உங்கள் வருகைக்கு நன்றி

பேஸ்புக் சீரழிவுகள்

சனி, 26 மே, 2012


பேஸ் புக் மூலம் காதலை வளர்த்து ஓட்டலில் கற்பை இழந்து ஏமாற்றப்பட்ட பெண்கள் 2 பேர் வேலூர் ஏடிஎஸ்பியிடம் புகார் செய்தனர். சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ??? அவரது தோழி ???  ஆகியோர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். ??? க்கு பேஸ் புக் மூலம் சதீஷ் ஜெயராம் என்பவர் பழக்கமானார். சதீஷ் நண்பர் ஆனந்த்பாபு. சதீஷ்,  ??? மூலம் ஆனந்த்பாபுவுடன் ??? க்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த 2 ஜோடிகளின் நட்பு பேஸ் புக் மூலம் வளர்ந்தது. பின்னர் தொலைபேசியிலும் நட்பை வளர்த்தனர். கடந்த ஜனவரி மாதம் சதீஷ், ஆனந்த்பாபு ஆகியோர் சென்னைக்கு சென்றனர். 

வேலூரை சுற்றிப்பார்க்கலாம் எனக்கூறி ???,  ??? ஆகியோரை அழைத்துக்கொண்டு வந்துள்ளனர்.   ஆனால் வேலூருக்கு வராமல் ராணிப்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் 2 அறைகள் எடுத்து தங்கினர். ???, சதீஷ் ஆகியோர் ஒரு அறையிலும்,  ???, ஆனந்த்பாபு ஆகியோர் மற்றொரு அறையிலும் தங்கியுள்ளனர். 2 வாலிபர்களும் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி தங்கள் பேஸ் புக் தோழிகளுடன் ஜாலியாக இருந்துள்ளனர்.

பின்னர் கடந்த பிப்ரவரி மாதமும் அந்த பெண்களை ராணிப்பேட்டைக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் ஆனந்த்பாபு, ??? வுடன் தொலைபேசியில் பேசுவதை நிறுத்திக்கொண்டார். கடந்த மார்ச் மாதம் ??? விடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆனந்த்பாபு பேசி, அதே ஓட்டலுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் ??? அங்கு செல்ல மறுத்துவிட்டார்.

ஓட்டலில் தனிமையில் இருந்த காட்சிகளை புகைப்படம் எடுத்து வைத்திருப்பதாகவும், அதனை இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவதாகவும் கூறி ஆனந்த்பாபு மிரட்டியுள்ளார். இந்நிலையில் ??? வும் தன்னை சதீஷ் ஏமாற்றிவிட்டதாக ??? விடம் கூறியுள்ளார். இதுகுறித்து வேலூர் ஏடிஎஸ்பி   முருகேசனிடம் ??? நேற்று புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 பேஸ் புக் மூலம் ஏமாந்தது குறித்து, பாதிக்கப்பட்ட பெண்கள், மேலும் பல தகவல்களை தெரிவித்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த கஜித்ரா, "பேஸ்புக்' மூலம், வேலூரைச் சேர்ந்த ஆனந்த்பாபு என்பவருடன், உல்லாசமாக இருந்து, கற்பை இழந்தார். பின், வேலூர் கூடுதல் எஸ்.பி., முருகேசனிடம் புகார் செய்தார். நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், பேஸ் புக் மூலம் கற்பை இழந்த, மேலும் சில பெண்கள், புகார் கொடுக்க வேலூர் வந்திருந்தனர். அவர்கள் கூறியதாவது: காயத்ரி, கஜித்ராவை ஏமாற்றிய சதீஷ் மற்றும் ஆனந்த் பாபு, வேறு சில பெண்களையும், அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளனர். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு நாள், கிழமை என முறை வைத்து, அழைத்து வந்துள்ளனர். இதற்கு ஏற்றவாறு பேஸ் புக்கில் தகவல் அனுப்புவர். ஒரு பெண்ணை அழைத்து வருவது, மற்ற பெண்ணுக்கு தெரியாது. இதற்கு ஏற்றபடி, ஊர், லாட்ஜ்களை மாற்றி, மாற்றி தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர். கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் உல்லாசமாக இருந்ததால், இவர்களுக்கு உல்லாசம் மட்டுமே குறிக்கோள் என்ற சந்தேகம், கஜித்ராவுக்கு வந்தது.
இதை காயத்ரி தேவியிடம் சொன்ன போது, அவர் நம்பவில்லை. இதனால், ஆனந்த்பாபுவின் தொடர்பை துண்டித்தபோது தான், வீடியோ பிரச்னை வெடித்து, வேறு வழியின்றி அவர் சொல்லும்படி கேட்க நேர்ந்துள்ளது.ஆனந்த்பாபுவின் நண்பர் திலீப். இவர், மரைன் இன்ஜினியரிங் படித்து விட்டு, சிங்கப்பூரில் உள்ள கப்பல் கம்பெனியில் பணிபுரிகிறார். ஆறு மாதம் விடுமுறையில், சொந்த ஊரான ராணிப்பேட்டைக்கு வந்தார். ஆனந்த்பாபு, பேஸ் புக் விஷயத்தை சொல்லவே, அவரும் சில பெண்களுக்கு தகவல் அனுப்பி, அவர்களை வேலூர், திருவண்ணாமலை, சேலம் என அழைத்துச் சென்று, உல்லாசமாக இருந்துள்ளார். பின் திலீப், நண்பர்கள் லூயிஸ், ஆனந்த்ராஜ் ஆகியோருக்கும், பேஸ் புக் மூலம் தகவல் தெரிய வர, அவர்களும் இதே முறையை பின்பற்றி, பல பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதில், இவர்கள் உல்லாசமாக இருக்க ஆன செலவுகள் அனைத்தும், அந்தந்த பெண்களே ஏற்றுக் கொண்டுள்ளனர். கஜித்ரா போல, 16 பெண்கள் சீரழிக்கப்பட்டதாக தெரிகிறது.பேஸ் புக் மோசடியில் சிக்கிய சதீஷ், ஆனந்த்பாபு ஆகியோர், சில மாதங்களுக்கு முன், ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில், நட்சத்திர ஓட்டலில் உல்லாசமாக இருந்தபோது, பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி கைதாகி, ஜாமினில் வந்துள்ளனர். தற்போது, சதீஷ், ஆனந்த்பாபு, திலீப், நித்தியானந்தம் கைது செய்யப்பட்டுள்ளனர். லூயிஸ், சிங்கப்பூருக்கும், ஆனந்த்ராஜ், பெங்களூருக்கும், சில பெண்களை அழைத்து கொண்டு, உல்லாசமாக இருக்கச் சென்றுள்ளனர். உல்லாசமாக இருக்கும்போது, அதை வீடியோவில் படம் எடுத்தவர் லூயிஸ். இவர் வேலூரைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவரையும் உல்லாசத்துக்கு அழைத்துச் சென்று, ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பேஸ்புக்கால் இன்னும் என்ன சீரழிவுகள் ஏற்படப் போகிறதோ ? ஆண்களுடன் பழ்குவதில் அதிகம் எச்சரிக்கையுடன் இருப்பதே பெண்களுக்கு பாதுகாப்பு.
http://c14.zedo.com/OzoDB/0/0/0/blank.gif

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets