உங்கள் வருகைக்கு நன்றி

தேர்வு எழுத போறீங்களா?.

வெள்ளி, 1 மார்ச், 2019


இடைவிடாமல் விழுந்து விழுந்து படிக்கும் மாணவர்களை விட, இடையிடையே ஓய்வு எடுத்து படிக்கும் மாணவர்களால் தான், அதிகம் ஞாபகம் வைத்திருக்க முடிகிறது...' என்கின்றனர், ஜப்பான், 'பிசியலாஜிக்கல் சயின்ஸ்' நிறுவன ஆராய்ச்சியாளர்கள்.
* துாக்கம் குறைந்தால், கற்றுக்கொள்ளும் திறன், நோய் எதிர்ப்பு சக்தி, உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறன் போன்ற முக்கிய அம்சங்கள் பாதிக்கப்படும்.

* 'தேர்வு நேரத்தில், விடிய விடிய கண் விழித்து படிப்பது, தேர்வில் எதிர்மறையான பயனை கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது...' என, எச்சரிக்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.

* மாணவர்களே... ஆண்டு இறுதி தேர்வில், சிறப்பான மதிப்பெண் பெற வேண்டுமா? தேர்வு நடைபெறும் வாரத்தில், 'போதுமான நேரம் துாங்கி எழுங்கள்...' என்கின்றனர்.

* தேர்வு சமயங்களில், இரவு, 8:00 மணி நேரம் ஆழ்ந்து துாங்கி எழுந்த மாணவர்கள், தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்றிருப்பது அமெரிக்காவின், 'பேய்லர்' பல்கலை கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

* உடலின் நீர்சத்துக்கும், அறிவாற்றலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக, 'ஜியார்ஜிய இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

* 'உடலில் நீர்ச்சத்து குறைந்தவர்களுக்கு, அடிக்கடி கவனச் சிதறல் ஏற்படுவதால், தேர்வு காலங்களில், தினசரி, தேவையான அளவு தண்ணீர் குடிக்க தவறாதீர். தேர்வுக்கு செல்லும் முன், ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து சென்றால், அது, மூளையில், 'ஆல்பா' அலைகளை அதிகரிக்க செய்து, நினைவாற்றல் குறையாமல் இருக்க உதவுகிறது...' என்கின்றனர்.

* தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற வேண்டுமா... 'காலை உணவை தவிர்க்காதீர்... தேர்வு காலங்களில் எடுத்துக் கொள்ளும் உணவுகள் எளிமையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும்... காலை உணவை தவிர்க்கும் மாணவர்களுக்கு, தேர்வு நேரத்தில், கவனச் சிதறல் ஏற்படும்...' என, கண்டறிந்துள்ளனர், இங்கிலாந்து நாட்டு ஆராய்ச்சியாளர்கள்.

* மேலும் சில குறிப்புகள்: மேலும், 'கீரை வகைகள், 'ஒமேகா - 3' சத்துள்ள பருப்பு வகைகள் சிகப்பு நிற காய்கறிகள், பெர்ரி மற்றும் ஆரஞ்சு பழங்கள் ஆகியவை மூளையை இளமையாக வைக்க உதவுகிறது...' என்கின்றனர்.

* எப்போதும் காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து படிக்கவும். உங்கள் இடப்புறம், மின்விளக்கு இருக்கும்படி அமைப்பது நல்லது. நீங்கள் படிக்கும் இடத்தில், தேர்வு அட்டவணையை கண்ணில் படும்படி ஒட்டி வையுங்கள்

* தொடர்ந்து படிக்காமல், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சற்று அமைதியாக, 10 நிமிடம் கண்களை மூடி, படித்ததை நினைவுபடுத்திய பின், மீண்டும் படிக்க ஆரம்பித்தால், மூளை சுறுசுறுப்பாகும். ஞாபகத்துக்கு வராத பகுதியை மறு வாசிப்பு செய்து, புதிய பகுதிக்கு சென்று படிக்கலாம்

* துாக்கம் வருவது போல் இருந்தால், தோப்புக்கரணம் போட்டால், துாக்கம் போய், மூளை சுறுசுறுப்பாகி விடும். தண்ணீரை சிறிது சிறிதாக பருகுவதால், அதிக சக்தி பெற முடியும் 

* அடிக்கடி மாதிரி தேர்வுகள் எழுதி பயிற்சி பெறுவது, எழுதும் வேகத்தையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும்

* தேர்வு எழுத துவங்கும் முன், கேள்விகளை ஒருமுறைக்கு இருமுறை நன்கு படித்து, எதை எழுத போகிறீர்கள் என்பதை தீர்மானித்து, ஒரு பக்கத்திற்கு, 20 வரிகளாக, அழகான கையெழுத்துடன், தலைப்புகள் கொடுத்து, அடித்தல் திருத்தலின்றி எழுதவும்

* முக்கியமானவற்றிற்கு அடிக்கோடிட்டு, மதிப்பெண்ணுக்கு ஏற்றவாறு தேவையான படங்கள், 'க்ராப்ட்' போன்றவற்றோடு, சரியான கேள்வி எண்ணுடன் எழுதவும்


பெண்களின் உணர்வுகளை புரிந்துக்கொள்வதை விட பெண்களுக்கும் உணர்வுகள் உண்டு என்று புரிபவனே சிறந்தவன் 

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets