உங்கள் வருகைக்கு நன்றி

100 பேரில் ஒருவரை தேர்வு செய்தால், அந்த ஒருவர், நீங்களாக இருக்க வேண்டும்.

புதன், 3 ஜூலை, 2013


தமிழகத்தில், ஆயிரக்கணக்கான பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும், லட்சக்கணக்கான மாணவர்கள், பொறியியல் படிப்பை முடித்து வெளியேறுகின்றனர்.
ஒரு பொறியாளர் வேலைக்கு, 17 பேர் போட்டியிடுவதாக, சமீபத்திய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. பொறியியல் படிப்பை முடித்து வெளியில் வரும் மாணவர்கள், வேலைக்குரிய தகுதியை வளர்த்து கொள்வதில்லை. இதனால், முன்னணி நிறுவனங்களில் வேலை கிடைக்காத நிலை நிலவுகிறது. வேலை தேடுபவர்கள், கூடுதல் திறமைகளை வளர்த்து மட்டுமே, தனித்து நிற்க முடியும்.
ஒரு நிறுவனத்தில், 100 பேரில் ஒருவரை, வேலைக்கு தேர்வு செய்தால், அந்த ஒருவர், நீங்களாக இருக்க வேண்டும். போட்டிகள் நிறைந்த உலகத்தில், பாடத்தில் கூடுதல் அறிவு, தகவல் தொடர்பு திறன் வளர்த்தல் உள்ளிட்ட கூடுதல் திறமைகளை வளர்த்து கொண்டால், வேலைவாய்ப்புகளை எளிதில் பெற முடியும்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புடன், ஸ்மார்ட் போனில், அப்ளிக்கேஷன் டெவலப் செய்ய தெரிந்தால், கூடுதல் திறமைக்காக இத்துறையில் எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கலாம். அது போல, சிவில் இன்ஜினியரிங் படிப்புடன், "ஆட்டோ கேட்" படிப்பையும் முடித்தால், வேலை வாய்ப்புகளை பெறலாம்.
படிப்பு சார்ந்த தொழில் திறனை வளர்த்து கொண்டால் எளிதில் முன்னேறலாம். உபயோகப்படும் ஒரு பொருளை கஷ்டப்பட்டு தேடி, தேடி தேர்ந்தெடுப்பதை போல, எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கல்லூரிகளை தேர்வு செய்வதிலும், கவனம் செலுத்த வேண்டும். 
கடந்த 1970ல், 10 சதவீதம் மாணவர்கள், சொந்த செலவில் வெளிநாட்டு சென்று கல்வி கற்றனர். தற்போது, 90 சதவீதம் மாணவர்கள் சொந்த செலவிலும், 10 சதவீதம் பேர் வங்கி கடனில், படிக்க செல்கின்றனர். வெளிநாட்டு சென்று கல்வி கற்கும் மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும், இரண்டு லட்சம் பேர், உயர்கல்விக்காக வெளிநாடு செல்கின்றனர்.
சீனாவுக்கு அடுத்து, இந்தியர்கள் தான் அதிகமாக, வெளிநாடு சென்று படிக்கின்றனர். வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் மோசமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. வெளிநாட்டு சென்று படிக்கும் மாணவர்கள், பல்கலைக்கழகங்களை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். தலைசிறந்த பல்கலைக்கழகத்தில் படித்தால் மட்டுமே, 100 சதவீத வேலை கிடைக்கும்.
வெளிநாட்டு பல்கலைக்கழகம் குறித்து, இணையதளங்களில் தரும் தகவல்களை நம்பி, வெளிநாடு செல்ல கூடாது. பல்கலைக்கழகம் குறித்து முழுவதும் விசாரித்து விட்டு செல்ல வேண்டும்.
ஐ.ஏ.எஸ்., தேர்வை, 5 லட்சம் பேர் எழுதி, 2 சதவீதம் பேர், மெயின் தேர்வுக்கு செல்கின்றனர். ஐ.ஐ.டி.,யில், 4.50 லட்சம் பேர் எழுதி, 2 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுகின்றனர். ஐ.ஐ.எம்.,ல் 2 லட்சம் பேர் எழுதி, 1.5 சதவீதம் மாணவர்களே தேர்ச்சி பெறுகின்றனர்.
ஜப்பானில், 4,000 பல்கலைக்கழகமும், அமெரிக்காவில் 3,700 பல்கலைகழகமும், சீனாவில் 2,500 பல்கலைக்கழகங்களும் உள்ளன. ஆனால், இந்தியாவில் 560 பல்கலைகளே உள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தகுதியான பல்கலைக்கழகங்கள் இல்லை.
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில், இளங்கலை பட்டம் படிக்க, 15 லட்சம் வரையும், முதுகலை பட்டம் படிக்க, 40 லட்சம் ரூபாய் வரையும் செலவாகிறது. பிரான்ஸ், ஹங்கேரி பான்ற நாடுகளில், கல்விக் கட்டணங்கள் குறைவு. 

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets