உங்கள் வருகைக்கு நன்றி

மோசடிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மோசடிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நிராகரித்து விடுங்கள், தேவையற்ற சிக்கல்கள் தவிர்க்கப்பட்டு விடும்.

புதன், 2 ஜனவரி, 2013


சுகந்தியின் மொபைல் போனுக்கு அந்த மிஸ்டுகால் வந்திருந்தது. நீண்ட நேரம் யோசித்து பார்த்தால். ம்ஹும்....யாருடைய நம்பர் என்று தெரியவில்லை. "கூப்பிட்டு பார்ப்போமே" என்று அந்த எண்ணை அழைத்தாள்...

"உங்க நம்பர்ல இருந்து ஒரு மிஸ்டுகால்  வந்திருந்தது" என்றாள்.

"ஹாய் நீங்க கல்பனா'தானே...?" மறுமுனையில் வசீகரிக்கும் ஆண்குரல், அந்தகுரலின் வசீகரத்தை ஒரு வினாடி ரசித்த சுகந்தி, "இல்லைங்க.............ராங் நம்பர்"என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள் சுகந்தி, அந்த சம்பவத்தை அதோடு மறந்தும் விட்டாள்.

நான்கு நாட்களுக்குப் பின் மீண்டும் ஒரு அழைப்பு, "கல்பனா இருக்காங்களா?" - அதே குரல்..! 
"இல்லீங்க, மறுபடியும் தப்பான நம்பருக்கு கூப்பிட்டு இருக்கீங்க, உங்களுக்கு என்ன நம்பர் வேணும்..?? [[இந்த கேள்வியே தப்பு, பேசாம போனை கட் பண்ண வேண்டியதுதானே]] சுகந்தி கேட்டாள். அவன் சொன்னான், "ஐயோ....இது என் நம்பராச்சே..!! என்றாள் சுகந்தி.

"தப்பா நினைச்சிக்காதீங்க, நான் அண்ணா யூனிவர்சிட்டியில பி ஹெச் டி பண்ணிட்டு இருக்கேன், சில தகவல்களை தேடி அலையுறேன், கல்பனாகிட்டே அந்த தகவல்கள் கிடைக்கும்னு சொன்னாங்க, யூனிவர்சிட்டியில அவங்க நம்பர்னு இதைதான் குடுத்தாங்க" - அவன் குரலில் கொஞ்சம் கவலை தெரிந்தது [[அடேங்கப்பா நடிப்பை பாரு ராஸ்கல்]] 

அண்ணா யூனிவர்சிட்டி, ஆராய்ச்சி மாணவன் என்றதும் சுகந்தியின் மனதில் கொஞ்சம் வியப்பு, இவளும் எம்.பில் முடித்து விட்டு டாக்டரேட் ஆராய்ச்சி கனவில் இருப்பவல்தான். "என்ன ஆராய்ச்சி பண்றீங்க சார்..? [[தேவையா இது...??]] 

"என்னை நீங்க விஜய்'ன்னே கூப்பிடலாம் [[டாகுட்டருக்கு வச்சிட்டான்ய்யா ஆப்பு]] சார்னு கூப்புடுற அளவுக்கு இன்னும் வயசாகலை" என சிரித்து கொண்டே சொன்னான்......"நான் நானோ டெக்னாலஜில ரிசர்ச் பண்றேங்க!" 

"ஒ....ரியலி! நான் கூட அதே ஏரியாவுலதான் ரிசர்ச் பண்ணலாம்னு இருக்கேன்" என்றாள் சுகந்தி, "வாவ்....நீங்க கூட ஸ்டுடண்டா ! இஃப் யூ டோன்ட் மைண்ட்...எனக்கு கொஞ்சம் தகவல் தர முடியுமா ?" 
"தகவலனு சொன்னா..?" 

"உங்க ஆராய்ச்சிக்கு நீங்க பத்திரமா மூட்டை கட்டி வச்சிருக்கிற விஷயம் எதுவும் தரவேண்டாங்க ! ஏதோ போனா போகுதுன்னு ரெண்டு, மூணு தகவல்கள் குடுத்தீங்கன்னா கூட போதும்" - அவன் சிரிக்க சுகந்தியும் சிரித்தாள் [[வெளங்கிரும்]] 

"நீங்க எங்கே தங்கி இருக்கீங்க...??" சுகந்தி கேட்டதும், அவன் அண்ணா நகரில் ஒரு முகவரியை சொன்னான், சுகந்தி ஆச்சர்யமானாள், அவள் அதற்கு பக்கத்து தெருவில்தான் வசிக்கிறாள் [[அவ்வ்வ்வ்வ்வ்]]

சில நாட்களுக்கு பின் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் சந்தித்து கொண்டார்கள், அந்த பழக்கம் முதலில் ஆரோக்யமான கல்வியில் ஆரம்பித்து, பிறகு கொஞ்ச கொஞ்சமாக ஜாலி, அன்பு, காதல் என தடம் மாறியது [[நாசமா போச்சி போ]]

"என்ன மேடம் ஒரு நாள் கூட வீட்டுக்கு கூப்பிட்டு அப்பா, அம்மாவை அறிமுகபடுத்த மாட்டேங்குறீங்க.....ஒரு கப் காப்பி தர மாட்டேங்குறீங்க ? [[ஆஹா இப்பவாது சுகந்தி நீ உஷார் ஆகலியே அவ்வ்வ்வ்வ்]]] என்று விஜய் [[டாகுடர் விஜய் அல்ல ஹி ஹி]] சீண்ட, அன்றே அவனை வீட்டிற்கு அழைத்து வந்தாள். வீட்டில் அவர்களை தவிர யாரும் இல்லை, மனதுக்கு பிடித்தவருடனான மாலை [[கயிறு]] பொழுது அவர்கள் மேல் ஒரு மெல்லிய போர்வையாய் படர்ந்தது, நெருக்கமும், இணக்கமும் எல்லை தாண்ட வைத்தது [[அடப்பாவிகளா...!!]] 

முதலில் குற்ற உணர்வாய் தோன்றிய விஷயம், பிறகு அடிக்கடி நடந்தது. ஆனாலும் ஒரு முறை கூட அவன் வீட்டை பார்க்க வேண்டும் என அவளுக்கு தோன்றவே இல்லை [[ம்ஹும் அம்புட்டு மயக்கம்]] 

திடீர் என ஒரு நாள் விஜய் காணாமல் போய் விட்டான், அவன் செல்போன் ஸ்விச் ஆஃப் செய்யபட்டிருந்தது, சுகந்திக்கு பதற்றம் அதிகரித்தது, அவன் சொன்ன அப்பார்ட்மென்ட்ல் விசாரித்தால், அப்படி யாரும் அங்கு இருந்திருக்கவில்லை, யூனிவர்சிட்டியிலையும் அப்படி யாரும் ஆராய்ச்சி மாணவன் இல்லை...

உட்கார்ந்து யோசித்தவளுக்கு [[ரூம் போட்டு யோசித்ததின் விளைவு இது ]] விஷயம் புரிய ஆரம்பித்தது, அவன் ராங் நம்பரில் ஆரம்பித்த ராங் நபர் !! [[ஹய்யோ ஹய்யோ]] எல்லாவற்றையும் தெளிவாகத் திட்டமிட்டிருக்கிறான், இவளுடைய குடும்பம், படிப்பு ரசனை எல்லாம் தெரிந்து கொண்டே வலையில் வீழ்த்தியிருக்கிறான்...

இது ஏதோ ஒரு சுகந்தியின் கதையல்ல...தமிழகத்தில் பல இடங்களிலும் பலவகைகளிலும் நடக்கும் அன்றாட நிகழ்ச்சியே...சைபர் க்ரைமுக்கு வரும் பல்வேறு புகார்கள் பயமுறுத்துகின்றன,மிஸ்டுகால், ராங் நம்பர் போன்றவை கூட தூண்டில் ஆகும் என்பதை பலரும் யோசித்து கூட பார்ப்பதில்லை

"யாரோ அழைத்திருக்கிரார்களே....முக்கியமான சமாச்சாரமோ [[ஹி ஹி]] என திரும்ப அழைத்தாள் போச்சு !!! தெரியாத எண்ணிலிருந்து பெண்களுக்கு மிஸ்டுகால் வந்தால், திரும்ப அழைக்காமல் இருந்தாள் உசிதம். பேசியே ஆகவேண்டும் என தோன்றினால் வீட்டு ஆண்களிடம் கொடுத்து பேச சொல்லுங்கள், "என் நம்பரில் இருந்து மிஸ்டு கால் வந்ததிருந்ததா....இருக்காதே" என பார்ட்டி எஸ்கேப் ஆகிவிடுவார்...

ஆர்குட், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் சகட்டுமேனிக்கு புகைப்படங்களை வைப்பதும், தகவல்கள், போன் நம்பர்கள் போன்றவற்றைத் தருவதும் ரொம்பத் தப்பு, அந்த படங்களை பார்த்து, எண்ணைப்பார்த்து மிஸ்டு கால் பிரச்சினை வரும் ஆபத்து உண்டு, மின் அஞ்சலிலோ, எஸ் எம் எஸ் மூலமாகவோ, இணையதளங்கள் மூலமாகவோ கிடைக்கும் தேவையற்ற எண்களுக்கு போன் செய்யவே செய்யாதீர்கள், இது சிக்கலை காசு கொடுத்து வாங்குவதற்கு சமம்...

மிஸ்டு கால், ராங் கால் போல இன்னொரு விஷயம் ராங் எஸ் எம் எஸ், முதலில் "குட்நைட்" என்று ஒரு எஸ் எம் எஸ் வரும்" யாரது??? என்று நீங்கள் திருப்பி எஸ் எம் எஸ் அனுப்பினால் நீங்கள் அவனுடைய லிஸ்டில் சேர்ந்து விடுவீர்கள், பின் சிக்கல் எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் வரலாம்...!!

ஒரு வரியில் சொல்லவேண்டுமென்றால் [[சொல்லுங்கண்ணே]] தெரியாத,எண்களில் இருந்து வரும் மிஸ்டு கால், எஸ் எம் எஸ் போன்றவற்றை நிராகரித்து விடுங்கள், தேவையற்ற சிக்கல்கள் தவிர்க்கப்பட்டு விடும்....!!!  நன்றி : குங்குமம்.

Read more...

அறிவீர்களா ஆக்சிடோசின் ஆபத்தை ?

வெள்ளி, 13 ஜூலை, 2012


பெருகி வரும் மக்கள்தொகையின் விளைவாக உணவுத் தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. இதைப் பயன்படுத்தி பல குறுக்குவழிகளில் உணவுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. குறுகிய காலத்துக்குள் அதிக அளவில் உணவுப் பொருள்களைத் தயாரித்து லாபம் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான தயாரிப்பாளர்களிடம் அண்மைக்காலமாக மேலோங்கி வருகிறது.
இதன் காரணமாக முன்பைப்போல உணவில் சுகாதாரத்தையோ, வளமிக்க சத்தையோ பெற முடிவதில்லை. இதனால் ஒருகாலத்தில் உணவே மருந்தாகிய காலம்போய், இன்று உணவே விஷமாகி வருகிறது. அந்த அளவுக்கு நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுப் பொருள்களில் ஏதாவது ஒருவகையில் விஷத்தன்மை கலக்கிறது அல்லது கலக்கப்படுகிறது.
பசுமைப்புரட்சி என்ற பெயரில் பயிர்கள் அனைத்தும் விஷத்தன்மையோடு வளர்கிறது என்றால், அவை உணவுப் பொருளாக விற்பனைக்கு வரும்போது அவற்றில், மேலும் பல வகைகளில் கலப்படம் செய்யப்பட்டு விஷத்தன்மை சேர்க்கப்படுகிறது. இதனால் இப்பொருள்களைச் சாப்பிடும் நாமும், தொற்றுநோய்களின் களமாக மாற்றப்படுகிறோம். உணவு விஷமாகி வருவதால், இன்று மனிதர்களைப் பல்வேறு தொற்றுநோய்கள் தாக்குகின்றன.
பெண்கள் பிரசவத்தின்போது நஞ்சைப் பிரித்தெடுப்பதற்காக மருத்துவர்கள் பயன்படுத்தும் ஒருவகை ஹார்மோன் ஆக்சிடோசின். இந்த மருந்தை மிகவும் குறைந்தவிலைக்கு அனைத்து மருந்துக்
கடைகளிலும் வாங்கலாம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை பெண்கள் பிரசவத்துக்கும் மற்றும் சில நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட ஆக்சிடோசின், இப்போது மாடுகளில் அதிகம் பால் சுரப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
இந்தப் பாலைச் சாப்பிடும் நபர்களைப் புற்றுநோய், குறைந்த ரத்த அழுத்தம் போன்றவை தாக்குவதற்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் மாடு வளர்ப்போரில் சில பேராசைக்காரர்கள் மாடுகளுக்கு இந்த வகை மருந்தை ஊசியின் மூலமாகச் செலுத்துவதை நிறுத்தவில்லை. இந்த மருந்து ஊசி போடப்பட்ட மாட்டின் பாலைச் சாப்பிடும் மனிதர்களுக்கே புற்றுநோய் போன்றவை வருகிறதாம். அந்த மருந்தைத் தினமும் உட்கொள்ளும் மாடுகளின் நிலைமையோ அதைவிட மோசம்.
உதாரணமாக 10 ஆண்டுகள் வாழவேண்டிய மாடுகள், இந்த மருந்தால் 5 ஆண்டுகளுக்குள் மடிந்துவிடுவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
அரசு மருத்துவப் பயன்பாட்டைத் தவிர்த்து வேறு எந்தப் பயன்பாட்டுக்கும் இந்த ஹார்மோனைப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டது. உத்தரவிட்டதோடு அரசு திருப்தியாகிவிட்டது எனலாம். ஆனால், இன்றும் நம் ஊரில் சிறிய மருந்துக்கடைகளில் இந்த மருந்தை மருத்துவரின் எந்தப் பரிந்துரைச் சீட்டும் இல்லாமல் வாங்கிவிடலாம். அந்த அளவுக்குத் தாராளமயமாக ஆக்சிடோசின் விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளையில் ஆக்சிடோசின் ஆலகால விஷமாக, தனது விஷத்தன்மையை விஸ்தரித்து வருகிறது. மாடுகளுக்கு மட்டும் செலுத்தப்பட்ட இந்த மருந்து, இப்போது காய்கறிச் செடி வளர்ப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

விவசாயிகள் அதிக மகசூலைப் பெறுவதற்கு ஆக்சிடோசினை செடிகளில் செலுத்துவதாக மத்திய சுகாதாரத் துறை கூறுகிறது. இந்த மருந்தால் காய்கறிகள் அதிக பருமனையும், அழகான வடிவத்தையும், பசுமை நிறத்தையும் பெறுகின்றன.

குறிப்பாக பரங்கிக்காய், சுரைக்காய், தர்பூசணி, வெள்ளரிக்காய், கத்திரிக்காய் ஆகிய காய்கறிகளில் அதிகம் செலுத்தப்படுவதாக சுகாதாரத் துறையே தெரிவிக்கிறது. ஆக்சிடோசின் செலுத்தப்பட்ட செடியின் காய்கறிகளைச் சாப்பிடும்போது, நரம்புத் தளர்ச்சி, புற்றுநோய், குறைந்த ரத்த அழுத்தம், மலட்டுத்தன்மை, ஆண்மைக் குறைவு ஆகிய நோய்கள் ஏற்படும் என மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகச் சென்று கொண்டிருக்கிறது.

ஆக்சிடோசின் கொடுக்கப்படும் மாடுகளைக்கூட ஒருகாலகட்டத்தில் கண்டுகொள்ளலாம். ஆனால், காய்கறிகளை இனம் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இந்த காய்கறிகளைச் சாப்பிட்டவுடன், நமக்கு எந்தவிதப் பாதிப்பும் தெரியாது. வெகுநாள்கள் சென்ற பின்னர்தான், ஆக்சிடோசின் மனித உடலுக்குள் தனது வேலையைக் காட்டத் தொடங்கும்.

விலங்குகளுக்கோ, தாவரங்களுக்கோ ஆக்சிடோசினைப் பயன்படுத்தக் கூடாது என தடை இருந்தாலும், இந்த மருந்து மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதே, விவசாயிகள் இதை அதிகம் பயன்படுத்துவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாகவே இந்த குறுக்குவழியை விவசாயிகள் தேர்ந்தெடுக்கின்றனர். இன்றைய நிலவரப்படி 1 மில்லி ஆக்சிடோசின் 15-ல் இருந்து  20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் கொடுக்கும் சத்தான உரப் பொருள்களைக் காட்டிலும், பலமடங்கு விலை குறைவாகும்.

பெரிய விளைவையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் இப் பிரச்னையின் ஆழத்தை அரசு உணரவில்லையென்றே கூற வேண்டும். அதன் காரணமாகத்தான், இன்றும் மக்களிடம் சாதாரணமாக ஆக்சிடோசின் நடமாடுகிறது. அரசு இனியும் ஆக்சிடோசின் விஷயத்தில் தெளிவான, கடுமையான நடவடிக்கையை எடுப்பதற்கு காலதாமதப்படுத்தினால், நாளைய தலைமுறையை நோயுள்ளதாக்கும் செயலில் அரசுக்கும் முக்கிய பங்கு இருக்கும்.
 

Read more...

வெளிநாட்டு பொருட்கள் வாங்குகிறீர்களா? நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் எச்சரிகைகள்

ஞாயிறு, 3 ஜூன், 2012


வெளிநாட்டுப் பொருட்களை வாங்குவதற்கு அதிக ஆர்வம் பலரிடம் உண்டு. ஆனால், அவற்றை வாங்கும்போது, நுகர்வோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து, நுகர்வோர் பாதுகாப்புத்துறை விளக்கமளித்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பணி நிமித்தமாகவும், சுற்றுலாவுக்காகவும், பல்வேறு நாடுகளுக்கு சென்று வருகின்றனர். அப்போது, அங்கிருந்து எலக்ட்ரானிக் மற்றும் வேறு சில பொருட்கள் வாங்கி வருகின்றனர். சில பொருட்கள், வாங்கிய சில மாதங்களிலேயே பழுதடைந்து விடுகின்றன. இதனால், நுகர்வோருக்கு பல ஆயிரங்கள் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.
இந்நிலையில், வெளிநாட்டுப் பொருட்களை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து, நுகர்வோர் பாதுகாப்புத் துறை அளித்த விளக்கம்:

*
எலக்ட்ரானிக் பொருட்கள், நம் நாட்டில் வேலை செய்யுமா என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு நாட்டிலும் அவர்களது மின் சப்ளைக்கு ஏற்ப பொருட்கள் தயாரிக்கப் படுகின்றன.

*
பொருட்கள் வாங்கும் கடையின் கிளைகள் நம் நாட்டில் இருக்கிறதா? சேவையாளர்கள் இருக்கின்றனரா? என்பதை, பொருள் வாங்கும் முன் கடைக்காரரிடம் விவரமாக கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

*
ஒரு நாட்டில் ஒரு பொருளுக்கு கொடுக்கப்படும் உத்திரவாதம், மற்றொரு நாட்டில் செல்லுபடியாகுமா என்பதை கவனித்து வாங்க வேண்டும். பொதுவாக, அயல்நாட்டில் வாங்கும் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு உத்திரவாதம் அளிப்பதில்லை.

தவறு நடந்தால்?பொருள் வாங்கிய கடை நிர்வாகத்தை பேக்ஸ் அல்லது இ-மெயில் மூலமாக தொடர்பு கொள்ள வேண்டும். கடை நிர்வாகத்திடம் இருந்து சரியான பதில் வராவிட்டால், இலவச ஆலோசனை கூறும் நுகர்வோர் மன்றங்களை நாடலாம்.அயல்நாட்டில் வழக்கு தொடுப்பது எளிதான காரியம் அல்ல. அதிக செலவும், காலதாமதமும் ஏற்படும்.

எந்த சட்டம் செல்லும்?இண்டர்நெட் மூலம் சிங்கப்பூரில் இருந்து பொருட்கள் வாங்கும் போது, இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் செல்லுபடியாகுமா அல்லது சிங்கப்பூர் சட்டமா என்பதை, பொருட்கள் வாங்குவதற்கு முன்பே வெப்சைட் மூலமாக தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அதன்பிறகே பொருட்களை வாங்க வேண்டும்.
இவ்வாறு, நுகர்வோர் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
http://c14.zedo.com/OzoDB/0/0/0/blank.gif

Read more...

பெண் வீட்டு விருந்து ஒரு வரதட்சணையே!

புதன், 30 மே, 2012


பணமாக பாத்திரமாக நகையாக நிலமாக வீடாக வாங்குவது மட்டும் தான் வரதட்சணை என்று மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள்.
ஆனால் உணவாக வாங்குவது அதாவது பெண் வீட்டில் போய் விருந்து சாப்பிடுவது அல்லது பெண் வீட்டில் விருந்து சமைத்து அண்டா குண்டாக்களில் வரவழைத்து மாப்பிள்ளை வீட்டில் உணவு பரிமாறுவது அல்லது மண்டபத்தில் நடக்கும் விருந்தில் பெண் வீட்டார் பகிர்ந்து கொள்வது இது போன்ற செயல்களும் வரதட்சணை தான் என்பது உணரப்படுவதில்லை.அது ஒரு சமூகக் கொடுமையாகக் கருதப்படுவதில்லை. இந்த விஷயத்தில் தவ்ஹீதுவாதிகளும் தடம் புரண்டு விடுகின்றனர். பெண் வீட்டு விருந்துக்குப் பக்காவாக வக்காலத்து வாங்குகின்றனர்.
உண்மையில் பெண் வீட்டு விருந்து ஒரு கொடிய வரதட்சணையும் மாபெரும் சமூகக் கொடுமையும் ஆகும்.
வரதட்சணைக்குரிய அனைத்து விளைவுகளும் இதற்கும் பொருந்தும்.
கருவிலேயே இனம் கண்டு பெண் குழந்தைகளைக் கருவறுப்பது பெண் சிசுக் கொலை பெண் வீட்டுக்காரன் வீடு வீடாகப் பிச்சை எடுப்பது பெண்கள் விபச்சாரத்தில் இறங்குவது பிற மதத்தவருடன் ஓடிப் போவது போன்ற அனைத்து தீய விளைவுகளுக்கும் இந்தப் பெண் வீட்டு விருந்து காரணமாக அமைகின்றது. அதனால் இது ஒழித்து ஓய்த்துக் கட்டப்பட வேண்டிய மிகப் பெரிய சமூகக் கொடுமையாகும்.
தவ்ஹீத் ஜமாஅத்தின் சமூகப் புரட்சி:-
பெண் வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டிற்குக் கப்பம் கட்ட முடியாமல் வரதட்சணை வரி செலுத்த முடியாமல் தற்கொலை செய்தவர்களை அல்லது தற்கொலை செய்யப் போகிறேன் என்று சொல்பவர்களைக் கண்டிருக்கிறோம். ஆனால் பெண் வீட்டில் விருந்து வைத்தே தீருவோம்; இல்லையேல் தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டுபவர்களை இப்போது சமுதாயம் கண்டு கொண்டிருக்கின்றது.
ஒரு காலத்தில் பெண் வீட்டிலிருந்து வாரி வழித்து சுருட்டி சுரண்டிக் கொண்டிருந்த வரதட்சணை என்ற பெயரில் கொள்ளையடித்துக் கொண்டிருந்த இளைஞர் படை இன்று வேண்டாம் வரதட்சணை வேண்டாம் பெண் வீட்டு விருந்து என்று சொல்கின்ற இந்த சகாப்தத்தைப் புரட்சி என்று தான் சொல்ல வேண்டும்.
உண்மையில் ஓர் ஏகத்துவ இளைஞன் தான் பெண் பேசிய வீட்டில் பெண் வீட்டு விருந்து கூடாது என்று கூறியுள்ளார். அதற்குப் பெண்ணின் தந்தை விருந்து வைத்தே தீருவேன்; இல்லையேல் தற்கொலை செய்து உயிரை மாய்ப்பேன் என்று மிரட்டியுள்ளார்.
ஏகத்துவ இளைஞன் விருந்து வேண்டாம் என்று மறுப்பது ஒரு புரட்சி! அதே சமயம் பெண்ணின் தந்தை விருந்து வைக்கா விட்டால் செத்து விடுவேன் என்று சொல்வது ஒரு சமூகக் கொடுமையும் சாபக் கேடுமாகும். இந்த சமூகக் கொடுமையையும் சாபக் கேட்டையும் எதிர்த்துத் தான் தவ்ஹீத் ஜமாஅத் போர் முரசு கொட்டிக் கொண்டிருக்கிறது.
புறக்கணிப்பு:-
இன்று தவ்ஹீது வட்டத்தில் உள்ள ஒரு சிலர் நான் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லி விட்டேன்; அவர்கள் கேட்கவில்லை என்று கூறி நழுவுகின்றனர். ஆனால் பெண் வீட்டு விருந்தில் போய் கலந்து கொள்கின்றனர். வேறு சிலர் அந்த விருந்தில் கலந்து கொள்வதில்லை. நாங்கள் என்ன அங்கு போய் சாப்பிடவா செய்தோம்? என்ற மழுப்பலைப் பதிலாக்குகின்றனர். இவ்விரு சாராரும் பெண் வீட்டுச் சாப்பாட்டை சாபக் கேட்டை சமூகச் சீர்கேட்டை வாழ வைக்கின்றனர்; வளர விடுகின்றனர். இதற்குரிய பாவங்களைச் சம்பாதிக்கின்றனர்.
இந்த சமூகக் கொடுமையை ஒழிக்க ஒரே வழி புறக்கணிப்பது தான். புறக்கணிப்பது என்றால் எதை? பெண் வீட்டு விருந்தை மட்டுமல்ல பெண்ணையும் சேர்த்தே புறக்கணிப்பது தான்.
ஒரு காலத்தில் வரதட்சணை தரவில்லை என்றால் உன் பெண் வேண்டாம் என்று சொல்வதற்குத் தெம்பும் திராணியும் கொண்டிருந்தார்கள். இன்று தவ்ஹீதுக்கு வந்த பின் பெண் வீட்டு விருந்து ஒரு பித்அத் அது ஒரு சமூகக் கொடுமை என்ற கண்ணோட்டத்தில் இந்த விருந்தை நிறுத்தவில்லை என்றால் உன் வீட்டுப் பெண்ணே வேண்டாம் என்று கூறுவதற்குத் தெம்பும் திராணியும் அற்றவர்களாகி விட்டனர்.
அன்று ஒரு தீமைக்காக நிமிர்ந்து நின்றவர்கள் இன்று ஒரு தீமையை ஒழிப்பதற்காக அதுவும் ஏகத்துவவாதிகளாக இருந்து கொண்டு திராணியற்றவர்களாக ஆகி விட்டனர். சத்தியவாதிகளாக இருக்கும் போது தான் இந்தத் தெம்பு தேவை. ஆனால் இப்போது தெம்பில்லாமல் ஒரு ஜடம் போல் காட்சியளிப்பது தான் வேதனையாகும்.
இப்படிப் பெண் வேண்டாம் என்று சொல்வது எந்த அடிப்படையில்?:-
நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்!” (அல்குர்ஆன் 5:2)
உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம் (தமிழாக்கம் எண்: 78)
இந்த ஹதீஸின் அடிப்படையில் பெண் வீட்டு விருந்து என்ற சமூகத் தீமையைத் தடுப்பது ஈமானில் உள்ளதாகும்.
அதிலும் குறிப்பாக திருமணம் முடிக்கும் ஆண்கள் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் முதல் தரத்திலேயே இந்தத் தீமையைத் தடுத்து விடலாம். அதாவது கையாலேயே தடுத்து விடலாம். கை என்பது மாப்பிள்ளையின் முழு அதிகாரத்தைக் குறிப்பிடுகின்றது. தன் பெண்ணைக் கட்டிக் கொடுப்பதற்காக மாப்பிள்ளையின் ஆட்காட்டி விரலின் அசைவுகள் அத்தனைக்கும் அசையும் நிலையில் பெண்ணின் தந்தை இருக்கின்றார். அதனால் இந்த வாய்ப்பைக் கூடப் பயன்படுத்த முன்வராத மாப்பிள்ளை கொள்கைவாதியல்ல! கடைந்தெடுத்த கோழை!
சப்பைக்கட்டும் சாக்குப்போக்குகளும்:-
பெண் வீட்டாரின் விருந்து வைக்கும் பிடிவாதம் அது சமூகத்தில் புரையோடிப் போன தீமை என்பதையே காட்டுகின்றது. சமூகத்தின் கோரப் பிடியாகவே காட்சியளிக்கின்றது. இதைத் தொடர்வதற்காகப் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் பல்வேறு சாக்குப் போக்குகளைக் கூறி வருகின்றனர்.
வெளியூரிலிருந்து விருந்தாளிகள் வந்து விட்டனர்; அவர்களுக்கு விருந்து கொடுக்கும் போது அக்கம்பக்கத்தவர்களுக்கும் அண்டை வீட்டாருக்கும் சொந்த பந்தங்களுக்கும் அப்படியே சேர்த்து விருந்து வைக்கிறோம் என்று சால்ஜாப்பு கூறுகின்றனர்.
அக்கம்பக்கத்தவர் மீது தான் எத்தனை ஆதரவு? அண்டை வீட்டார் மீது தான் எத்தனை அரவணைப்பு? உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கின்றது; மேனி புல்லரிக்கின்றது.
மருத்துவம் பொறியியல் போன்ற தொழிற்கல்விகளுக்காக சொந்த பந்தங்களில் அக்கம் பக்கங்களில் ஒரு பத்தாயிரம் ரூபாய் உதவி கேட்டால் உதவி செய்ய முன்வராதவர்கள் எள்ளளவுக்கும் ஈயாதவர்கள் கல்யாணப் பந்தலிலே பல லட்சங்களைக் கொட்டி விருந்து என்ற பெயரில் பாழாக்குவார்கள். சொந்த பந்தங்கள் நோயில் மாட்டி விட்டால் கூட கடனில் சிக்கி விட்டால் கூட இவர்கள் உதவ முன்வர மாட்டார்கள். இத்தனைக்கும் இதுபோன்ற வகைகளுக்காக உதவி செய்வது மார்க்க அடிப்படையில் கடமையாகும். ஆனால் இதைச் செய்ய மாட்டார்கள். இந்த விருந்து வைப்பதற்காக மட்டும் சொந்தம் பந்தம் அக்கம் பக்கம் என்ற சால்ஜாப்புகள் சமாளிப்புகள்.
இந்த சமாளிப்புகளில் ஒன்று தான் வெளியூர்க்காரர்கள் பெயரைச் சொல்லி இப்படி ஒரு விருந்தளிப்பதாகும். இந்த விருந்து எதை முன்னிட்டு? திருமணத்தை முன்னிட்டுத் தான். திருமணம் இல்லாமல் இப்படி ஒரு விருந்தை வைக்க முன்வருவார்களா? நிச்சயமாக முன்வர மாட்டார்கள்.
அன்பளிப்பின் அடிப்படை:-
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அஸ்த் எனும் குலத்தைச் சேர்ந்த) ஒருவரை (ஸகாத் வசூலிக்கும்) அதிகாரியாக நியமித்தார்கள். அந்த அதிகாரி தமது பணியை முடித்துக் கொண்டு நபியவர்கடம் திரும்பி வந்து அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பப்பாக வழங்கப்பட்டது என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உமக்கு அன்பப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பாரும்! என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி)
நூல்: புகாரி 6636
இந்த ஹதீஸில் அன்பளிப்பு குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கமளிக்கின்றார்கள். இந்த அன்பளிப்பின் அடிப்படையே ஜகாத் தான். ஜகாத் வசூலுக்குச் செல்லவில்லையானால் இவருக்கு இந்த அன்பளிப்பு கிடைத்திருக்காது. சென்றது ஜகாத் வசூலுக்கு என்பதால் வந்த அன்பளிப்பு ஜகாத்திற்காக என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளிக்கின்றார்கள்.
இது போன்று பெண் வீட்டில் நடத்தப்படும் விருந்து அந்த வீட்டில் நடைபெறும் திருமணத்தை ஒட்டித் தான். இந்த விருந்துக்கு வெளியூர்காரர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு நடத்துகின்றனர். வெளியூர்காரர்கள் வந்தால் அவர்களுக்கு உணவளிப்பது எப்போதும் உள்ள ஒன்று!
திருமணத்திற்காக வெளியூர்காரர்களை அழைப்பது என்பதே மார்க்கத்தில் இல்லை. அப்படி அழைத்து வந்தால் அந்த விருந்து அவர்களுடன் மட்டும் தான் நிற்க வேண்டுமே தவிர அதைச் சாக்கிட்டு உள்ளூரில் ஒரு பெரிய பட்டியலாக நீளக் கூடாது.
பொதுவாகத் திருமணம் பேசி முடிக்கும் போது பெரும்பாலும் வெளியூர்களில் பெண் அல்லது மாப்பிள்ளை பேசி முடிப்பதில்லை. உள்ளூரிலேயே மாப்பிள்ளை பெண் பார்த்து திருமணம் முடித்துக் கொள்கின்றனர். ஆனால் இன்று அல்லாஹ்வின் அருளால் ஏகத்துவக் கொள்கைச் சகோதரர்கள் கொள்கையுள்ள பெண் வேண்டும் என்பதற்காக வெளியூரில் பெண் பேசி முடிக்கின்றனர்.
இதுபோன்ற கட்டங்களில் சம்பந்த வழிகள் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்கு வரும் போது விருந்தாளிகள் என்ற அடிப்படையில் பெண் வீட்டார் அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வதில் தவறில்லை. ஆனாலும் அதைக் காரணம் காட்டி பெண் வீட்டார் தங்களது சொந்த பந்தங்களுக்கும் தெருவாசிகளுக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். இப்படியே பெண் வீட்டு விருந்து என்ற சமூக நிர்ப்பந்தம் உருவாகி லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகின்றது. இந்த நிலை ஏற்பட்டு விடக் கூடாது.
எனவே இதைக் கவனத்தில் கொண்டு ஆண்கள் வெளியூருக்குச் சென்று மணம் முடிக்கும் நிலை ஏற்பட்டால் அங்கு ஏற்படும் திருமணச் செலவுகள் விருந்துச் செலவுகளை மாப்பிள்ளை வீட்டாரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மாப்பிள்ளை வீட்டார் தங்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண் வீட்டு விருந்தை நிறுத்த வேண்டும். பெண் வீட்டாரும் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
ஒரு சில இடங்களில் பெண்ணின் உறவினர்களே நிர்ப்பந்தித்து ஒரு விருந்து வைத்தால் என்ன? என்று பெண் வீட்டாரிடம் கேட்கின்றனர். இது தான் அவர்களைக் கடன் வாங்கி வட்டிக்கு வாங்கி விருந்து வைக்கத் தூண்டுகிறது. அப்படிச் செய்தால் அந்தப் பாவத்தில் இவ்வாறு தூண்டி விட்ட உறவினர்களுக்கும் பங்குண்டு என்பதைக் கவனத்தில் கொண்டு பாவத்திற்குத் துணை போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நன்றி:
ஷம்சுல் லுஹா (ரஹ்மானி) 
தீன்குலப் பெண்மணி

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets