உங்கள் வருகைக்கு நன்றி

தொழிற் பயிற்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொழிற் பயிற்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தொழில் உரிமம் பெறுவது எப்படி?

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

அரசின் பல்வேறு துறைகளின்கீழ் அனுமதி வாங்கப்பட்ட தொழில் என்றாலும் மாநகர, நகர எல்லைக்குட்பட்ட பகுதிகள் எனில் இந்த அனுமதியும் வாங்க வேண்டும்.

ஒரு மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் தொழில் தொடங்க வேண்டும் என்றால் அந்த மாநகர, நகர அமைப்பின் மூலம் அனுமதி வாங்க வேண்டும் என்கிறது சட்டம். இதுதான் தொழில் உரிமம், அல்லது வணிக உரிமம் என்கிறோம். உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் தரும் சட்டம் என்றாலும், அப்போதுதான் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிசெய்ய முடியும். தவிர தொழில்வரி போன்றவையும் வசூலிக்க இது வகை செய்கிறது.

அரசின் பல்வேறு துறைகளின்கீழ் அனுமதி வாங்கப்பட்ட தொழில் என்றாலும் மாநகர, நகர எல்லைக்குட்பட்ட பகுதிகள் எனில் இந்த அனுமதியும் வாங்க வேண்டும்.

யாருக்கு தொழில் உரிமம் தேவை?

ஒரு தொழிலை தொடங்குவதற்கு அரசின் பல்வேறு துறைகளின் கீழ் அனுமதி வாங்கியிருந்தாலும், மாநகர, நகர பகுதியில் தொடங்குபவர்களுக்கு இந்த அனுமதி வேண்டும்.

குறிப்பாக தொழிற்சாலைகள், சேமிப்புக் கிடங்குகள், பதப்படுத்தும் நிறுவனங்கள், தீப்பெட்டி தயாரிப்பு, அச்சகம், வெல்டிங் பட்டறைகள், பெட்ரோல் பங்க் போன்றவை பிற அரசு துறைகள் மூலம் அனுமதிகள் வாங்கியிருந்தாலும் நகராட்சி அனுமதியும் வாங்க வேண்டும்.

தவிர உணவு தயாரிப்பு நிறுவனங்கள், பேக்கரிகள், பால் மற்றும் இறைச்சி விற்பனை யாளர்கள், பள்ளி, கல்லூரி உணவு விடுதிகள், சமையல் ஒப்பந்தக்காரர்கள் திருமண மண்டபம், ஓட்டல், மளிகை கடைகள், தேநீர் கடைகள், குளிர்பான கடைகள், மொத்தம் மற்றும் சில்லறை வியாபார நிறுவனங்களும் இந்த அனுமதி வாங்க வேண்டும்.

அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களில் தொழில் நடத்துபவர்கள் என்றும், உணவு பொருள் தயாரிப்பு மற்றும் சாப்பிடும் நிலை வரை உள்ள அனைத்து உணவு வணிகர்கள் என்றும், மின்சக்தி மற்றும் டீசல் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தி தொழில் செய்பவர்கள் என்றும் பல வகைகளில் இந்த தொழில்களை வகைப்படுத்துகிறது சட்டம்.

உரிமம் பெறும் நடைமுறை

விண்ணப்பதாரர் தங்களது பெயர் மற்றும் தொழில் விவரம், தொழில் நடத்தப்பட உள்ள இடத்தின் முகவரி போன்ற விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ரூ.20க்கான முத்திரைத் தாளில் தொழில் உரிமத்திற்கான திட்டங் களைப் பின்பற்றுவேன் என்பதற்கான உறுதி மொழி பத்திரம் கொடுக்க வேண்டும். இதனடிப்படையில் தொழில் உரிமம் கிடைக்கும். இந்த உரிமத்தை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் உரிமம் புதுப்பிக்கப் படவில்லையென்றால் புது உரிமம் எடுக்க வேண்டும்.

ஏன் வாங்க வேண்டும்

இது போன்ற அனுமதிகளை நகராட்சிகள் மூலம் வாங்க வேண்டும் என்பதற்கு முக்கிய காரணம் மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்களில் தொழிற்சாலைகள் அமைத்தால் அது இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் என்பதால்தான். என்ன தொழில் எந்த பகுதியில் தொடங்க உள்ளனர் என்பதை அறிந்து அதற்கேற்ப அனுமதி வழங்கப்படும். இதற்கு எழுத்து பூர்வமாக அத்தாட்சிகள் அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும்.

நடைமுறை என்ன?

தொழில் அமைய உள்ள கட்டடத்தின் அங்கீகரிக்கப்பட்ட திட்டம் அல்லது மண்டல செயற்பொறியாளரால் அங்கீகரிக்கப்பட்ட கட்டட சான்றிதழ், அந்த கட்டட உரிமையாளரின் ஆட்சேபணையில்லா சான்றிதழ், நடப்பு ஆண்டு வருமான வரியின் நகல், தொழில் வரியின் நகல், மாவட்ட தீயணைப்பு அதிகாரியின் ஆட்சேபனையில்லா சான்றிதழ், தொழிற்சாலை ஆய்வாளர்களிடமிருந்து பெற்ற சான்றிதழ், அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆட்சேபனை இல்லா சான்றிதழ் என சட்டம் நடைமுறைகளை வைத்துள்ளது.

தங்கும் விடுதிகள் மற்றும் உணவகம் என்றால் குடிநீர் வாய்ப்புகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இயந்திரங்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகள் என்றால் பணியிடம், கட்டிடம், அதற்கான இதர அனுமதிகள், எத்தனை பணியாளர்கள் பணிபுரிய உள்ளனர் என்கிற விவரங்கள் கொடுக்க வேண்டும். தவிர குறிப்பிட்ட தொழிற்சாலை தொடங்குவதற்கான திட்ட வரைபடம் போன்றவை இணைக்க வேண்டும்.

அந்த இடத்தின் காற்றோட்ட வசதி, தீ தடுப்பு வசதிகள், அறைகள், கட்டிட உயரம் போன்றவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தொழிற்சாலை ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டவர்களின் குறிப்பின்பேரில் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.

இந்த நடைமுறைகள் பின்பற்றப்படும் பட்சத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மேலும் சட்டத்துக்குட்பட்ட தொழில்கள் என்கிற அடையாளமும் கிடைக்கிறது.

இந்த தொழில் உரிமம் பெறாமலோ அல்லது புதுப்பிக்கப்படவில்லை என்றாலோ தொழிலை முடக்கி வைக்கவும் அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடமுள்ளது.

 

Read more...

ஊதுவத்தி, 'கம்ப்யூட்டர்' சாம்பிராணி

புதன், 31 அக்டோபர், 2018


ஊதுவத்தி, 'கம்ப்யூட்டர்' சாம்பிராணி தயாரித்து விற்பனை செய்து வரும், மதுரையைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் விஜயலட்சுமி: ஊதுவத்திக்கு ஏழு வகையான மூலப் பொருட்கள் தேவை. அனைத்தும், 'கெமிக்கல்' விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கும். குறைந்தபட்சம் கிலோ அளவுக்குத் தான் கொடுப்பர்.பெரும்பாலும் இந்த மூலப் பொருட்களை, தரம் வாரியாகப் பிரித்து வைத்திருப்பர்; அதற்கேற்ப விலையும் வேறுபடும். பிசினசாகச் செய்ய விரும்புவோர், தரமான பொருட்களைப் பயன்படுத்துவதே சிறந்தது. ஊதுவத்திகளிலும், 'கோல்டு, சில்வர்' என, 'கிளிட்டர்' கலர்கள் வந்துவிட்டன.அதேபோல், ஒரே ஒரு, 'சென்ட்டை' மட்டும் உபயோகித்து செய்யலாம்; ஒன்றுக்கு மேலான, 'சென்ட்' வகைகளைக் கலந்தும் செய்யலாம். இப்போது ஆயிரக்கணக்கான, 'சென்ட்' வகைகள் வந்துவிட்டன. மல்லிகை, மரிக்கொழுந்து, 'சென்ட்'டுகளின் விலை கொஞ்சம் அதிகம். 2 கிலோ ஊதுவத்திகள் செய்ய, 120 - 150 ரூபாய் வரை முதலீடு தேவை. குச்சிகளின் எண்ணிக்கையையும் இதில் கவனத்தில் கொள்ள வேண்டும்.'கம்ப்யூட்டர்' சாம்பிராணிக்கு, 10 வகையான மூலப் பொருட்கள் தேவை. வாசனை எதுவும் கலக்க மாட்டோம். சாம்பிராணியின் வாசம் தான், இதில் ஸ்பெஷல். மூலிகைகள் கலந்த, 'கம்ப்யூட்டர்' சாம்பிராணி தான், இப்போது, 'ட்ரெண்டில்' இருக்கிறது. உதாரணத்துக்கு வேப்பிலை, துளசி என, நம் தேவைக்கேற்ப மூலிகைகளைக் கலந்து செய்யலாம்; இதற்கு, 120 ரூபாய் முதலீடு தேலைப்படும்.விரல் தடிமன் அளவு கம்ப்யூட்டர் சாம்பிராணிக்கான, 'மோல்டு'கள் கடைகளில் கிடைக்கும். 'கப்' வடிவ மோல்டு வேண்டுமானால், பட்டறையில் ஆர்டர் கொடுத்து செய்து தான் வாங்க வேண்டும். ஊதுவத்திகளைப் பொறுத்தவரை, போடுகிற முதலீட்டைப் போல, இரு மடங்கு லாபம் எடுக்க முடியும்.'சென்ட்' கலக்காமல் வெறும் ஊதுவத்திகளை மட்டும் தயாரித்து, மொத்த வியாபாரக் கடைகளுக்கு விற்பனைக்கு கொடுக்கும் வாய்ப்பும் உண்டு. 'கம்ப்யூட்டர்' சாம்பிராணியில், இரு மடங்கு லாபம் கிடைக்கும். சாதாரண சாம்பிராணியா, மூலிகை கலந்த ஸ்பெஷல் சாம்பிராணியா என்பதைப் பொறுத்து, விலையில் மாற்றம் செய்யலாம். அட்டைப் பெட்டிகளில் அடுக்கி, சாம்பிராணியை ஏற்றிவைக்கும் குட்டித் தட்டு போன்றவற்றுடன் கொடுக்கலாம். வெறுமனே சாம்பிராணிகளை, 'கவரில் பேக்' செய்தும், கடைகளில் மொத்தமாகக் கொடுக்கலாம்.நாம் வாங்கும் சாம்பிராணி, சில நேரம் ஏற்றி வைத்ததும் உதிர்ந்து போவதைப் பார்த்திருப்போம். கலவை நுணுக்கம் தெரியாமல் செய்யும் போது தான் அப்படி ஏற்படும். அதற்கும், வாசனை போகாமல் இருப்பதற்கான, சூட்சுமங்கள் பயிற்சியில் கற்றுத் தரப்படும். சென்னை மற்றும் மதுரையில், ஒரே நாள் பயிற்சியாக, 800 ரூபாய் கட்டணத்தில், ஊதுவத்தி மற்றும் சாம்பிராணி தயாரிக்க கற்றுக் கொடுக்கிறேன்.

Read more...

சொந்தமாக சம்பாதிக்க இலவசத் தொழிற் பயிற்சி

வியாழன், 27 செப்டம்பர், 2012

படிப்பை இடையிலேயே விட்டுவிட்ட பெண்களுக்கும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய பெண்களுக்கும் இலவசமாகதொழிற்பயிற்சிகளை வழங்குகிறது சென்னையிலுள்ள டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக்

எனக்கு ஊசி நூல் பிடித்து சாதாரணமாக தைக்கக்கூடத் தெரியாது. ஆனால்  இன்று எல்லா வகையான ஆடைகளையும் தையல் இயந்திரத்தில் தைக்கிறேன். மூன்றே மாதத்தில் இந்த நிலையை நான் அடைந்திருக்கிறேன்...என்கிறார் ரமணி.

நான் பிளஸ் டூ வரை படித்திருக்கிறேன். தையல் மீதுள்ள ஆர்வத்தில் இங்கு வந்து சேர்ந்தேன். இப்போது நன்றாகத் தைக்கிறேன். சொந்தமாக தையல் கடை வைக்க விரும்புகிறேன்...” - இது காஞ்சனா.

நான் ஏழாவது வரைதான் படிச்சிருக்கேன். வீட்டு வேலை செய்துட்டு, கிடைக்கிற நேரத்துல தையல் கத்துட்டு இருக்கேன். பழைய துணிகள்ல கைப்பை செய்து விற்கிறேன். இங்க வந்ததுல இருந்து தையல்ல நிறைய கத்துக்கிட்டிருக்கிறேன்...என்கிறார் மாலினி.

இவர்களைப்போலவே பிரியங்கா, உஷா, பத்மாவதி, ராஜலட்சுமி, மகாலட்சுமி, சசிரேகா, மனோரஞ்சிதம் போன்ற பலரும் சென்னை தி.நகரில் உள்ள சாரதா மடத்தில் நடைபெறும் தையல் பயிற்சியை ஆர்வத்துடன் கற்று வருகிறார்கள்.

சென்னை தரமணியிலுள்ள டாக்டர். தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியின் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தர்மாம்பாள் பாலிடெக்னிக் மட்டுமல்லாமல், மடிப்பாக்கம் பஞ்சாயத்து ஊராட்சி ஒன்றியம், கோவிலம்பாக்கம் பஞ்சாயத்து ஊராட்சி ஒன்றியம், தி.நகரிலுள்ள சாரதா மடம், சந்தோஷ்புரத்திலுள்ள சிறுவர் பூங்கா உள்ளிட்ட ஐந்து இடங்களில் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன . இந்தப் பயிற்சிகளில் சேர்ந்து பயனடைந்து வருபவர்களில் பெரும்பாலானோர், பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் இருக்கும் பெண்களே என்பது குறிப்பிடத்தக்கது.  இவர்களில் பலர் பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டவர்கள். படிப்பைத் தொடர முடியாத ஏழை எளியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள்.

இப்பெண்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த பல்வேறு வகையான இலவச சுயதொழில் பயிற்சிகளை அளித்து வருகிறது டாக்டர். தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி. மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்திற்காக இக் கல்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு முதல் இன்றுவரை சுமார் 1,800 பேர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்துள்ளதுஎன்கிறார், கல்லூரி முதல்வரும் திட்டத்துக்கான தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஆர்.சொர்ணகுமார்.

சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தையல் வகுப்பு, எம்பிராய்டரி வகுப்பு, அழகுக்கலை பயிற்சி, பஞ்சு பொம்மை தயாரித்தல், பழரசம், ஊறுகாய் தயாரித்தல், கேக், பிஸ்கெட் தயாரித்தல், ஸ்கிரீன் பிரிண்டிங், மெழுகுவர்த்தி, அகர்பத்தி தயாரித்தல், வீட்டு ஒயரிங், கம்ப்யூட்டர் வகுப்புகள், பூங்கொத்துகள் தயாரித்தல், காளான் வளர்ப்பு, சணல் பொருட்கள் தயாரித்தல், புக் பைண்டிங் போன்றவற்றில் பயிற்சி அளிக்கிறோம்என்கிறார், ஒருங்கிணைப்பார் செல்வமணி.

எந்தப் பயிற்சிக்கு அதிகத் தேவை இருக்கிறதோ, அதற்கேற்ப பயிற்சி வகுப்புகள்  நடத்தப்படுகின்றன. இதற்கென ஒவ்வொரு பயிற்சி நிலையத்திலும் ஒரு பதிவேடு வைக்கப்பட்டுள்ளது. அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தாங்கள் பெற விரும்பும் பயிற்சி குறித்து இந்தப் பதிவேடுகளில் பதிவு செய்துவிட்டுப் போகிறார்கள். ஒவ்வொரு பயிற்சிக்கும் தேவையான எண்ணிக்கையில் ஆட்கள் சேரும்போது, அந்தப் பயிற்சி வகுப்பு தொடங்கப்படுகிறது.       

தையல், அழகுக்கலை, பஞ்சு பொம்மை தயாரித்தல், எம்பிராய்டரி, கேக், பிஸ்கெட், ஊறுகாய் தயாரித்தல் போன்ற பயிற்சிகளுக்கு பெண்களிடையே நல்ல வரவேற்புள்ளது. ஒரு பயிற்சி வகுப்பில் 20 முதல் 25 பேர் வரை சேர்த்துக் கொள்கிறோம். இந்தப் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, ஏழ்மை நிலையிலுள்ளவர்களும், படிப்பைத் தொடர முடியாதவர்களும் பெரிதும் பயனடைகிறார்கள்என்கிறார், சமுதாய மேம்பாட்டுத் திட்ட ஆலோசகர் குமார சாமிராஜா. இந்தப் பயிற்சிகளில் சேர்ந்து பயனடைந்த பெண்களில் பலர் இன்று சுய தொழில் தொடங்கியும், சொந்தமாக கடைகள் வைத்தும் வாழ்க்கையில் முன்னேறி வருகின்றனர்.

இவர்களிடம் அழகுக்கலை பயின்ற மடிப்பாக்கத்தைச் சேர்ந்த எஸ்.சாந்தி, தற்போது சுயமுயற்சியோடு ஹேர் ஆயில் தயாரித்து விற்று, பணம் சம்பாதித்து வருகிறார்.

தர்மாம்பாள் பாலிடெக்னிக்கில் நான் பெற்ற பயிற்சியே இதற்கு அடிப்படைக் காரணம். அங்கு அழகுக்கலை பயின்றபிறகு, என் சொந்த முயற்சியால் பல்வேறு நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு இன்று ஸ்ரீ தர்ஸினி ஹேர்ஆயில்என்ற மூலிகை எண்ணெயைத் தயாரித்து விற்று வருகிறேன். பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும்கூட இந்த எண்ணெயைப் பயன்படுத்தி நல்ல பலனடைந்து வருகிறார்கள்என்கிறார், சாந்தி பெருமையுடன்.

இவரைப்போலவே தமிழ்ச்செல்வி, மஞ்சுளா போன்றோரும் தங்கள் இல்லங்களிலேயே அழகு நிலையம் வைத்து நடத்தி பணம் சம்பாதித்து வருகின்றனர். அலங்கார நகை தயாரித்தலில் பயிற்சி பெற்ற லோச்சனி, தற்போது அலப்பாக்கத்தில் சொந்தமாக அலங்கார நகை கடை துவங்கி சம்பாதித்து வருகிறார்.

எங்களிடம் தையல் பயிற்சி பெற விரும்பி வருபவர்களுக்கு 25க்கும் மேற்பட்ட ஆடைகளை உரிய அளவுகளில் தைக்கப் பயிற்சியளிக்கிறோம். அவர்கள் சரிவரக் கற்றுக்கொண்டார்களா என்பதை அறிய, எழுத்துத் தேர்வும் நடத்துகிறோம். மூன்று மாதங்களுக்கான இப்பயிற்சியை முடித்துச் செல்லும்போது அவர்களிடையே சொந்தமாகத் தொழில் தொடங்கி நடத்தும் அளவுக்கு தன்னம்பிக்கை வந்து விடுகிறது. பயிற்சியின்போது தையல் இயந்திரங்களின் செயல்பாடு, திடீரென அவற்றில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்யும் முறை போன்றவை குறித்தெல்லாம் பயிற்சி கொடுக்கிறோம்என்கிறார், தையல் பயிற்சி ஆசிரியை ஜமுனா ராணி.

இங்கு வந்து பயிற்சி பெறுபவர்களுக்கு, பயிற்சி சான்றிதழ் வழங்கப்படுகிறது. எங்களின் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் இலவசப் பயிற்சி பெற்ற பெண்கள் அனைவருக்கும் தொழில் முனைவோர் மேம்பாட்டுக்கான விழிப்புணர்வு முகாமையும் நடத்தியிருக்கிறோம். இதில் தொழில் தொடங்குவதற்குரிய வழிமுறைகள், மானியங்கள், வட்டி விகிதங்கள் போன்றவற்றை தொழில்துறை மூலமாகவும், பெண்களுக்கான சிறப்புத் திட்டங்கள் மூலம் கடன் பெறுவதற்கான ஆலோசனைகளையும், வங்கிக் கடன் வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்தும் நிபுணர்களைக் கொண்டு எடுத்துரைத்தோம். நாங்கள் வழங்கும் பயிற்சிகளைப் பெற எந்தவிதமான கல்வித் தகுதியும் தேவையில்லை. கணினிப் பயிற்சி பெறுவதற்கு மட்டும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தோல்வியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்என்கிறார் குமாரசாமிராஜா.

விவரங்களுக்கு:
முதல்வர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்,
சமுதாய மேம்பாட்டுத் திட்டம்,
டாக்டர். தர்மாம்பாள் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, தரமணி, சென்னை - 600 113.
தொலைபேசி : 044-22542013
நன்றி
ஜி.மீனாட்சி
புதிய தலைமுறை



Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets