உங்கள் வருகைக்கு நன்றி

பொதுமக்களுக்கு உதவ இணையதளம் !

செவ்வாய், 3 அக்டோபர், 2017

இன்சூரன்ஸ், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் தொலைந்தால், புகார் செய்யும் இணைய தள சேவை.   லைசென்ஸ் போன்ற முக்கியமான அடையாள அட்டையை தொலைந்தாலோ, காவல் நிலையத்தில் புகார் கொடுத்து தான் ஆக வேண்டும். அப்போது தான் பாதிக்கப்பட்டவர்களால், இன்சூரன்ஸ் பணத்தையோ, புது அடையாள அட்டையோ வாங்க முடியும். அப்படியே புகார் கொடுத்தாலும், ஸ்டேஷனுக்கும், கோர்ட்டுக்கும் அலைய வேண்டியிருக்கும். உதாரணத்துக்கு வாகன விபத்து வழக்கிற்கு, போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தால், வழக்கு பதிவு செய்வர். இதற்கே ஒருநாள் ஆகிவிடும். பின், மோட்டார் வாகன வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் தகவல் அளித்து, விபத்து நடந்த இடம், வழக்கை விசாரிக்கும் அதிகாரியின் கடிதம், சிகிச்சை பெற்ற மருத்துவமனை உள்ளிட்ட, 12 ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இறுதியாக தீர்ப்பு வந்ததும், அதை இன்சூரன்ஸ் கம்பெனியில் கொடுத்து, வாங்க வேண்டும். இதற்குள் பல மாதங்கள் ஆகிவிடும். அதேபோல் தான், லைசென்ஸ் தொலைந்தாலும், அலைந்து திரிந்து வாங்க வேண்டும்.  பொதுமக்களுக்கு உதவ, www.tnpolice.gov.in என்ற இணைய தளத்தை உருவாக்கி உள்ளார்கள்.     செப்., 1ம் தேதி 2017 முதல், இந்த இணையதளம் செயல்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டோர், தங்கள் பெயர், முகவரி, புகார் போன்ற விபரங்களை கொடுத்துவிட்டால் தானாக பதிவாகிவிடும். பின்னர் போலீசார் அனைத்தையும் கவனித்து கொள்வர். பாஸ்போர்ட், ஆதார், லைசென்ஸ் போன்ற அடையாள அட்டையை தொலைத்தவர்களுக்கு உடனடியாக, 'லாஸ்ட் டாக்குமென்ட் ரிப்போர்ட்' கிடைத்துவிடும். விபத்து ஏற்பட்டால் மட்டும், ஒரே முறை போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் கொடுத்தால் போதுமானது. பின் உங்கள் போன் நம்பரை கொடுக்க வேண்டும். கோர்ட்டிலும், பிற இடங்களில் ஒப்படைக்க வேண்டிய அனைத்து ஆவணங்களையும் போலீஸ் சேகரித்து விடும்.
அதை சரியான நேரத்தில், அந்த இணையதளத்திலும் காவல் துறையால் பதிவு செய்யப்படும். ஆவணங்களை பெற விரும்பினால், அந்த இணையதளத்தில் நம் தொலைப்பேசி எண்ணை பதிவு செய்தால், ஓ.டி.பி., வரும். அதைப் பயன்படுத்தி நாமும் அதை பார்க்கலாம். நெட் பேங்க் வசதியை பயன்படுத்தி, பயனீட்டாளர்கள் ஓர் ஆவணத்திற்கு, 10 ரூபாயும், இன்சூரன்ஸ் கம்பெனிகள், 100 ரூபாயும் கட்டி இணையத்தில் இருந்து, பிரின்ட் எடுத்து கொள்ளலாம். அதன்பின் ஆவணங்கள் சம்பந்தப்பட்ட, 'இ - மெயில்' முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் வீண் அலைச்சல் தவிர்க்கப்படுவதோடு, நேரமும் மிச்சப்படும். இந்த நடைமுறையை புரிந்து கொள்ள முடியாதவர்கள், அருகில் உள்ள காவல் நிலையம் சென்று அங்குள்ளவர்களிடம் சொல்லி பதிவு செய்யலாம். இதுதவிர, போன் மற்றும், 'இ - மெயில்' முகவரி இரண்டும் இல்லாதவர்கள், தங்களுக்கு தெரிந்தவர்களின் முகவரியை தரலாம்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets