உங்கள் வருகைக்கு நன்றி

அடிக்கடி காய்ச்சல் வந்தால் ?

ஞாயிறு, 16 ஜூலை, 2017

நம் உடலில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்லெட் என, மூன்று வகையான செல்கள் இருக்கின்றன. இதில், ஒரு மைக்ரோ லிட்டர் ரத்தத்தில், வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை, 4,500 - 11 ஆயிரமாக இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கையின் அளவு குறைந்தால், கிருமிகளுக்கு எதிராக போராடும் நம் உடலின் ஆற்றல் குறைந்து விடும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டின் அறிகுறியாக, முதலில் சோர்வு ஏற்படும். அது மட்டுமின்றி, வானிலையில் மாற்றம் ஏற்பட்டால், தலைச்சுற்றல், வாந்தி வருவது போன்றவை, குறைந்த நோய் எதிர்ப்பு சக்தியின் அறிகுறிகளாகும். அடிக்கடி தொற்று ஏற்படுவதும், மிக முக்கியமான அறிகுறி. சிறுநீரகத்தில் ஏற்படும் சிறு தொற்று, அடிக்கடி வயிற்று போக்கு, ஈறுகளில் வீக்கம் மற்றும் ரத்தம் கசிவது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஜலதோஷம், காய்ச்சல் வருவது இயல்பு. ஆனால், மாதத்துக்கு ஒருமுறை என்றால், மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.
வெள்ளை அணுக்கள் குறைந்திருந்தால் தான், மாதம் ஒருமுறை அல்லது இருமுறை காய்ச்சல், ஜலதோஷம் வரும். அடிக்கடி ஒவ்வாமை ஏற்படுவது, காயங்கள் ஆற நீண்ட நாள் ஆவது ஆகியவையும் இதன் அறிகுறியாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலே போதுமான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து விடும். நாட்டுச் சர்க்கரை, தேன், வெல்லம், கருப்பட்டி போன்றவற்றை, சர்க்கரைக்கு பதிலாக உட்கொள்வது மிகவும் நல்லது.
தினமும் கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரை, பருகுவது நல்லது. 8 - 10 மணி நேரம் வரை உறங்க வேண்டும்; சுத்தமாக இருக்க வேண்டும். காய்கறிகளை நறுக்கி விட்டு கழுவக் கூடாது; கழுவி விட்டுத்தான் நறுக்க வேண்டும். கீரையை சமைப்பதற்கு முன், மூன்று முறை நன்றாக கழுவ வேண்டும். மஞ்சள் துாள், மிளகாய்த்துாள், மசாலா துாள் போன்றவற்றை, வீட்டிலேயே  தயாரிப்பது சிறந்தது. மண் பாத்திரங்களில் சமையல் செய்வது, ஆர்கானிக் காய்கறிகள், பழங்களை பயன்படுத்துவது போன்றவை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.மன அழுத்தம் ஏற்பட்டால், வீட்டிலோ, நண்பர்களிடமோ பேசலாம். அப்படி முடியாத பட்சத்தில், மனநல மருத்துவரிடமோ, ஆலோசகரிடமோ சொல்லலாம். தனிமையில் இருப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.
ஏதேனும் ஒரு உடற்பயிற்சி, விளையாட்டில் ஈடுபடுவது, உடல், மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். உடற்பயிற்சி, உடலை சீராக வைத்திருப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.சராசரியாக ஒரு நாளைக்கு நம் உடலுக்கு, 50 - 60 மி.கி., புரதச்சத்து அவசியம். பருப்பு மற்றும் பயறு வகைகள், மாமிச உணவுகள், சோயா பீன்ஸ், கறுப்பு உளுந்து, கொள்ளு, பச்சைப் பயறு, பட்டாணி, ராஜ்மா, கடலை பருப்பு போன்றவற்றில் புரதச்சத்து அதிகமாக உள்ளது; இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் உட்கொள்ளலாம்.
மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், ஏலக்காய் போன்றவற்றை, தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
http://c13.zedo.com/OzoDB/0/0/0/blank.gif


கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets