உங்கள் வருகைக்கு நன்றி

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் கீரைகள், பழங்கள்!.

திங்கள், 10 டிசம்பர், 2012


சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கீரைகளுக்கும் உண்டு. கறிவேப்பிலை, தூது வளைக்கீரை, அரைக்கீரை, முசுமுசுக்கைக் கீரை, வெந்தயக்கீரை, துத்திக் கீரை, முருங்கைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, அகத்திக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வல்லாரக்கீரை, கொத்தமல்லிக்கீரை.

இவற்றில் ஏதாவது ஒன்றை சூப் செய்து தினமும் 1 டம்ளர் வீதம் காலை அல்லது மாலை ஒருவேளை சாப்பிட்டு வரலாம், அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

சர்க்கரை நோய்காரர்களுக்கு உகந்த பழங்கள்....

சாத்துக்குடி-1, ஆரஞ்சு-2, ஆப்பிள் (தோலுடன்)-1, கொய்யா (சிறிது)-2, பேரிக்காய் (சிறிது)-2, வெள்ளரிக்காய்-2, அன்னாசிப் பழம்-4 வளையங்கள், தர்பூசணி-1 துண்டு. மேற்சொன்ன பழங்களில் ஏதாவது ஒன்றை குறிப்பிட்டுள்ள வகைகளில் தினமும் உண்ணலாம். உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் பசி அல்லது தாகம் எடுத்தால் வெள்ளரி, அரிசிப் பொரி, மோர் (கருவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம் கலந்தது) கோதுமை உப்புமா, அவித்த சுண்டல், சிறு பயறு, கொண்டைக் கடலை, கொள்ளு, தட்டைபயிறு இவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம்.

எலுமிச்சை சாறு-200 மிலி, வாழைத்தண்டு சூப்-200 மிலி, அருகம்புல் சூப்-200 மிலி, நெல்லிக்காய் சாறு-100 மிலி, கொத்தமல்லி சூப்-100 மிலி, கறிவேப்பிலை சூப்-100 மிலி, இவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் (ஒவ்வொரு நாள் ஒன்று) சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது. எண்ணையில் வறுக்கப்பட்ட அனைத்து அசைவ உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

முட்டை-1 (வெள்ளைக்கரு மட்டும்), மீன்-2 துண்டுகள், கோழிக்கறி-100 கிராம் (அவித்தது), மேற்கண்ட உணவுகளை முறையாக சாப்பிட்டும், தினமும் உடற்பயிற்சியும், நடைப்பயிற்சியும், ஆசனமும் செய்து வந்தால் சர்க்கரை நோய் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets