உங்கள் வருகைக்கு நன்றி

பப்பாளி சாகுபடியும், தொழில் வாய்ப்புகளும்

ஞாயிறு, 15 ஜனவரி, 2012


பலராலும் விரும்பி உண்ணப்படும் பப்பாளி சாகுபடியை வேலூர் மாவட்ட விவசாயிகள் மேற்கொண்டு நல்ல லாபம் பெறலாம் என்கிறார் நாட்டறம்பள்ளி தோட்டக்கலை உதவி இயக்குநர் பா.இளங்கோவன்.


 
சிறந்த ரகங்கள்: பப்பாளியில் ஆண், பெண் என இருவகை உண்டு. இருபாலினமும் கொண்ட ரகங்களும் உண்டு. கோ.3, கோ.7 போன்ற ரகங்கள் ஆண் பூ மற்றும் பெண் பூவை ஒரே மரத்தில் கொண்டிருக்கும். இது எளிதில் மகரந்த சேர்க்கை ஏற்பட்டு அதிக மகசூல் கிடைக்கும். பப்பையின் எனப்படும் பப்பாளி பால் எடுப்பதற்கு கோ.2 கோ.5 மற்றும் கோ.6 ரகங்கள் ஏற்றவை.
 கோ.2, கோ.5 ரகங்கள் எக்டேருக்கு 200 முதல் 250 டன் மகசூல் தரும். கோ.3 ரகம் 120 டன் வரை மகசூலும், கோ.7 ரகம் 225 டன் மகசூலும் தரும்.

 இரண்டு முதல் இரண்டரை ஆண்டு வயதுடைய பப்பாளியை ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.

 
விதை அளவு: ஒரு எக்டேருக்கு அரை கிலோ விதை தேவை. இதற்கு 2 கிராம் பவிஸ்டின் மருந்து கொண்டு நேர்த்தி செய்தல் வேண்டும்.
 தொழுஉரம், மண் நிரப்பிய பாலித்தீன் பைகளில் 1 செ.மீ. ஆழத்தில் விதைப்பது நல்லது.

 ஒரு பைக்கு 4 விதைகள் வீதம் ஊன்றி நிழல்படும் இடத்தில் வைத்து பூவாளி மூலம் நீர் ஊற்ற வேண்டும்.

 ஒரு பைக்கு 1 கிராம் வீதம் கார்போபியுரான் 3 கிராம் குருணை மருந்து இட்டு நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும்.

 
நடவு: 60 நாள் நாற்றுகளை 1.8 மீட்டர் இடைவெளியில் நட வேண்டும். ஒரு குழிக்கு தலா 45 செ.மீ. நீளம், அகலம் மற்றும் ஆழம் தேவை. பப்பாளி செடியை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

 
பப்பாளியின் மருத்துவ குணங்கள்
 பப்பாளி பாலை விளக்கெண்ணெயுடன் கலந்து கொடுத்தால் வயிற்றுப் பூச்சிகளை நீக்கலாம். வாய், நாக்கு, தொண்டையில் ரணம் இருந்தால் பப்பாளி பாலை தடவினால் குணமாகும்.

 பப்பாளி காயை சமைத்து உண்டு வந்தால் உடல் எடை குறையும். தாய்ப்பால் பெருகும்.

 நாள்தோறும் ஒரு துண்டு பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால், கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குறையும். செரிப்புத் தன்மை அதிகரிக்கும். மலச்சிக்கல், சிறுநீர் பாதை அழற்சி ஆகியன சீராகும்.

 கனிகளின் சிகரம் என்றும், ஏழைகளின் ஆப்பிள் என்றும் மருத்துவர்களால் வர்ணிக்கப்படுவது பப்பாளி.
பப்பாளி வெப்ப, மிதவெப்ப நாடுகளில் பயிரிடப்படுகிறது. பப்பாளிப் பழத்தில் குளுக்கோஸ், வைட்டமின்கள் ஏ மற்றும் சி அதிக அளவில் உள்ளன. பப்பாளி பழம், இலைகள், வேர்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. பப்பாளிப் பழம் உணவை, குறிப்பாக பருப்புவகை உணவுகள், இறைச்சி போன்றவற்றை எளிதில் செரிக்க வைக்கும் குணம் கொண்டது. 35 கிராம் இறைச்சியை ஒரு கிராம் பப்பாளி செரிக்க வைத்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
பப்பாளிப் பழம் பித்தத்தைப் போக்கும். கல்லீரல், கணையம், சிறுநீரக நோய்களை குணப்படுத்தும். ரத்த சோகைக்கும், புற்று நோய்க்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பப்பாளிக் காயில் இருந்து எடுக்கப்படும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பப்பாயின் என்ற நொதிப் பொருள் (என்ûஸம்) நிறைய மருத்துவ குணம் கொண்டது.
தமிழ்நாட்டில் திண்டுக்கல், பொள்ளாச்சி, கோவை, தருமபுரி மாவட்டங்களில் வணிக ரீதியாகப் பயிரிடப்படுகின்றன. மிதவெப்ப மற்றும் வெப்பப் பிரதேசங்களில், சமவெளிகளில் களிமண் பூமியைத் தவிர மற்ற நிலங்களில் பப்பாளி நன்றாக வளரும். மலைப் பகுதிகளில், 1200 மீட்டர் உயரம் உள்ள பகுதிகளிலும் வடிகால் வசதி உள்ள நிலங்களிலும் பப்பாளி வளரும். ஆண்டு முழுவதும் பப்பாளியைப் பயிரிடலாம் என்றாலும், பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் மே முதல் அக்டோபர் மாதம் வரையிலும் பப்பாளி பயிரிடலாம் என்று வேளாண் அலுவலர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
பப்பாளியின் வயது 24 முதல் 30 மாதங்கள். நடவுக் காலத்தில் அதிக மழை இருக்கக் கூடாது. வேர் பகுதியில் அதிகம் தண்ணீர் தேங்கக் கூடாது. பப்பாளியில் கோ1, கோ2, கோ3, கோ4, கோ5, கோ6, கோ7 மற்றும் கூர்க்கனி டியூ, சூரியா போன்ற ரகங்கள் உள்ளன. இவற்றில் கோ2, கோ5, கோ6 ஆகிய ரகங்கள் சாப்பிடச் சிறந்தவை. கோ2, கோ5 பால் எடுப்பதற்கு ஏற்ற ரகங்கள். பால் எடுத்த பிறகு பழங்களைச் சாப்பிடலாம்.
பப்பாளி நாற்று தயாரிக்க ஏக்கருக்கு 500 கிராம் விதை தேவை. ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கேப்டான் சேர்த்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். தொழுஉரம் மற்றும் மணல் நிரப்பி, பாலித்தீன் பைகளில் பை ஒன்றுக்கு 4 விதை வீதம் நட்டு நாற்று தயாரிக்கலாம். 60 நாள்களில் நாற்று தயாராகிவிடும். பப்பாளி பயிரிட நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது, 1.8 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீ. ல 45 செ.மீ. ல 45 செ.மீ. அளவில் குழிகள் தோண்டி, மண் மற்றும் தொழுஉரமிட்டு நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும்.
வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். செடிகளைச் சுற்றி தண்ணீர் தேங்கக் கூடாது. ஆண், பெண் என இருபால் தன்மை கொண்ட செடிகளை நீக்கியபின், செடி ஒன்றுக்கு 50 கிலோ தழை, மணி, சாம்பல் உரம் மற்றும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா உரமிட்டு நீர் பாய்ச்ச வேண்டும். 4-வது மற்றும் 8-வது மாதங்களில் 0.5 சதவீதம் துத்தநாக சல்பேட், 0.1 சதவீதம் போரிக் அமிலம் கலந்து செடிகளில் தெளித்தால் மகசூல் அதிகம் கிடைக்கும் என்கிறார்கள் வேளாண் அலுவலர்கள்.
செடிகள் பூக்கத் தொடங்கியதும் 15 அல்லது 20 செடிகளுக்கு ஒன்று வீதம் ஆண் செடிகளை விட்டுவைத்து, மற்றவைகளை அகற்றிவிட வேண்டும். கோ3, கோ7 ரகங்களில் இருபால் பூக்கள் கொண்டவைகளை மட்டும் விட்டுவிட்டு, பெண் மரங்களை நீக்கிவிட வேண்டும்.
பப்பாளிக் காய்களில் இருந்து பால் எடுக்க, முதிர்ந்த காய்களில் 2 முதல் 3 இடங்களில் லேசாகக் கீறல் ஏற்படுத்தி, பாலை வடிக்க வேண்டும். அதிகாலை முதல், காலை 10 மணி வரை, 3 அல்லது 4 நாள்களுக்கு ஒருமுறை பால் எடுக்கலாம். பப்பாளிப் பாலை அலுமினியப் பாத்திரம் அல்லது ரெக்ஸின், பாலிதீன் தாள்களில் சேகரிக்கலாம். பாலை சூரிய ஒளி அல்லது 40 டிகிரி சென்டிகிரேடில் செயற்கை உலர் கருவிகளில் உலர்த்தலாம். உலர்த்தத் தாமதம் ஆனால் தரம் பாதிக்கப்படும்.
ஒரு ஹெக்டேருக்கு 3 ஆயிரம் முதல் 3,750 கிலோ வரை பப்பாளி பால் கிடைக்கும். பப்பாளிப் பழங்களைவிட பப்பாளிக் காய்களில் இருந்து எடுக்கப்படும் பாலுக்கு நல்ல விலை கிடைக்கிறது. ஓசூர், பெங்களூர் பகுதிகளில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் நல்ல விலை கொடுத்து வாங்குகின்றன.
இதுகுறித்து கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ஆடூர்குப்பம் கிராமத்தில் பழத்துக்காக பப்பாளி பயிரிட்டுள்ள விவசாயி ஜனார்த்தனம் கூறுகையில், "5 ஏக்கரில் பப்பாளி பயிரிட்டு இருக்கிறேன். ஏக்கருக்கு |70 ஆயிரம் வரை செலவாகிறது. |5 லட்சத்துக்கு மேல் லாபம் கிடைக்கிறது. கடலூர் மாவட்ட அங்காடிகளிலேயே பழங்களை விற்பனை செய்கிறேன்" என்றார்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets