உங்கள் வருகைக்கு நன்றி

மாணவர், ஆசிரியர், பெற்றோர் உறவு

ஞாயிறு, 11 நவம்பர், 2012

 அந்த காலத்தில் சொல்லப்பட்ட, "தந்தையுடன் கல்விபோம்சான்றோன் ஆக்கல் தந்தைக்கு கடனேஎழுத்தறிவித்தவன்   மாதாபிதாகுரு  என்பனதற்காலத்தில் செல்லாக் காசாகிவிட்டன. மாணவர்கள்பள்ளியில் கற்பதை விடவெளியுலகில் வேண்டாத விவரங்கள்   பலவற்றை கற்கும் சூழ்நிலையும்சுற்றுப்புறமும் அதிகரித்து விட்டது. நன்றாக படிக்கவில்லையே என்று மாணவர்களை கண்டித்தால்மாணவர்கள் பெற்றோரை அழைத்து வந்துஆசிரியர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட வைக்கின்றனர். "மத்தளத்திற்கு இருபக்கமும் இடிஎன்பதைப் போன்றுமாணவர்கள்பெற்றோர்பள்ளி நிர்வாகி களுக்கிடையே சிக்கிக் கொண்டுகால்பந்து உதை படுவது போன்ற நிலையில் தான்ஆசிரியர்கள் அவதிப்படுகின்றனர். ஆசிரியர்களின் நிலைவேதாளத்திற்கும்பாதாளத்திற்கும் இடையே மாட்டி சிக்கித் தவிக்கும் பரிதாப நிலையாக உள்ளது. "மாணவர்களை திட்டாதீர்கள்கொடிய சொற்களால் வையாதீர்கள்மாணவர்களின் உள்ளம் உடைந்துவிடும்என்றுமனித உரிமை கமிஷன் கூறுகிறது. மாணவர்கள்ஆசிரியரிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்ளும் போதுஆசிரியர்கள் உள்ளம் உடையாதாஆசிரியர்கள் என்ன மரக்கட்டைகளாமாணவர்களுக்கு எதிரிஆசிரியர்கள் என்பது போன்றுநடைமுறை உள்ளதே தவிரகற்றுக் கொடுக்கும் நண்பர்கள்ஆசிரியர்கள் என்ற எண்ணம் மாணவர்களிடம் இல்லை. ஆசிரியர் தொழில் மேன்மையாகக் கருதப்பட்ட காலம் மாறிஆசிரியர் தொழில் ஆபத்தானது என்ற நிலையில்ஆசிரியர்கள் பயந்துபயந்து பதறிப்பதறி செயல்படும் நிலை உருவாகிவிட்டது. மாணவர்கள் கெட்டுப்போக வேண்டுமென்றுஎந்த ஆசிரியரும் விரும்பமாட்டார்அப்படி விரும்பும் ஒரு சிலர்ஆசிரியர்களே அல்ல. இதற்குபெற்றோரின் ஒத்துழைப்பு மிகவும் தேவை. அடிக்கடி பெற்றோர்ஆசிரியர்களோடு தொடர்பு கொண்டால்மாணவர்கள் போக்கு நன்கு அமையும். ஒவ்வொரு மாதமும், "ஓபன் ஹவுஸ்முறையை பின்பற்றிபெற்றோரே நேரில் சென்றுமாணவர்களின் முன்னேற்றத்தை அறிந்துகார்டில் கையெழுத்து இடுவது மிக மிக நல்லது. இதனால்மாணவனின் மனநிலை நன்றாக முன்னேறும். ஆசிரியர்களுக்கு ஆர்வமும் ஏற்படும். வருமுன் காப்பது நல்லதுவந்தபின் பார்ப்போம் என்பது அறிவீனம். இதை பெற்றோர் அறிவது நல்லது.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets