உங்கள் வருகைக்கு நன்றி

குழந்தைகளை நேர்மறையாக அணுகவும் பழக்குங்கள்.

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

தோல்வியை பழகவும்
கற்று கொடுங்கள்!
தாங்கள் சொல்வதை குழந்தைகள் கேட்பதில்லை என்பது, இன்று பெரும்பாலான பெற்றோரின் புலம்பலும், புகாருமாக இருக்கிறது. 
எனவே, உங்கள் குழந்தைகள் எதை செய்ய வேண்டும் என நினைக்கிறீர்களோ, அதற்கான, 'ரோல் மாடலாக' நீங்களே மாற 
வேண்டும்.
பள்ளி செல்லும் வயதில், காலை சீக்கிரமாக எழ, அவர்களை பழக்க வேண்டும். காலையில் எழுவது, உணவு உறங்கச் செல்வது அனைத்தும், நேரப்படி நடக்க வேண்டும். எழுந்ததும், 'பெட் காபி பழக்கம் வேண்டாம்.
ருசி, பசி தாண்டி, உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை பற்றி கூறி, சாப்பிடும் ஆர்வத்தை ஏற்படுத்துங்கள். சமையல் வேலைகளிலும், குழந்தைகளைப் பங்கு பெறச் செய்யுங்கள். உணவை, வீணாக்காமல் சாப்பிடப்  பழக்குங்கள்.
வயதில் பெரியவர் உட்பட யார் கேள்வி கேட்டாலும், அதை முதலில் உள்வாங்கி, உரிய மரியாதையுடன் பதில் சொல்லப் பழக்குங்கள். 
சாப்பிடும் முன் கை கழுவுவதில் துவங்கி, படுக்கைக்குச் செல்லும் போது, பல் துலக்குவது வரை, அனைத்தையும் தாமாகவே செய்ய பழக்க வேண்டும்.
பார்ப்பதை எல்லாம் வாங்கித் தர கேட்டால், குழந்தைக்கு அது தேவையா, உங்கள் பொருளாதாரத்துக்கு அது சரிவருமா என்பதை, முதலில் நீங்கள் சிந்தித்து, அதை சொல்லி புரிய வையுங்கள். இதனால், வளர்ந்த பிறகும் அநாவசியச் செலவு செய்யும்  பழக்கம் வராது.
குர்ஆனை மனப்பாடம் செய்வது என, அந்தந்த வயதுக்கான, 'கோல் செட்' செய்து கொடுங்கள். அதை அடையும் போது குழந்தையை பாராட்டி, அடுத்த, 'கோலை' நோக்கி உத்வேகப் படுத்துங்கள்.
தன்னை எந்தச் சூழலிலும் பாதுகாத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வை, அவர்களுக்கு ஏற்படுத்துங்கள். பாலியல் ரீதியான தொந்தரவு நேர்ந்தால், உங்களிடம் தெரியப்படுத்தும் தெளிவையும், நம்பிக்கையையும் கொடுங்கள்.
எதையும் புரிந்து, படிக்கக் கற்றுக் கொடுங்கள். 'கிரியேட்டிவிட்டி'க்கும் முக்கியத்துவம் கொடுங்கள். விளையாட்டு எந்த துறையில் விருப்பமாக இருக்கின்றனர் என்பதை அறிந்து, அதில் ஊக்கப்படுத்துங்கள்.
வியர்க்க வியர்க்க விளையாடுவது, பசித்த பின் சாப்பிடுவது, இவை இரண்டும் சிறப்பு. குழு விளையாட்டுகள், நட்பு பாலத்தை உருவாக்குவதுடன், தோல்வியை பழகவும் கற்றுக் கொடுக்கும். இடத்துக்கு ஏற்ப கண்ணியமாக உடுத்தும் நாகரிகத்தையும், தவறு செய்தால் மன்னிப்புக் கேட்கவும், உதவி பெற்றால், நன்றி சொல்லவும் கற்றுக் கொடுங்கள்.  அனைவரையும் இன்முகத்துடன் எதிர்கொள்ளவும், எல்லா விஷயங்களையும் நேர்மறையாக அணுகவும் பழக்குங்கள்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets