உங்கள் வருகைக்கு நன்றி

எச்சரிக்கைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எச்சரிக்கைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வயதான பின் வருந்துவதில் பயனில்லை.

செவ்வாய், 27 ஜூலை, 2021

ஓய்வுபெற்ற பின் நிம்மதியாக இருக்க, இளமையிலேயே முதலீடு செய்ய வேண்டும். ஓய்வு என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? பாதுகாப்பான இடத்திற்கு நகர்வது என்பது தான். அலைந்து, திரிந்து வருகிறீர்கள். சற்று ஓய்வெடுக்க வேண்டும் என விரும்புகிறீர்கள். ஒரு கட்டடத்தின் கீழ் அமர்கிறீர்கள். அந்த கட்டடம் எப்போது வேண்டுமானாலும் விழும் அளவில் உள்ளது. அங்கே நீங்கள் நிம்மதியாக ஓய்வெடுக்க முடியுமா? அதுமாதிரி தான், ஒவ்வொரு மனிதரின் ஓய்வுகாலமும். ஆணோ அல்லது பெண்ணோ, 60 வயதுக்கு பிறகு தங்கள் வாழ்க்கையில் பொருளாதார கஷ்டங்களை அனுபவிக்காமல், பாதுகாப்பான மனநிலையில் இருப்பது தான் நிம்மதியான ஓய்வு காலத்திற்கு அடிப்படை.ஆனால், ஓய்வு காலத்தை நெருங்குபவர்களின் நிலையும், இன்னும் சில ஆண்டு களில் ஓய்வுபெறப் போகிறவர்களின் நிலையும் அப்படியா இருக்கிறது? அரசுத்துறை ஊழியர்களுக்காவது 'பென்ஷன்' கிடைத்து விடுகிறது. ஆனால், தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு, பென்ஷன் என்று எதுவும் கிடையாது. பி.எப்.,பில் சேர்த்து வைத்த சில லட்சங்களை, வாரிசுகளின் திருமணத்திற்கு அல்லது பிற குடும்ப செலவுகளுக்கு செலவழித்து விட்டு, வெறும் கையுடன் தான் பெரும்பாலானோர் இருப்பர். வயதான காலத்தில், மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் நேரத்தில் மனைவியுடன், கையில் சொற்ப பணத்துடன், மனதுக்கு பிடிக்காத வேலையுடன் தான் எஞ்சிய காலத்தை ஓட்ட வேண்டிய நிலை இருக்கும்.வாழ்நாள் முழுக்க, குடும்பத்திற்காக உழைத்து விட்டு, 60 வயதுக்கு பின் தனக்கும், தன் மனைவிக்கும் போதிய பணமில்லாமல், வாரிசுகளை நம்பி பிழைக்க வேண்டிய நிலை தான் பெரும்பாலானோருக்கு ஏற்படுகிறது. அப்போது தான் புரியும், 'இளம் வயதிலேயே, கை நிறைய சம்பாதிக்கும் காலத்திலேயே, ஓய்வுக்கு பிறகு நிம்மதியாக இருக்க, போதிய பணத்தை முதலீடு செய்திருக்காமல் விட்டு விட்டோமே' என்று. அந்த எண்ணம், 60 வயதுக்கு பிறகு, 60ஐ நெருங்கும் போதோ வந்து பயனில்லை. இளம் வயதிலேயே வர வேண்டும்; ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்ய வேண்டும். ஓய்வு காலத்திற்கான பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க வேண்டும். பொதுவாக இளம் வயதில் தான் நாம் அதிகமாக சம்பாதிப்போம். அப்போதே ஒரு குறிப்பிட்ட தொகையை ஓய்வுக்கு பிறகு தேவைப்படும் செலவுகளுக்காக ஒதுக்க வேண்டும். இதை மொத்தமாக செலவு செய்ய முடியாது; சிறுக சிறுக செய்ய வேண்டும். ஓய்வுக்கு பின், எவ்வளவு பணம் மாதந்தோறும் தேவைப்படும் என்பதை கணக்கிட்டு, அதற்கேற்ப சேமிப்பு, முதலீடு போன்றவற்றை செய்யவேண்டும்.இப்படி செய்தால், முதிய காலத்தில் பணத்திற்காக, பிறரிடம் போய் நிற்க வேண்டிய தேவை ஏற்படாது!

Read more...

எதுவாக இருந்தாலும் யோசிக்கனும்!.

வியாழன், 8 ஜூலை, 2021

ஒரு பொருளை வாங்குவதற்கு முன், அதை வாங்கணுமா என்று பல முறை யோசிப்பது சிக்கனத்திற்கான முக்கியமான வழி. ஆனால், அந்த யோசனை நம்மை வாங்க விடாமல் செய்யுமா என்பது சந்தேகம் தான்.

நாம் வாங்க விரும்பும் பொருட்கள் தொடர்பான தகவல்களும், விளம்பரங்களும் நம் ஆசையை தொடர்ந்து துாண்டிக் கொண்டே இருக்கும். 'ஆசையை, இன்னும் ஏழு நாட்களுக்கு தள்ளிப் போடுவோம்' என மனதில் உறுதியாக நினைத்து தள்ளி போட வேண்டும். ஒரு வாரத்திற்கு அப்படி தள்ளிப் போடும் போது, நாம் விரும்பிய, அதிக தேவையற்ற பொருள் மீதான ஆசை குறைந்திருக்கலாம் அல்லது மிகவும் அதிகரித்திருக்கலாம்.
மிகவும் அதிகரித்திருக்கும் பட்சத்தில், அந்த பொருளை வாங்கிக் கொள்ளலாம். பெரும்பாலான நேரங்களில் நாம் வாங்க நினைத்த பொருள், அதிக முக்கியத்துவம் இல்லாத பொருளாக இருந்தால், அந்த ஏழு நாட்களில் நம் ஆசை குறைந்து விடும். இந்த முறை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட முறை. எனவே, பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டாம் என நினைப்பவர்கள், இந்த முறையை பின்பற்றலாம்.ஆசைப்பட்ட பொருளை ஏழு நாட்கள் கழித்து வாங்கலாம் என்று முடிவெடுத்து விட்டால், அந்த இடைவெளி நாட்களில், கிரெடிட் கார்டை இந்த பொருள் வாங்க பயன்படுத்தி தான் ஆக வேண்டுமா;  இ.எம்.ஐ., கட்ட சிரமமாக இருக்குமே என்பன போன்ற மன ஓட்டங்கள் அதிகரித்து, ஏழு நாட்கள் முடிவில், அந்த பொருள் மீதான ஆசையை அறவே துண்டித்து விடும்.அதுபோல, மற்றொரு பொருள் மீதான ஆசை, அதன்பின் வர வாய்ப்பு உள்ளது. முந்தைய பொருளை, கையில் பணம் கிடைக்கும் போது வாங்கிக் கொள்ளலாம் என தள்ளிப் போடவும் வாய்ப்பு உள்ளது. இப்படி நாட்களை தள்ளிப் போடுவதால், நல்ல பொருட்களை தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பு கிடைக்கும். உதாரணமாக, பிரபலமான பிராண்ட் ஒன்றின் பொருளை, அதிக விலைக்கு வாங்க முடிவு செய்திருப்பீர்கள். அதுபோன்ற பொருள், விலை குறைவாகவும் கிடைக்கும். இப்படி தள்ளிப் போடுவதால், விலை குறைந்த பொருளை வாங்கவும் நம்மால் முடியும். இதனால் வீணாக கூடுதல் பணம் கொடுப்பது குறைந்து விடும்.முக்கியமாக, 'ஆபர்' போட்டுள்ளனர் என்பதற்காக, பார்த்த உடனே வாங்க துடிக்க கூடாது. அந்த எண்ணத்தை தள்ளிப் போட்டால், ஏழு நாட்களில் அந்த ஆபர் மீதான ஆர்வம் நம்மிடம் குறைந்திருக்கும். இதுபோன்ற 'டெக்னிக்'குகளை பயன்படுத்தி, வீணான பொருட்களை வீட்டில் சேர்க்காமல் இருக்க முடியும்!

Read more...

உங்கள் மொபைல் எங்கேயுள்ளது ?.

சனி, 12 ஜூன், 2021

அனைவரும் மொபைல் போன் வைத்துள்ளோம். எல்லா இடங்களுக்கும் அவற்றை எடுத்துச் செல்கிறோம். அது தொலைந்து விட்டால் எப்படி கண்டு பிடிப்பது; அதில் உள்ள விபரங்களை அழிப்பது எப்படி?  நம் வாழ்க்கையின் மிக முக்கிய அங்கமாக, 'ஸ்மார்ட் போனும், ஆப்'களும் மாறிவிட்ட நிலையில், அதன் பாதுகாப்பும் மிக அவசியமாகிறது.எனவே, ஸ்மார்ட் போனை பத்திரப்படுத்தி வைப்பதுடன், ஒருவேளை தொலைந்துவிட்டால் என்ன செய்யலாம் என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பாதுகாப்பாக இருப்பதற்கு முயல வேண்டும். அப்படியும் பிரச்னைகள் ஏற்பட்டால், அதில் இருந்து வெளியில் வருவதற்கும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.நாம் ஆசை ஆசையா வாங்கிய ஸ்மார்ட் போன் தொலைந்து விட்டதா... கவலை வேண்டாம்; கண்டுபிடித்து விடலாம்.முதலில் போனை வாங்கியவுடன், போனின், ஐ.எம்.இ.ஐ., எண்ணை தெரிந்து கொள்ளணும். போனில், '*#06#' என்று டைப் செய்து டயல் செய்தால், போனின் ஐ.எம்.இ.ஐ., எண் வெளிப்படும்; அதை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து, அந்த ஸ்மார்ட் போனில் நமக்கான, 'இ - மெயில்' முகவரி மற்றும் பாஸ்வேர்ட் மூலம் அக்கவுன்ட் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.போன் தொலைந்து போனால், அந்த அக்கவுன்ட் மூலம் நம் போன் எங்குள்ளது என, தெரிந்து கொள்ள முடியும். அதோடு, அதை, 'லாக்' செய்யவும் முடியும்; அதிலுள்ள தகவல்களை அழிக்கவும் முடியும்.எனவே, போனின் மாடல் எண், ஐ.எம். இ.ஐ., எண், போன் அக்கவுன்டுக்கான இ - மெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்ட் போன்ற வற்றை மறந்து விடாமல் இருக்க, பத்திரமாக எங்கேனும் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.நம் போன் காணாமல் போனால்android.com/devicemanager ' அல்லது https://findmymobile.samsung.com/' என்ற 'வெப்சைட் லிங்க்கு'கள் மூலம் கண்டுபிடித்து விட முடியும்.இந்த இணைய தளத்திற்கு சென்று, நம், 'ஜி - மெயில்' முகவரி மற்றும் 'பாஸ்வேர்டு' மூலம் 'லாகின்' செய்து கொள்ள வேண்டும். இப்போது கிடைக்கும் திரையில், 'ரிங், லாக், எரேஸ்' என, மூன்று விபரங்கள் இருக்கும்.'ரிங்' என்ற விபரத்தைகிளிக் செய்தால், ஐந்து நிமிடங்களுக்கு போனை தொடர்ச்சியாக ரிங் ஆகும்படி செய்து எங்கிருக்கிறது என, கண்டறியலாம்.'லாக்' ன்ற விவரத்தை கிளிக் செய்தால், நம் மொபைல் லாக் ஆகும்படி செய்து விடலாம். 'எரேஸ்' என்ற விவரத்தை கிளிக் செய்தால், நம் போனில் உள்ள தகவல்கள் அனைத்தையும் அழிக்கும்படி செய்து கொள்ளலாம்.முக்கியமாக, நம் போன் தொலைந்து விட்டால், போன் தொலைந்த அடுத்த நிமிடம் கம்ப்யூட்டர் மூலம் நம் இ - மெயில், பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதள பாஸ்வேர்டுகளையும் மாற்றிவிட வேண்டும்.      'காம்கேர்' கே.புவனேஸ்வரி:

Read more...

கவனமாக செலவு செய்யுங்கள்.

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

பணம் சம்பாதிப்பது செலவு செய்யத்தான். ஆனாலும் எந்த ஒரு பொருளையும் தேவை இருந்தால் மட்டும் வாங்குங்கள்.

மக்கள் சமீப காலமாக அதிக அளவில் ரெஸ்டாரண்ட்டுக்கு போய் சாப்பிடுதல், மால்கள் மற்றும் பொழுதுபோக்கும் இடங்களில் தேவையற்ற செலவுகளை யோசிக்காமல் செய்வதை பார்க்கிறேன். பல திரையரங்குகளில் ஒரு டப்பா பாப்கார்ன் மனசாட்சியே இல்லாமல் நூறு ரூபாய்க்கு விற்கப்பட்டாலும் பலர் க்யூவில் நின்று வாங்கி பிள்ளைகளுக்கு தருகிறார்கள்.

முன்பெல்லாம் வருடத்திற்கு ஒரு முறை பொருட்காட்சி திடலில் மட்டும் சற்று செலவு செய்யும் தமிழ் குடும்பங்கள் இப்போது மாதத்தில் பல நாட்கள் இப்படி இஷ்டத்திற்கு வீண் செலவு செய்வது சாதாரனமாகிவிட்டது.

நடுத்தர குடும்பங்கள் ஏதோ நாளையோடு சரவணா ஸ்டோர்ஸ் போன்ற பெரும் கடைகள் மூடப்படுவதைப்போல என்னாளும் போய் அலைமோதுகிறார்கள்.

இதே போல துணி கடைகள், நகை கடைகள், விளம்பரத்தால் தூண்டில் போடும் ஆன்லைன் நிறுவங்கள் என நடுத்தர மக்களின் சேமிக்கும் பழக்கத்தை குழிதோண்டி புதைக்க பல வர்த்தக முதலைகள் வாயயை பிளந்து கொண்டு காத்திருக்கின்றன.

தேவைக்காக பொருள் வாங்கிய காலமெல்லாம் மலையேறிவிட்டது போலும். 
இப்பொதெல்லாம் ஏதாவது வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக மக்கள் பல சமயம் முட்டாள் தனமாக செலவு செய்வது ஒரு ஃபேஷனாக ஆகிவிட்டது.

வெறும் டம்பத்திற்க்காக ஆடம்பர செலவு செய்வதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருமணங்கள். பெற்றோரின் ஆயுட்கால சேமிப்பை மணமக்களின் எதிர்கால வாழ்க்கைக்கு எந்த வகையிலும் பயன்படாத வகையில் செலவு செய்வதற்கே திருமணங்கள் நடத்தப்படுகின்றதோ எனும் ஐயம் நமக்கு ஏற்படுகிறது.

"இப்பொதெல்லாம் வருமானம் அதிகம் ஸார் அதனால செலவு செஞ்சா தப்பில்ல" என்ற கருத்தும் பரவி வருவது மிக தவறானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட.

சில ஆண்டுகளுக்கு முன் மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்ட கடும் பொருளாதார சரிவின் போது இந்தியாவில் அதன் தாக்கம் மிக குறைவாகவே இருந்தது. காரணம், நமது நாட்டின் மிக பெரிய எண்ணிக்கையிலான நடுத்தர வர்கதின் சேமிப்பாகும்.

நுகர்வோர் கலாச்சாரம் வரம்பு மீறும் போது, க்ரெடிட் கார்ட் தரும் போலி தைரியத்தின் காரணமாக செலவுகள் எல்லை தாண்டும்போது நம் பொருளதாரத்தின் அடித்தளம் அசைவுகாணும், பலவீனம் அடையும்.

எனவே, அடுத்த முறை நீங்கள் ஒரு செலவை மேற்கொள்ளும் முன் அதன் அவசியத்தை கொஞ்சம் யோசித்து; அப்பொருளை நீங்கள் அதன் தேவை கருதி வாங்குகிறீர்களா அல்லது அதனை சும்மா விரும்புவதால், வேண்டும் என நினைப்பதால் வாங்குகிறீர்களா என்று வாங்குமுன் சற்று தயக்கம் காட்டுங்கள். உங்கள் முடிவு மாறலாம். அப்போது உங்கள் பணம் உங்களிடமே, உங்கள் உண்மையான தேவைக்காக பத்திரமாக இருக்கும். அது நீங்கள் உழைத்து ஈட்டியது. மறந்து விடாதீர்கள். 

 

Read more...

நவீன காலத்தில் கண்களை பாதுகாக்கும் வழிமுறைகள்.

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

கண் மற்றும் உடல் சூடு பிரச்னை, இளம் தலைமுறையினருக்கு அதிகரிப்பதற்கு காரணம், மொபைல் போனும், அதனால் மாறி இருக்கும், நம் வாழ்க்கை முறையும் தான். வயது வித்தியாசம் இல்லாமல், பெரும்பாலானோர், மொபைல் போனில் மூழ்கிக் கிடக்கின்றனர்.'டிவி'யைக் கூட, 3 மீட்டர் தள்ளி இருந்து பார்க்க வேண்டும் என்பதை அறிந்த நாம், அதிக சக்தி வாய்ந்த மொபைல் போன்களை, கண்களுக்கு அருகில் வைத்து, நீண்ட நேரம் பார்க்கிறோம். இதனால், கண்கள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. 'கண்ணுக்கு மிக அருகில் ஒளியை கூர்ந்து பார்க்கக் கூடாது; மிகப் பிரகாசமான ஒளியை, துாரத்திலிருந்தும் பார்க்கக் கூடாது; இருளான பகுதியில் இருந்தபடி, குறுகிய ஒளியில் கண்ணை சுருக்கி, கூர்ந்து கவனித்தாலும், கண்ணில் பிரச்னை வரும்' என, ஆயுர்வேதம் கூறுகிறது. மேலும், தொடர்ந்து உஷ்ணமான பொருட்களை சாப்பிடுவது, வெயிலில் சுற்றுவது, தொடர்ந்து வெப்பமான சூழலில் வேலை பார்ப்பது உள்ளிட்ட செயல்களும், கண்களைப் பாதிக்கும். இது, உடலின் வெப்பத்தை பாதித்து,  மலச் சிக்கலை உருவாக்குகிறது; சத்து குறைபாடும் ஏற்படுகிறது. இந்த பிரச்னையிலிருந்து கண்களை பாதுகாப்பது அவசியம். எனவே, மொபைல் போன்களை கண்களுக்கு நெருக்கமாக, அதிக நேரம் பார்ப்பதை குறைக்க வேண்டும். தேவையான அளவு மட்டும் பயன்படுத்துவது, கண்களுக்கும், மனதுக்கும் நல்லது. மேலும், மொபைல் போன்களைப் பார்ப்பவர்கள், தினமும், இரவில் படுக்கப் போகும் போது, உள்ளங்காலிலும், தலையிலும் சிறிதளவு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் வைத்துக் கொள்வது நல்லது. உள்ளங்காலில் எண்ணெய் தேய்க்கும் போது, அதன் பலன் தலையை சென்றடைகிறது; தலையில் எல்லா நரம்புகளும் சீராக இயங்கும். பெரிய நெல்லிக்காய் ஒன்றை, தினமும் சாப்பிட வேண்டும். ஒரு டீஸ்பூன் திரிபலாதி சூரணத்தை, இரவு துாங்கச் செல்லும் முன், தேனுடன் கலந்து சாப்பிட வேண்டும். அகத்திக்கீரை, சிறுகீரை உள்ளிட்ட கீரைகளை, வாரம் இரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கேரட்டை, தினமும் அப்படியே பச்சையாக சாப்பிட வேண்டும். கொத்தமல்லித் தழையை இதமான வென்னீரில் அலசி, அரைத்து, அந்தச் சாறுடன், ஒரு ஸ்பூன் சீரகத்துாள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குடிக்கலாம். இதனால், கண்களுக்கு தேவையான சத்துகள் உடலுக்கு கிடைக்கும்; கண்கள் பாதுகாக்கப்படும்!

 

Read more...

உங்­கள் வாழ்க்­கை வழுக்காமல் இருக்க.

வியாழன், 17 செப்டம்பர், 2020

உங்­கள் வாழ்க்­கையை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான பல­வி­த­மான தீர்­மா­னங்­களை மேற்­கொண்­டி­ருக்­க­லாம். இவற்­றோடு, உங்­கள் நிதி வாழ்க்­கையை மேம்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­கான உறு­தி­மொ­ழி­க­ளை­யும் சேர்த்­துக்­கொள்­ள­லாம். அந்த வகை­யில், உங்­கள் சேமிப்பை அதி­க­மாக்கி, நிதி வளத்தை பெருக்கி கொள்ள உத­வக்­கூ­டிய எளிய வழி­களை பார்க்­க­லாம்.



கடனைகவனி


கடன் சுமையை குறைப்­பது என்­பது உங்­கள் தீர்­மா­ன­மாக இருக்­கட்­டும். கிரெ­டிட் கார்டு பயன்­ப­டுத்­து­வர் எனில், நிலு­வை­யில் உள்ள தொகையை செலுத்­து­வ­தில் கவ­னம் செலுத்த வேண்­டும். கடனை அடைக்­க­வில்லை எனில், உங்­கள் பணத்தை இழக்­கி­றீர்­கள் என பொருள். அதிக வட்டி கடனை முத­லில் அடைக்கவேண்­டும்.


வாங்குவதில்கவனம்


உங்கள் ஷாப்பிங் பழக்கத்தை கட்டுப்படுத்துங்கள். தேவையில்லாத பொருட்களை வாங்குவது மற்றும் பார்த்தவுடன் பொருட்களை வாங்குவது வீண் செலவை ஏற்படுத்தும். முன்கூட்டியே திட்டமிட்டு தேவையான பொருட்களை மட்டுமே வாங்குவதன் மூலம்
கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மிச்சமாக்கலாம்.


பணத்­தின் பாதை


உங்­கள் பணத்தை எதற்­காக எல்­லாம் செல­விட்டு கொண்­டி­ருக்­கி­றீர்­கள் என்­பதை தெளி­வாக 
உணர்ந்­தி­ருக்­கி­றீர்­களா? அதே போல எங்­கெல்­லாம் முத­லீடு செய்­தி­ருக்­கி­றீர்­கள் என்­ப­தி­லும் தெளிவு வேண்­டும். இந்த விபரங்­களை எல்­லாம் குறித்து வைப்­பது, கையில் உள்ள பணத்தை சிறந்த முறை­யில் திட்­ட­மிட உத­வும்.


சேமிப்­பும் முத­லீ­டும்


மாதந்­தோ­றும் குறிப்­பிட்ட தொகையை சேமித்து வையுங்­கள். ஆனால் இந்த தொகை சேமிப்பு 
கணக்­கில் முடங்கி விடா­மல் பார்த்­துக்­கொள்­ளுங்­கள். சேமித்த பணத்தை சரி­யான சாத­னங்­களில் முத­லீடு செய்­வ­தன் மூலம் அதிக பலன் பெற­லாம். உங்­கள் நிதி இலக்­கு­க­ளுக்கு ஏற்ற முத­லீட்டு வாய்ப்பை தேர்வு செய்­யுங்­கள்.


சேமிப்­பின் பலன்


சேமிப்­பது அவ­சி­ய­மா­னது என்­றா­லும், அதற்­காக செலவே செய்­யா­மல் இருக்க வேண்­டும் என்­றில்லை. உங்­க­ளுக்கு பல­னை­யும், மதிப்­பை­யும் தரக்­கூ­டிய செல­வில் ஈடு­ப­டு­வ­தில் தவ­றில்லை. கட­னை­யும், செல­வை­யும் கட்­டுப்­ப­டுத்தி, சரி­யான வகை­யில் முத­லீட்­டை­யும் மேற்­கொண்­டி­ருந்­தால், விருப்­ப­மான செல­வு­க­ளி­லும் ஈடு­ப­ட­லாம். அது வாழ்க்­கையை வள­மாக்­கும்.

Read more...

ஆரோக்கியம் என்பது எதில் உள்ளது ?.

வெள்ளி, 29 நவம்பர், 2019


* பல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் ஏன்
எண்சாண் உடம்புக்கு தலையே பிரதானம் என்றாலும், அந்த தலைக்கே வாய் தான் கண்ணாடியாக திகழ்கிறது. வாயின் ஆரோக்கியம் என்பது பற்களை பராமரிப்பதில் இருக்கிறது. ஆரோக்கியமான பற்களே உடலுக்கு நல்லது. வாயிலும், பற்களிலும் ஏற்படும் நோய்களால் ஒட்டு மொத்த உடம்பும் பாதிக்கப் படுகிறது. எனவே வாயையும் பற்களையும் துாய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

*
குழந்தைகள் எந்த வயதில் பல் துலக்க தொடங்க வேண்டும்
குழந்தைகளுக்கு பிறந்த ஆறு மாதத்தில் பல் முளைக்கத் துவங்கும். அப்போதிருந்தே பல் துலக்கி விடுவதை துவங்க வேண்டும். ஐந்து வயது வரை பெற்றோர் உதவியுடன் பல் துலக்க வேண்டும்.

*
வாய்ப்புண் ஏற்பட காரணம் என்ன
பீடி, சிகரெட் பிடித்தல், புகையிலை, பாக்கு போடுதல் போன்ற பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு வாய்ப்புண் ஏற்படும். இதனால் உதடு, கன்னம் தசைகளில் நெகிழித்தன்மை குறைந்து வாய் திறக்க முடியாமலும் போகும். அதிகமான காரம், புளிப்பு உணவுகளாலும் வாயில் எரிச்சல் தன்மை கூடி வாய்ப்புண் ஏற்பட வழிவகுக்கும்.

*
வாய் துர்நாற்றம் ஏற்பட காரணம்
வாயில் உள்ள அழுக்குகளே காரணம். வாயிலும், பற்களிலும் உணவு துகள் தங்குவதால் ஏற்படும் பாக்டீரியாக்கள், உணவு துகள்களுடன் சேர்ந்து கெட்டுப்போய் துர்நாற்றம் ஏற்படுகிறது. வாய் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்கதினமும் இரண்டுமுறை பல் துலக்குவதுடன் நாக்கை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். வாய் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்குமாறு நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும்.

*
தெத்துபற்களால் பாதிப்பு உண்டா
தெத்துப்பற்கள், பற்களுக்கு இடையில் இடைவெளி அதிகம் உள்ள பல் அமைப்பு, நெருங்கிய பற்கள் ஆகியவற்றால் பல் ஈறு நோய் ஏற்படும். வாய் திறந்தபடி துாங்குதல், உதடு கடித்தல், நாக்கு மூலம் பற்களை தள்ளுதல், கீழ் உதடை உள்ளிழுத்து கடித்தல், ஆகியவற்றாலும் மரபு ரீதியாகவும் தெத்துப்பற்கள் உருவாகும். இதனால் பல் மற்றும் முக அமைப்பு மாறிவிடும். எனவே வளரும் பருவத்திலேயே இவற்றை சரிசெய்து கொள்ளவேண்டும்.
*
சொத்தை பற்களை எடுக்காமல் விடலாமா
கெட்டுப்போன சொத்தைப்பற்களை எடுக்காமல் விட்டால் தோல் நோய்கள், மூட்டு, இடுப்பு வலி, மூட்டுகளில் வீக்கம், கண்களில் புரை மற்றும் இருதய நோய் கூட ஏற்படலாம்.

*
பல் சொத்தை வராமல் முன்கூட்டியே தடுக்கலாமா
பற்களின் மேலே படியும் காரை அல்லது உணவு படலத்தின் மீது நுண்ணுயிரிகள் உண்டாக்கும் அமிலம் பற்களை பாதித்து பல்சொத்தை எற்படுகிறது. பற்களில் சொத்தை வருவதை தடுத்தல் என்பது கடினமான செயல். ஏனெனில் நமது பற்களின் அமைப்பு, உணவுமுறை, துலக்கும் முறைகளை பொறுத்தே பல் சொத்தை ஏற்படுவதால் அதை துல்லியமாக முன்கூட்டியே வராமல் தடுக்க முடியாது.

*
செயற்கை பல் கட்டுவது பற்றி...
விபத்தால் பல் உடைதல் உள்ளிட்ட காரணங்களால் பற்களை இழக்க நேரிடும் போது பல் கட்டுதல் அவசியமாகிறது. இரண்டு முறைகளில் பல் கட்டப்படுகிறது. தேவைக்கேற்ப அகற்றக்கூடிய அளவிலும் அல்லது நிரந்தமாக பொருத்தியும் பல் கட்டப்படுகிறது.

*
பற்களை பாதுகாப்பது எப்படி

காலை, இரவு பல் துலக்க வேண்டும். பல் இடுக்குகளில் சிக்கியுள்ள உணவு துகள்களை குச்சி, ஊசிகளை கொண்டு எடுக்கக்கூடாது. பிரஷ்களையே பயன்படுத்த வேண்டும். உணவில் நார்ச்சத்து அதிகம் உள்ள பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும், ஒட்டும் தன்மை கொண்ட மாவுச்சத்து பொருட்களை தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பித்ததில் இருந்து ஆண்டுக்கு ஒருமுறையாவது பல் மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெற்றால் பல் நோய்கள் வராமல் தடுக்கலாம்.
டாக்டர். மா.ஆறுமுகம்
பல் மருத்துவர்
திருப்புத்துார்
98426 56617

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets