உங்கள் வருகைக்கு நன்றி

முயன்றால் முடியாது இல்லை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முயன்றால் முடியாது இல்லை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திட்டமிட்டு செயல்படுத்தினால் நேரத்தை கட்டுப்படுத்தலாம்.

திங்கள், 2 ஏப்ரல், 2018


மண்ணில் மனிதன் பிறந்ததிலிருந்து நேரத்தின் பங்கு முக்கியமானது. நேரத்தை பொறுத்து தான் அனைத்து செயல்களும் அரங்கேறுகின்றன. ஒன்றை நாம் அடைய வேண்டு மெனில்,நேரத்தின் போக்கிற்கேற்ப ஓடிக் கொண்டிருக்கிறோம். ஏதாவது ஒரு நேரத்தில் வாழ்க்கை வாழ்வதை மறந்துவிட்டு ஓடுகிறோமே என்று தோன்றும். இதற்கு காரணம் நேரத்தை முறையாக திட்டமிட்டு பயன்படுத்தாமல் இருப்பது தான். 
சமநிலைப்படுத்துங்கள்
சமநிலை என்பது எல்லாவற்றிலும் இருப்பதால் இப்பூவுலகம் அன்றாடம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நாம் வேலை செய்வதில் துவங்கி வேடிக்கை விளையாட்டுகளில் ஈடுபடுவது முடிய அனைத்து செயல்களுக்கும் இது பொருந்தும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு செயலை எந்த அளவு முடிக்க முடியும் என திட்டமிட்டு அதன் படி, நேரத்தை சமநிலைப்படுத்துங்கள். பின் அந்த செயலை துவங்கி வெற்றிகரமாக முடியுங்கள். 
உங்களை அறியுங்கள்
நேர மேலாண்மையில் மிகவும் முக்கியமான ஒன்று இது தான். உங்களை நீங்கள் முழுமையாக அறிந்திருந்தால் மட்டுமே நேரத்தை உரிய முறையில் கட்டுப்படுத்தி நிர்வகிக்க முடியும். ஒரு காரியத்தை உங்களால் செய்ய முடியுமா? செய்வதற்கான திறமை உள்ளதா? செயல் திறம் உள்ளதா? உள்ளிட்டவற்றை நீங்கள் அறிந்தால் மற்றவர்களின் புத்திமதியோ, உதவியோ உங்களுக்கு தேவையில்லை. உங்கள் நேரத்தை தரமாக நிர்ணயித்து காரியத்தை வெற்றிகரமாகவும் குறித்த நேரத்திலும் முடிப்பீர்கள். 
எதார்த்தமாக பழகுங்கள்
எதார்த்தமான விஷயங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் செயல்களை உங்கள் திறமை மற்றும் செயல்திறம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு பாருங்கள். கடினமான செயல்களை உங்கள் மீது சுமத்திக் கொள்ளாதீர்கள். 
செயலை பிரித்துக் கொள்ளுங்கள்
பெரிய அளவிலான ஒரு காரியத்தை செய்யத் துவங்கும் முன் அதை சிறு சிறு பாகங்களாக பிரித்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் வேலைப்பளு மற்றும் மனஅழுத்தம் உங்களை மூழ்கடித்து விடும். நேரத்திற்கு தகுந்தவாறு சிறு பாகங்களாக செயலை பிரித்து செய்தால் அதை முழுமையாகவும், பதட்டம் இல்லாமலும் பார்க்கலாம். 
திட்டமிட கற்றுக்கொள்ளுங்கள்
உங்களுடைய வேலைகளையும் அவற்றை தகுந்த நேரத்தில் முடிப்பதற் கான வழிகளையும் திட்டமிட கற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் மேற்கூறியது போல், திட்டமிடும் பொழுதே ஒரு செயலுக்கான நேரமும், செயலை பாகங்களாக பிரித்து முடிப்பதற்கான முயற்சிகளும் நமக்கு தெரிந்துவிடும். இது போல் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு காரியத்தையும் திட்டமிட்டு செயல்படுத்தினால் நேரத்தை கட்டுப்படுத்தலாம்.         -     தினமலர்

Read more...

வானம் பார்த்த பூமியில், மாபெரும் மாற்றம்!

வியாழன், 1 மார்ச், 2012

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் மகாராஷ்டிர மாநிலம் ஒüரங்கபாத் மாவட்டத்திலுள்ள வாகேகான் என்ற கிராமத்தில். சுமார் 1000 ஏக்கர் மானாவாரி தரிசு நிலமே கொண்ட அந்த வானம் பார்த்த பூமியில், மோசமான நிலத்தடி நீரால் ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தும் வறண்டு போய்விட்டன. விவசாயிகள் பிழைக்க வழி தேடி அன்றாட கூலி வேலைக்குச் செல்லும் அவல நிலை ஏற்பட்டது. ஆனால் ஆண்டு சராசரி மழையின் அளவு 700 மி.மீ. என்று இருந்தாலும், மழைத்தண்ணீர் வேகமாக அடித்துச் செல்லப்பட்டதே ஒழிய கிராமத்துக்கு எந்தப் பயனும் இல்லை. விவசாயிகள் மழைக்காலத்தில் மட்டும் ஒரே ஒரு மானாவாரி பயிர் செய்து திருப்தியடைந்தனர்.
ஆனால் இன்று மாபெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஒரு தனியார் நிறுவனமும், ஓர் சமுதாய ஒருங்கிணைப்புக் கழகமும் சேர்ந்து பணியாற்றிய விளைவுதான் அது. 2009-ல் இந்த நிறுவனங்கள் நிலத்தடி நீர் பெருக்கத்தைப் பற்றிய ஆய்வினை மேற்கொண்டன. அதன்படி கிராமத்தைச் சுற்றி ஓடிய இரண்டு ஓடைகளில் தடுப்பு அணைகள் கட்டப்பட்டன. இதனால் பூமியின் நிலத்தடி நீர் உயர்ந்து வழிந்தது. 40 அடி ஆழ ஆழ்துளைக் கிணறுகள் கூட நிரம்பி வழிய ஆரம்பித்தன.
விவசாயிகள் மழைக்காலத்தில் ஆரஞ்சு மற்றும் பல வண்ண ரோஜா மலர்ச்செடிகளையும், பருத்தி மற்றும் ஊடுபயிராக வெள்ளைப் பூண்டும் பயிரிட ஆரம்பித்தனர்.
 சொட்டு நீர்ப் பாசனம் போன்ற புதிய உத்திகளையும் விவசாயிகள் கடைப்பிடிக்கின்றனர். ஆண்டு முழுவதும் தொடர்ந்து விவசாயம் நடைபெறுவதால், ஒரு ஏக்கரில் வருமானம் போய் ஒன்றரையிலிருந்து இரண்டரை லட்சமாக உயர ஆரம்பித்துள்ளது. அமோக விளைச்சல்தான் இதற்குக் காரணம். இதற்காகப் பெறப்பட்ட கடனையும் அடைத்து லாபமும் பெறத் தொடங்கிவிட்டனர் விவசாயிகள். உச்சகட்டமாக இந்த ஆண்டிலிருந்து பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும் ஒவ்வொரு தாய்மாருக்கும் ரூ.500 பரிசு தருவதாக வாகேகான் ஊராட்சி அறிவித்துள்ளது.
வாகேகான் போன்று முன்னேறத் துடிக்கும் கிராமங்கள் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் உள்ளன. பொது சேவை தொண்டு நிறுவனங்கள் இவற்றைத் தத்து எடுக்க வேண்டும். அந்தந்த கிராம இருப்பிடத்தைப் பொறுத்து புதுப்புது உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும். மழை சரியாகப் பெய்யாத பகுதிகளில் காடுகளை மரங்களை வளர்த்துச் செழிக்க ஆவன செய்ய வேண்டும்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets