உங்கள் வருகைக்கு நன்றி

இறைவா நீ அழகிய படைப்பாளன்.

திங்கள், 12 ஆகஸ்ட், 2019


பொதுவாகவே, உமிழ் நீரை பார்த்தால், அனைவருக்கும் அருவருப்பு வரும். ஆனால், ஒரு நாளுக்கு, 0.75 - 1.5 லிட்டர் வரை, வாயில் உமிழ் நீர் சுரக்கிறது. ஒரு மனிதனின் வாழ்நாள் முழுவதும் சுரக்கும் உமிழ் நீரை வைத்து, இரண்டு நீச்சல் குளத்தை நிரப்பலாம்.
* உடல் முழுவதும், ஆக்சிஜனை கொண்டு சேர்ப்பது, ரத்த சிவப்பணுக்கள். இவை, நரம்பு வழியாக, ஒரு முறை உடல் முழுவதும் சுற்றி வர, ஒரு நிமிஷம் போதும்

* பெரும்பாலும் அனைவருக்கும் கறுப்பு நிறத்தில் தான், கருவிழி இருக்கும். என்ன தான் கறுப்பாக இருந்தாலும், பிறக்கும்போது, நீல நிறத்தில் தான் இருக்கும். வெளிச்சத்தில் இருக்கிற, புற ஊதா ஒளிக்கற்றை தான், குழந்தைகளின் கண்ணுக்கான நிறத்தை கொண்டு வரும்

* நம் கை, கால்களில் நகம் வெட்டின மாதிரி இருக்கும்; கொஞ்ச நாளிலேயே வளர்ந்துவிடும். ஆனால், வேரிலிருந்து முழுமையாக நகம் வளர, கிட்டத்தட்ட ஆறு மாதம் ஆகும்

* பொதுவாகவே, அனைவருக்கும் அடிக்கடி தோல் உரியும். வாழ்நாள் முழுவதும், உடம்பிலிருந்து மொத்தமாக உரிந்து விழும் தோலின் எடை, கிட்டத்தட்ட, 18 கிலோ

* உடலில் மிக நீளமான உறுப்பு, தோல் தான். நன்றாக வளர்ந்த ஆணின் தோலை முழுதாக நீட்டி அளந்தால், 20 அடிக்கு வரும்

* நம் சிறுநீரகத்தில், 1 மில்லியன், அதாவது,10 லட்சம், 'பில்டர்'கள் உள்ளன. சிறுநீரகத்தால், ஒரு நிமிஷத்துக்கு, 1.3 லிட்டர் ரத்தத்தை சுத்தம் செய்ய முடியும்

* பெண்களின் கருப்பையில், ஐந்து லட்சம் கருமுட்டைகள் உருவாகும்; ஆனால், 400 முட்டைகளுக்கு தான், குழந்தையாக உருவாக வாய்ப்பு கிடைக்கும்

* நம் மேல் வரும், வியர்வை நாற்றம், ஒவ்வொருவரின் அடையாளம். இரட்டையர்களைத் தவிர, உலகத்தில் அனைவருக்கும், இந்த நாற்றம் மாறுபடுமாம்

* நம் உடலில் ஐந்து லட்சம் வியர்வை சுரப்பிகள் உள்ளன. இந்த வியர்வை சுரப்பிகள் ஒவ்வொன்றும், தினமும், 400 மி.லி., வியர்வையை சுரக்கின்றன 

* சுற்றுப்புறத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும், 90 சதவீத விபரங்கள், பார்வை மூலமாக தான் கிடைக்கிறது

* உங்களுக்கு நீங்களே, 'கிச்சு கிச்சு' மூட்ட முடியாது

* ஒரு பவுண்ட், அதாவது, 454 கிராம், சிமென்ட் கான்கிரீட், அதே எடையிலான மனித எலும்பு என, இரண்டையும் வைத்து சோதனை செய்யபட்டது. அதில், மனித எலும்பு, கான்கிரீட்டை விட, நான்கு மடங்கு வலுவானது என, நிரூபணமாகி உள்ளது

* எதையாவது சுவைக்க வேண்டுமெனில், அந்த பொருள், முதலில், உமிழ் நீரில் கரைய வேண்டும். இல்லையெனில், நம்மால் சுவையை உணர முடியாது 

* சராசரியாக, ஒரு ஆண், ஒரு நாளைக்கு, 10 மில்லியன், அதாவது, 1 கோடி, விந்தணுவை உற்பத்தி செய்ய முடியும் 

* மனிதர்கள், வெப்ப ரத்த உயிரிகள் என்பது, அனைவருக்கும் தெரியும். நம் உடல், 36.5 முதல் 37.5 டிகிரி செல்ஷியஸ், வெப்ப நிலையை தாங்கும். உடல் வெப்பத்தை வைத்து, 3.5 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைக்க, 30 வினாடி போதும்

* நாம் எவ்வளவு உயரமாக இருந்தாலும், துாங்கும்போது, 1 செ.மீ., உயரம் குறைந்து விடுவோம். காரணம், நம் முதுகெலும்பில் உள்ள குறுத்தெலும்புகள், துாங்கும்போது சுருங்கி விடும்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets