உங்கள் வருகைக்கு நன்றி

'எம்.ஆட்டோ'

ஞாயிறு, 17 மார்ச், 2019


ஆட்டோ ஓட்டும் பெண்கள்!

மக்கள் ஆட்டோ' தலைமை நிர்வாகி, யாஸ்மின்: 2013ல், நிறுவனர் மன்சூர் அலிகான் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, 'நம்ம ஆட்டோ' என்ற பெயரில், ஒரு சேவையை துவக்கினர். 

ஒருசில காரணங்களால், நண்பர்களைப் பிரிந்து, 'மக்கள் ஆட்டோ' என்ற பெயரில், புதிய நிறுவனத்தை துவங்கினார், மன்சூர் அலிகான். தொழில்நுட்பம், மொபைல் உபயோகத்திற்கு ஏற்றது  போல், 'எம்.ஆட்டோ' என, சுருக்கமாக வைத்துள்ளோம்.  எங்களுடைய முக்கிய குறிக்கோள், பெண்களுக்கு அதிகாரம், முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதே. 2014-ல், வாழ்வாதாரமற்ற,
10
பெண்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு பயிற்சி அளித்து, ஆட்டோ ஓட்டுனர் ஆக்கினோம். இன்னும் பல பெண்களைஎம்.ஆட்டோவில்
இணைத்து, அவர்களுக்கு, இந்த, 10 பெண்களை பயிற்சி அளிக்க வைத்தோம். தற்போது, 330 பெண்கள், ஆட்டோ ஓட்டுனராகி உள்ளனர்.
ஆட்டோவை, நாங்கள் வாங்கிக் கொடுப்பதில்லை. பயிற்சி பெற்றவுடன் ஆட்டோ வாங்குவதற்கான நிதி வசதி ஏற்பாடு செய்து, 'ஷ்யூரிட்டி'யும் கொடுத்து வாங்க, உதவி செய்வோம்.  அடுத்த கட்ட திட்டமாக, திருநங்கையருக்கும் பயிற்சி அளித்து ஆட்டோ ஓட்டுனராகவோ, அலுவலக டெலி காலிங் வேலைக்கோ அமர்த்தி, அவர்களுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளோம். வாடிக்கையாளரின்n நம்பிக்கை தன்மையை பெற, 'பானிக் பட்டன்' என்ற வசதியை உருவாக்கி உள்ளோம்.
வாடிக்கையாளர்கள் இந்த பட்டனை அழுத்தினால், உடனே எங்களுக்கு தகவல் வந்துஉங்களுக்கான உதவி செய்யப்படும். இந்த பட்டன், ஆட்டோ மற்றும் மொபைலில் எம்.ஆட்டோ, 'ஆப்' பிலும் இருக் கும்.
பெண்களுக்கு, பெண் டிரைவர் வேண்டுமென்றால், இந்த, 'ஆப்'பில் தேர்வு செய்து கொள்ளலாம். 'ஸ்மார்ட் போன்' இல்லாதவர்களுக்காக, தொலைபேசி மையமும் உள்ளது.  சென்னை, மதுரை, திருச்சியில் இச்சேவை உள்ளது. திருநெல்வேலியில் இப்போது தான் துவங்கி உள்ளோம்.
பெண் ஓட்டுனர்களுக்கென, பாதுகாப்பு நெறிமுறை, தற்காப்பு பயிற்சியும் அளிக்கப்படுகின்றன. ஓட்டுனர்களுக்கு பசி இருக்கக் கூடாது.
அவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும், அரிசியோ அல்லது அவர்களுக்கு தேவையான ஒரு சில பொருட்களையோ அவர்களது நடத்தை, ஈடுபாட்டை பொறுத்து வாங்கித் தருகிறோம். மொபைலில் எம்.ஆட்டோ, 'ஆப்' பிலும் இருக்கும்.

பெண்களுக்கு, பெண் டிரைவர் வேண்டுமென்றால், இந்த, 'ஆப்'பில் தேர்வு செய்து கொள்ளலாம். 'ஸ்மார்ட் போன்' இல்லாதவர்களுக்காக, தொலைபேசி மையமும் உள்ளது. 

சென்னை, மதுரை, திருச்சியில் இச்சேவை உள்ளது. திருநெல்வேலியில் இப்போது தான் துவங்கி உள்ளோம்.
பெண் ஓட்டுனர்களுக்கென, பாதுகாப்பு நெறிமுறை, தற்காப்பு பயிற்சியும் அளிக்கப்படுகின்றன. ஓட்டுனர்களுக்கு பசி இருக்கக் கூடாது.
அவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும், அரிசியோ அல்லது அவர்களுக்கு தேவையான ஒரு சில பொருட்களையோ அவர்களது நடத்தை, ஈடுபாட்டை பொறுத்து வாங்கித் தருகிறோம்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets