உங்கள் வருகைக்கு நன்றி

களிமண்ணாலும் சாதிக்கலாம்

வியாழன், 22 நவம்பர், 2012

காகிதம்களிமண் ஆகியவற்றால்நகை செய்து வரும் உஷா நடராஜன்: பெங்களூருவில்,சொந்தமாக ஒரு சாப்ட்வேர் கம்பெனி நடத்தி வந்தோம். அது நஷ்டம் அடைந்ததால்சென்னைக்கு வந்து விட்டோம். இங்கு புதிதாக என்ன தொழில் செய்யலாம் என யோசித்த போது தான்காகிதம் மற்றும் களிமண்ணைக் கொண்டுநகைத் தயாரிக்கும் யோசனை வந்தது."காகிதத்தில் செய்த நகையை வாங்கிஎன்ன செய்ய முடியும்எனஆரம்பத்தில் சிலர் எதிர்மறையாகப் பேசினர். ஆனாலும்அவற்றை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என் இலக்கை அடைவதில்,மும்முரமாய் இருந்தேன். என் உழைப்பிற்கும்தன்னம்பிக்கைக்கும் பலன் கிடைக்க ஆரம்பித்தது.மாடலிங் செய்யும் பெண்கள் சிலர்எங்கள் நகையை வாங்கிப் பயன்படுத்த ஆரம்பித்தனர். அதன் பின்நாங்கள் தயாரித்த நகைக்குநல்ல வரவேற்பு கிடைத்தது. நிறைய வடிவங்களில்நாங்கள் காகித நகைகளை உருவாக்குவதால்பலரும் விரும்பி வாங்குகின்றனர். அதில்சில பிரபலமானவர்களும் உண்டு. ஆர்டரின் பேரிலும்நாங்கள் நகைகள் செய்து கொடுக்கிறோம்.காகிதங்களாலும்களிமண்ணினாலும் நகைகள் செய்யப்படுவதால்எடை குறைவாக இருப்பதுடன்உடுத்தும் உடைக்குஏற்ற நிறத்தில்நகைகளை அணிய முடியும் என்பது தான் இதன் சிறப்பு.காகித நகைகள், 50 ரூபாய் முதல், 45 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகின்றன. திருமணம் உட்படபல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப் பலரும்இப்போது காகித நகைகளை விரும்பி அணிய ஆரம்பித்து விட்டனர்.தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் இந்நேரத்தில்பேன்சி நகைகள் மீதுபெண்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்திஇந்த தொழிலில் இறங்கினால்வெற்றி நிச்சயம்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets