உங்கள் வருகைக்கு நன்றி

ஆண் பெண் நட்பு ஆபத்தானது!

வெள்ளி, 21 செப்டம்பர், 2012


* முந்தைய காலங்களில் பெண்கள் ஆண்களிடம் பேசுதையே தவறு என்று இருந்த காலம் மாறி விட்டது. பருவ பெண்கள் எங்கு பார்த்தாலும் தனது பாய்பிரண்ட் என்று சொல்லி கொண்டு உலா வருகின்றனர் தியேட்டர், பீச், பார்க், பேருந்து நிலையம், ரயில் நிலையம் இன்னும் சொல்லிகொண்டே போகலாம் அந்த அளவிற்கு பெருகிவிட்டத ஆண், பெண்பழக்கங்கள். 

* சில பெண்கள் ஆண் நண்பர்கள் இல்லை என்றும் ஆண்கள் பெண் நண்பர்கள் இல்லை என்றும் வருந்தவும் செய்கின்றனர். ஆண் பெண் நட்பால் கலாசாரமே சீரழிந்து வருகிறது என்ற எண்ணமும் சமூகத்தினரிடையே உள்ளது. பள்ளி கல்லூரிகளில் ஆண், பெண் இருவரும் சேர்ந்து படிக்கிறார்கள். இது குழந்தைப் பருவத்திலேயே இயல்பாக பழகும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. 


ஆணும் பெண்ணும் சமூகத்தில் சமமாக, ஒன்றாக இருப்பது நல்லதுதான் என்றாலும், இப்படி இருக்கும்போது ஏற்படும் புரிதலும், தெளிவும் இல்லாத பழக்கம்தான் இன்றைய சீரழிவு நிலைக்கு முக்கிய காரணம். பருவப் பெண்களும் பெற்றோருக்குத் தெரியாமல் ஆண் நண்பர்களுடன் வெளியில் சுற்றக்கூடாது. 


* ஆண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வருவதையும் தவிர்க்க வேண்டும். பரிசுகள் பெறுவதும், போட்டோ எடுத்துக் கொள்வதும் எப்போது வேண்டுமானாலும் பிரச்சினையை உருவாக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். 


* ஜாலியாக இருப்போம் என்று பழகுவதும், உடல் ரீதியாக அத்துமீறலை அனுமதிப்பதும் இறுதியில் உங்களுக்குத்தான் ஆபத்தை கொண்டுவரும் என்பதை மனதில் வையுங்கள். 


* ஆசையை தெரிவித்து நெருங்கும் ஆண்களிடம் பக்குவமாகப் பேசி தவிர்த்து விடுங்கள். நமது லட்சியம் இதுவல்ல என்பதை விளக்கிவிட்டு விலகிச் செல்லுங்கள். 


* தேவையில்லாமல் தொடர்ந்து வரும் ஆண்களைப் பற்றியும், தொல்லை கொடுப்பவர்களை பற்றியும் பெற்றோரிடமும், பொறுப்புக்குரியவர்களிடமும் சொல்லி வையுங்கள். பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets