உங்கள் வருகைக்கு நன்றி

சிறு துவக்கம், நிச்சயம் கைகொடுக்கும்.

செவ்வாய், 18 செப்டம்பர், 2018


விளையாட்டுப் பொருட்களை, விளையாடி முடித்த பின் எடுத்து வைக்க, ஒன்றாம் வயதிலிருந்தே, குழந்தையை பழக்க வேண்டும். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்க கற்றுக் கொடுத்தால், பொறுப்பு உணர்வும், நேர மேலாண்மையும் அவர்களுக்கு கைகூடும்.குழந்தைகளை, ஆறு, ஏழு மாதங்களில் இருந்தே, தின்பண்டங்கள், பொம்மைகளை மற்றவர்களுடன் பகிரும் பழக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, ஸ்நாக்ஸ் பாக்சில் கூடுதலாக இரண்டு பிஸ்கெட், சாக்லேட் வைத்து, 'உன் ப்ரெண்டு யாராச்சும் கேட்டா, 'ஷேர்' பண்ணு' என்று சொல்லி அனுப்பலாம். எதிர்காலத்தில் உங்கள் குழந்தை தலைமைப் பண்புடன் விளங்க, இந்த சிறு துவக்கம், நிச்சயம் கைகொடுக்கும்.குழந்தைகளுக்கு, 2 வயதுக்குள், 'டாய்லெட் ட்ரெய்னிங்' கொடுப்பது அவசியம். சாப்பிடும் முன், விளையாடிய பின் கைகளைக் கழுவுவது,  இரு வேளை பல் துலக்குவது மற்றும் குளிப்பது என, ஆரோக்கிய விஷயங்களையும், வளர வளரக் கற்றுக் கொடுக்கலாம். மூன்று வயதுக்குப் பின், குழந்தைகளுக்கு பணத்தின் மதிப்பு குறித்து கூறலாம். தினமும் அவர்களுக்கு பாக்கெட் மணி கொடுத்து, உண்டியலில் சேமிக்கச் சொல்லலாம்.அவர்களின் அத்தியாவசியத் தேவைக்கு, பெற்றோர் அனுமதியுடன், சேமிப்புப் பணத்தில் இருந்து எடுத்து செலவிட அனுமதிக்கலாம். பணத்தின் மதிப்பை உணர்வதால், பார்க்கும் பொருட்களை எல்லாம் அடம் பிடித்து கேட்கும் பழக்கம் அவர்களை அண்டாது. குழந்தைகளின் வயதுக்கும், ஆர்வத்துக்கும் ஏற்ற புத்தகங்களை வாங்கிக் கொடுத்தால், ஒரு குட்டி ஜீனியசை உருவாக்க முடியும்.பத்து வயது குழந்தைகளுக்கு, 'ஓர் இடத்திலோ அல்லது யாரிடமோ பேசும்போது, நீ மட்டுமே பேசாமல், மற்றவர்கள் சொல்வதையும் உள்வாங்க வேண்டும்' என, வலியுறுத்த வேண்டும்.அதேபோல, குழந்தைக்கு அதுவரை தெரியாத விஷயம் பற்றிய பேச்சு வந்தால், 'அதெல்லாம் எனக்கு தெரியாது' என்று ஒதுங்காமல், புதிய விஷயங்களை கவனித்து கேட்கஅறிவுறுத்தலாம்.உணவு உண்ணும் போது சிந்தாமல், மிச்சம் வைத்து வீணாக்காமல் இருக்கப் பழக்கப்படுத்த வேண்டும்.பொது இடங்களில் சாப்பிடும்போது ஸ்பூன், போர்க், டவல் பயன்படுத்தினால் கடைபிடிக்க வேண்டிய, 'டேபிள் நாகரிகம்' மற்றும் மற்றவர்களின் அறைக்குச் செல்லும் முன், சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியை கேட்கும் நாகரிகத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும்.மற்றவர்களுக்கு உதவும் பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.அழகு, அறிவு,பொருளாதாரம் என, எதன் அடிப்படையிலும், அடுத்தவர்களின் மனம் புண்படும்படி தாழ்த்திப் பேசுவது தவறு என்பதை சொல்லி கொடுப்பதன் வாயிலாக, உங்கள் குழந்தையை மனித நேயத்துடன் வளர்த்தெடுக்கலாம்.


கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets