உங்கள் வருகைக்கு நன்றி

குழந்தைகள் வளர்ந்ததும் டயபடீஸ் ஏற்படுவது ஏன்

வியாழன், 6 டிசம்பர், 2012


வாகன புகைதூசு போன்ற மாசு நிறைந்த சூழலில் வாழும் குழந்தைகள் வளர்ந்ததும் டயபடீஸ் ஏற்படக்கூடும். குண்டாகும் வாய்ப்பும் அதிகம் என்று அமெரிக்க ஆய்வில் எச்சரிக்கப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் சீர்கேடுதூசுபுகை ஆகியவற்றுக்கு இடையே வசிக்கும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி அமெரிக்காவின் ஓகியோ பல்கலைக்கழகம் விரிவான ஆய்வு நடத்தியது. அதன் முடிவுகளை டெய்லி எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது:

மனித உடலுடன் நெருங்கிய தொடர்புடைய எலியின் குட்டிகளைக் கொண்டு இந்த ஆய்வு நடந்தது. மாசுவாகனப் புகை நிறைந்த பகுதிகளில் வாழும் எலிகள் மற்றும் தூய்மையானமாசற்ற பகுதிகளில் வசிக்கும் எலிகள் இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டன. மாசு நிறைந்த பகுதிகளில் வசிக்கும் எலிகளிடம் நடந்த சோதனையில்உடலில் இன்சுலின் அளவு வேகமாக குறைவது தெரிய வந்தது. அதனால்டைப் 2 வகை டயபடீஸ் (பரம்பரை அல்லாதது) ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன்அந்த எலிகள் அதிக எடையுடன் இருந்தது தெரிய வந்தது.

இயற்கையானமாசற்ற பகுதிகளில் வசிக்கும் எலிகளிடம் நடந்த ஆய்வில் ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்கும் இன்சுலின் தடுப்பு சக்தி அதிகரிப்பதையும்உடல் எடையை சீராக பராமரிப்பதையும் அறிய முடிந்தது. இரண்டு எலி குழுக்களையும் சோதனை கூடத்தில் இதே முறையில் பராமரித்தபோது இது உறுதியானது. எனவேஅதிக சுகாதாரசுற்றுச்சூழல் கேடானவாகன புகை நிறைந்த பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் வளர்ந்ததும் டயபடீஸ் ஏற்படும் ஆபத்தும்கூடுதல் எடை போடும் அபாயமும் உள்ளது ஆய்வில் தெரிய வந்தது. இவ்வாறு ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets