உங்கள் வருகைக்கு நன்றி

ஆரோக்கிய செய்திகள் மூன்று

வியாழன், 12 ஜூலை, 2012


நீரிழிவு வாய்ப்பை குறைக்கும் பொன்னி அரிசி

இந்தியாவில் பல்வேறு வகையான அரிசிகள் விளைவிக்கப்படுகின்றன. அதில் முதல் இடத்தில் இருப்பது பொன்னி அரிசியாகும். சாதாரண அரிசியில் இருந்து வேறுபடும் இது, விலையும் சற்று அதிகம்தான்.
இந்த நிலையில், சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையம் செய்துள்ள ஒரு ஆராய்ச்சியில், பொன்னி அரியில் நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கும் தன்மை உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது, பொன்னி அரிசியில் கிலைசெமிக் இன்டெக்ஸ் என்பது குறைவாக இருப்பதும், இதனால், பொன்னி அரிசி சாதத்தை சாப்பிட்டதும், உணவு மூலமாகப் பெறும் சர்க்கரை, ரத்தத்தில் குறைவான வேகத்தில் கலப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
உலகத்தில் உள்ள 235 அரிசிகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பொன்னி அரிசிக்கு சிறப்பிடம் கிடைத்துள்ளது. இந்த ஆராய்ச்சியின் மூலம் நீரிழிவு பாதித்தவர்கள் மற்றும் பாதிக்க வாய்ப்பு அதிகம் உள்ளவர்கள் தங்களது ஆரோக்கியத்துக்கு சிறந்த அரிசியை சாப்பிட வாய்ப்பு ஏற்படும் என்பது உண்மை.


சுற்றுச்சூழலை காரணம் காட்டி தப்பிக்க முடியாது

நாங்கள் புகைப்பதால் என்ன ஆகி விடப்போகிறது. காற்றில் கலந்துள்ள நச்சுப் புகைகளை சுவாசித்தாலே வியாதி வரத்தான் போகிறது என்று கூறி பல புகைப்பிடிக்கும் பழக்கத்துக்குள்ளானவர்கள் தப்பித்துக் கொள்ள பார்க்கிறார்கள்.
ஆனால், சர்வதேச ஆய்வு ஒன்று கூறுவது என்னவென்றால், சுற்றுச்சூழலில் கலந்திருக்கும் மாசு ஏற்படுத்தும் பாதிப்பை விட, பக்கத்தில் இருப்பவர் புகைப்பிடிப்பதால் அதனை சுவாசிக்கும் நபருக்கு 17 மடங்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சாதாரண இடத்தில் இருக்கும் காற்றில் உள்ள மாசு, அவ்விடத்தில் ஒருவர் புகைப் பிடிக்கும் போது 16 மடங்கு அதிகமாக மாசடைகிறது என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.
எனவே, இனி சாலையில் நடந்து போகும் போது, பேருந்து நிறுத்தத்தில், பொது இடங்களில் புகைப் பிடிக்கும் போது, நாம் நம் உடலைக் கெடுத்துக் கொள்வதோடு மட்டுமில்லாமல், நம்மோடு சாலையில் நடப்பவர்களின் ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவிக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும் நல்லதுதான்

 பொதுவாக தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு நல்லது என்று சொல்வார்கள். ஆனால், தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தையை விட, தாய்க்கு ஏராளமான நன்மைகள் விளைகின்றன என்பது இப்போதைய உண்மை.
அதாவது, குழந்தை பிறந்ததும் பல பெண்களுக்கு உடல் எடை கூடி விடுகிறது. ஒல்லியாக இருப்பவர்கள் கூட, குண்டாகிவிடுகின்றனர். குண்டாக இருப்பவர்களை சொல்லவே வேண்டாம். இதற்குக் காரணம் மகப்பேறு கால உணவும், ஓய்வும் தான். ஆனால், இப்பிரச்சினையை எளிதாக தீர்க்கலாம். அதற்கு ஒரே வழி குழந்தைக்கு குறைந்தது 1 ஆண்டு முழுவதுமாக தாய்ப்பால் அளிக்க வேண்டும்.
குறைந்தது 6 மாதத்துக்கு மேல் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு உடல் எடை கூடுவதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மார்பகப் புற்றுநோய், இதய நோய்கள் ஏற்படுவதில் இருந்து தடுக்கப்படுகிறது.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்க்கு ஒரு நாளைக்கு 500 கலோரி இழப்பு ஏற்படுகிறது. இது ஜிம்முக்குச் சென்று கடினமான உடற்பயிற்சி எடுப்பதன் மூலம் இழக்கும் சக்திக்கு நிகராகும்.
எனவே தாய்ப்பால் கொடுத்து உங்கள் குழந்தையை ஆரோக்கியமாக்குங்கள். நீங்களும் ஆரோக்கியமாக வாழுங்கள்.



கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets