உங்கள் வருகைக்கு நன்றி

விளையாட்டுகளில் சிறந்த விளங்கும் மாணாக்கருக்கு உதவித்தொகை

சனி, 4 மே, 2013


திறமையான இளம் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனம் மாணவர்களை தேர்ந்தெடுத்து உதவித்தொகை வழங்கப்படுகின்றது.
இந்த உதவித்தொகையானது 14 வயது முதல் 19 வயது வரை உள்ள, விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
குழு மற்றும் தனி விளையாட்டுதேசிய அளவில் நடைபெறும் விளையாட்டுகளில் பங்கு பெற்று 1-5 வரை ஜூனியர் அல்லது சப்-ஜூனியர் பிரிவை சேர்ந்த மாணவர்கள்தேசிய மற்றும் இந்திய விளையாட்டுகளில் பங்கு பெற்று விளையாடிய மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் மாணவர்கள் விண்ணப்பப் படிவங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கொடுக்கப்பட்டுள்ள அனைத்து கேள்விகளையும் பூர்த்தி செய்து, அத்துடன் சமீபத்தில் எடுத்த புகைப்படம் போன்றவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.
விளையாட்டு வீரர்களின் செயல்திறன் அடிப்படையில் 3 வருடங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
மேலும் விவரங்கள் அறிய http://www.iocl.com/aboutus/indianoilsports.aspx என்ற இணையதளத்தை அணுகலாம்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets