல், தாய்ப்பாலை அப்படியே குழந்தை வாந்தி எடுத்தால், உடனே கவனிக்க வேண்டும். வாந்தி, பச்சை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது ஆபத்தின் அறிகுறி.பிறந்த, 10 - 15 நாட்கள் வரை, குழந்தையின் எடை, 10 - 15 சதவீதம் குறையும். அதன்பின், குழந்தை தினமும், 15 - 20 கிராம் வரை எடை கூடும்; இந்த அளவு, குழந்தைக்கு குழந்தை வேறுபடும். பிறந்த குழந்தையின் தலையில், இரண்டு குழிகள் இருக்கும். ஒன்று, உச்சிக்குழி. இரண்டாவது தலையின் பின் பக்கத்தில் இருக்கும். முன் குழி சிறிது சிறிதாக மூட, 18 மாதமும், பின் குழி, 9 - 12 மாதங்களில் மூடிவிடும்.குழந்தையின் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், முன் குழியானது ஆழ்ந்து காணப்படும். மூளைக்குள் நீர் அதிகமாக இருந்தால், குழிப்பகுதியில் கை வைத்து பார்த்தால், லேசான வீக்கம் தெரியும். அந்த காலப் பாட்டிகள் சிலர், குழந்தைக்கு தலைக்கு குளிப்பாட்டிய பின், உச்சிக்குழியில் ஈரம் போக, அந்த இடத்தில் விபூதி அல்லது முகத்துக்கு உபயோகிக்கும் பவுடரை வைப்பர். இவற்றையெல்லாம் செய்யக் கூடாது. குழந்தையின் உச்சிப் பகுதியில் இயல்பாகவே உஷ்ணம் அதிகமாக இருக்கும். அதனால் ஈரம் இருந்தாலும், தானாகவே காய்ந்து விடும்.குழந்தையின் வயிற்று வலியை, 'கிரைப் வாட்டர்' நீக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை. 1800களில் மலேரியாவை குணப்படுத்த கண்டறியப்பட்ட மருந்து தான், கிரைப் வாட்டர். அது வயிற்று வலியை சரி செய்வதாக யாரோ கூற, அதனுடன் ஆல்கஹாலை கலந்து விற்க ஆரம்பித்து விட்டனர். அதனால் தான், கிரைப் வாட்டர் குடித்த குழந்தைகள், ஆழ்ந்து துாங்குகின்றனர். தாயின் கதகதப்பு தேவைப்பட்டாலும், டயாப்பரில், சிறுநீர், மலம் தங்கினாலும், குழந்தைகள் சிணுங்குவர். இவை தவிர, அதிகமான ஓசை, சொர சொரப்பான டிரஸ், பெர்ப்யூம், பவுடர் வாசனை கூட, குழந்தையை அழ வைக்கலாம்.குழந்தையின் முகத்தில், பவுடர் போடவே கூடாது. உலர்வு தன்மைக்காகவும், மூத்திர வாடையை தவிர்ப்பதற்காகவும் மட்டும், தொடை பகுதிகளில் போடலாம். அதையும் கைகளால் தொட்டு தடவ வேண்டும்; 'பப்' பயன்படுத்த வேண்டாம். இரும்புச் சத்துக்கான சொட்டு மருந்து, வைட்டமின் சொட்டு மருந்துகளை, டாக்டர் கூறினால் மட்டுமே கொடுக்கலாம்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets