உங்கள் வருகைக்கு நன்றி

ரத்த அழுத்தம் எதற்கு அறிகுறி:?

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012


ரத்த அழுத்தம் ஏற்பட்டால் அது சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம் என இங்கிலாந்து மருத்துவ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதுசம்மந்தமாக அவர்கள் நடத்திய ஆய்வில் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு முன்பு பலருக்கு ரத்த அழுத்த நோய் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. 

எனவே சர்க்கரை நோயின் அறிகுறியாகத்தான் ரத்த அழுத்தம் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் ரத்த அழுத்தம் ஏற்பட்டால் அது இதயத்தில் உள்ள பாதிப்பாகவும் இருக்கலாம். சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் அதுவும் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். 

எனவே ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உடனடியாக இதயம், சிறுநீரகம் ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும். மேலும் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா? என்றும் பரிசோதித்து கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளர்.

நீரிழிவு நோய்க்கு கோவைக்காய்...

சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கொஞ்சம் நம்முடைய உணவுப் பழக்க முறைகளில் கூடுதல் கவனம் செலுத்தினால் நீரிழிவு நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். சாதாரணமாக எல்லா காய்கறி அங்காடிகளிலும் தாராளமாகக் கிடைக்கக் கூடியது தான் கோவைக்காய்.

கொஞ்சமாய் துவர்ப்புச் சுவையுடைய இந்த கோவைக்காயில் பொறியல், வற்றல், கூட்டு, சாம்பார் செய்து உணவில் சேர்த்து கொள்வதுண்டு. மற்றும் கோவைக் காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகு பொடி, சீரகப் பொடி, இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து விட்டால் அவ்வளவு தான் கோவைக்காய் பச்சடி தயார்.

இதனை வாரம் 2 நாள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப் புண் குணமாகும். நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் சேரும் சர்ககரை அளவைக் கட்டுப்படுத்தும். ஆனால் நிறைய பேர் பாகற்காயை ஒதுக்குவது போல் கோவைக் காயையும் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் ஒதுக்கி விடுகிறார்கள்.

நாக்கு சுவையை மட்டுமே கருதாமல் உடல் நலத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டால் எல்லா உணவுகளும் விருப்பமுடையதாகத் தான் ஆகும். இதனைப் பொதுவாக எல்லோருமே சாப்பிடலாம். பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம். பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பி விட்டாலே வாய்ப்புண் ஆறிடும்.

வயிற்றுப் புண் இருப்பவர்கள் வாரம் 2 நாள் கோவைக்காயை சேர்த்துக் கொள்ளலாம். கோவைக்காயை பீன்ஸ் போல பொறியல் செய்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும் ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் சேர்த்து அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம். முக்கியமா முற்றின கோவைக்காய் வாங்க கூடாது பிஞ்சு காயா பார்த்து வாங்கணும். பிஞ்சு காய் இளம்பச்சை நிறத்தில் இருக்கும். 

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets