உங்கள் வருகைக்கு நன்றி

தன்னம்பிக்கைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தன்னம்பிக்கைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வாழ்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால்

ஞாயிறு, 29 நவம்பர், 2020

 

வாழ்வில் சாதனைகளைப் படைத்திட ஒருவருக்கு புத்திசாலித்தனம் மட்டும் போதும் என்று நம்பிவந்த எண்ணம் இன்று பொய்த்து, உணர்வுசார் நுண்ணறிவு அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது.

 

மென் திறன், பேச்சு திறன் என்ற திறன்களுக்கு மத்தியில் இன்று தனிப்பட்ட வாழ்விலும் சரி தொழில் வாழ்விலும் சரி, உணர்வுசார் நுண்ணறிவு நம் வெற்றிக்கும், சந்தோஷத்திற்கும் முதன்மையாக விளங்குகிறது. சாதாரணமாக எல்லோருக்கும் மகிழ்ச்சி துக்கம், கோபம், பயம் , பொறாமை, அன்பு, பாசம், சினம், ஆசை, பொறாமை, வெறுப்பு, விரக்தி, கவலை, எதிர்பார்ப்பு, ஏமாற்றம்,எரிச்சல், சலிப்பு, மன உளைச்சல், அவநம்பிக்கை, தனிமை, வலி என்று பல்வேறு உணர்ச்சிகள் இருக்கும். அது அளவிற்கு மீறி வெளிப்படும் போது நம்மையும், நம் சுற்றத்தாரையும் பாதிக்கும் சூழ்நிலையை நாம் தினமும் பார்க்கிறோம்.

 

மன அழுத்தம்

 

உணர்ச்சிகளை கட்டுபடுத்தாததால் தேவையற்ற மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம். மன அழுத்தத்தின் பொழுது நம் நாவும், செயல்பாடுகளும் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. அதன் விளைவாக பேசும் பேச்சும், நடவடிக்கைகளும் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. மன அழுத்தத்தின் பொழுது நாம் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் ஆக்கபூர்வமாக இருப்பதில்லை. ஆகையால் நம் வெற்றிக்கும், அமைதியான வாழ்விற்கும் உணர்வுசார் நுண்ணறிவு பெரிய பாலமாக அமைகிறது. அதை உணர்ந்து, அறிந்து செயல் பட்டால் வாழ்வில் வெற்றியை அடைவோம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. உணர்ச்சி நுண்ணறிவை எளிமையான முறையில் விளக்க முடியும். உணர்ச்சி நுண்ணறிவை நம்மிலும் மற்றவர்களிடமும் உள்ள உணர்ச்சிகளை அடையாளம் கண்டு புரிந்து கொள்ளும் திறன் என வரையறுக்கலாம்

 

உணர்ச்சி நுண்ணறிவு

 

உணர்ச்சி நுண்ணறிவு என்பது உணர்ச்சி புரிதலைப் பயன்படுத்தி முடிவுகளை எடுக்கவும், சிக்கல்களைத் தீர்க்கவும், மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் உதவுகிறது. உணர்ச்சி நுண்ணறிவில் உணர்ச்சிகளை உணர்வது, பகுத்தறிவது, புரிந்துகொள்வது, நிர்வகிப்பது என நிலைகள் உள்ளன. கடந்த காலங்களில் உணர்ச்சிகளும் புத்திசாலித்தனமும் ஒன்றுக்கொன்று எதிர்ப்பாகவே கருதப்பட்டன. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகளில், உணர்ச்சி நுண்ணறிவு முழுமையான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான பாதையில் நம்மை வழிநடத்த முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது, உணர்ச்சிபூர்வமான மேற்கோள்(EQ) ஏன் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைகிறது? அதிக உணர்ச்சி நுண்ணறிவு (EI) உள்ளவர்கள் பணியமர்த்தப்படுவதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும், சிறந்த சம்பளத்தைப் பெறுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது.

 

மேம்படுத்துவது எப்படி

 

1.நீங்கள் அனைவரிடமும் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள் என்பதைக் கவனியுங்கள்

2.துக்கம், பயம் போன்ற உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்

3.மன அழுத்த சூழ்நிலைகளுக்கு எவ்வாறு பிரதிபலிக்கிறீர்கள் என்பதை ஆராயுங்கள்

4.தோல்வி உணர்வை விரட்டுங்கள்.

5.உங்கள் பணிச்சூழலில் இருப்பவர்கள் உங்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை உணருங்கள்

6.தன்னம்பிக்கை ஊட்டும் விஷயங்களை பற்றி யோசிக்கவோ பேசவோ பழகுங்கள்

7.உங்கள் செயல்களுக்கு பொறுப்பேற்கிறீர்களா என்று யோசியுங்கள்

8.உங்கள் செயல்கள் மற்றவர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை ஆராயுங்கள்

9.&' கோபம் நம்மை ஆக்கிரமிப்பு செய்யாமல் கட்டுக்குள்வைத்திருங்கள்

10.உணர்ச்சிவசப்பட்டு எதையும் கூறவோ, செய்யவோ வேண்டாம்

11.ஏமாற்றத்தை தாங்கி கொள்ளும் மனப்பக்குவத்தை வளருங்கள்

12.தியானம் செய்து பழகுங்கள்.

13.எவரிடமும் உங்கள் வெறுப்பை காட்டாதீர்கள்

14.மன நிலையை கட்டுக்குள் கொண்டு வாருங்கள்.

15.சுய மதிப்பீடு செய்யுங்கள்.

 

பணி இடத்தில் சாதிக்க

 

நெருங்கியவர்கள் செய்யும் செயல்களால் நம் மனம் நொறுங்கி போகும். அந்த சமயத்தில் எதையும் யோசிக்காமல் நாம் எடுக்கும் முடிவுகள் அந்த உறவை அறவே அழிக்கும். அவர்கள் என் அப்படி நடந்து கொண்டார்கள், காரணம் இருக்கும் என்று நாம் யோசிக்க கற்று கொண்டால் அந்த முடிவை தவிர்க்கலாம். எல்லோருக்கும் அவர்கள் செயல்களுக்கு ஒரு காரணம் இருக்கும் என்பதை உணர வேண்டும். அதை அவர்களிடம் பேசினால் நியாயமாக தோன்றும். உணர்ச்சி நுண்ணறிவு மதிப்புமிக்க திறமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

 

பயிற்சி மூலம் மேம்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்ற திறமையும் இதுதான். பணியிடத்தில் பலங்களையும் பலவீனங்களையும் அடையாளம் காணுங்கள். சக ஊழியர் உங்களை எரிச்சலடையச் செய்யலாம் அல்லது உங்கள் முதலாளி கடினமான பணியைத் தரக்கூடும். நீங்கள் எதிர்வினையாற்றுவதற்கு முன், இவை தற்காலிகமானவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். பணியிடத்தில் பிடித்த விஷயங்களில் மனதை செலுத்துங்கள். முடிவுகளை எடுப்பதற்கு முன் சிந்தியுங்கள். மற்றவர்கள் சொல்ல வருவதை பொறுமையோடு கேட்க பழகுங்கள்.

 

சொற்களற்ற தகவல்தொடர்புக்கு கவனம் செலுத்துங்கள். ஒருவர் தங்கள் உடல் மொழி மூலம் அனுப்பும் சமிக்ஞைகள் அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி நிறைய தெரிவிக்க முடியும். அலுவலக அரசியலில் இறங்குவதைத் தவிர்க்கவும்.பணி இடமாக இருந்தாலும் நம் தனிப்பட்ட வாழ்வாக இருந்தாலும், பிறரோடு இணைந்து செயல்பட்டு, பிறரைப் பாராட்டி, குறைகளை ஏற்றுக் கொண்டு, நம் உணர்ச்சி நுண்ணறிவைப் பயன்படுத்துவதின் மூலமாக வாழ்வில் வெற்றி மீது வெற்றிகளை குவிக்கலாம்.

 

-முனைவர் உஷா ஈஸ்வரன், தனித்திறன் மேம்பாட்டு ஆலோசகர்

 

Read more...

எதையுமே மகிழ்ச்சியுடன் செய்யுங்கள்.

திங்கள், 18 மே, 2020


'பாசிட்டிவ்' ஆக இருப்பவர்களோடு பழகுங்கள். நம்மை சுற்றி எப்போதுமே, 'பாசிட்டிவ் வைப்ரேஷன்' இருந்தால், நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம். எனவே, எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை, எப்போதும் பக்கத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள்.
உற்சாகமாக இருங்கள்: சோகத்தை விட்டொழித்து, எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலை செய்யுங்கள். இந்த வேலையை செய்ய வேண்டுமே என, செய்து முடிக்காதீர். இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்துவிட முடியாது என்பதை, மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என, எண்ணி வேலை பாருங்கள்.
'பவர்புல்'லாக உணருங்கள்: உடல் வலிமை, பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி, மன வலிமை மிக முக்கியம். உங்களை போல, இந்த உலகத்தில், 'பவர்புல்' ஆனவர் யாருமில்லை என்றால், உடனே சிரிக்காதீர்கள்.

இது தான் நிஜம். உங்களின், 'பெஸ்ட்' எது என்பது, உங்களுக்கே இன்னும் தெரியவில்லை. உங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றினால் நீங்கள் வேற, 'லெவல்' ஆள்.
நேசியுங்கள்: உங்களை நீங்களே நேசியுங்கள். இந்த உலகத்தில் தன்னை நேசிக்காத மனிதனால், வெற்றியடையவே முடியாது.
உங்களுக்கு பிடிக்க, உங்களை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றுங்கள். உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் புறப்பட்டு எழுந்தால், உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை, மனதுக்கு புரிய வையுங்கள்.
உங்களை போல அழகானவர் யாரும் இல்லை; திறமையானவர் யாரும் இல்லை என்பதை, மீண்டும் மீண்டும் உங்களுக்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
முயற்சி தொடரட்டும்: வாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம் உங்களுக்கு என்ன நடக்கும் என, தெரியாது.
இந்த நீண்ட நெடும் பயணத்தில், ஒரு சிலருக்கு, வெற்றிகள் எளிதில் வரும், சிலருக்கு தாமதமாக வரும். அதற்காக சோர்ந்து விடக்கூடாது. வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து, அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள்.
வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது. ஆனால், 'பாசிட்டிவ்' எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால், உங்களுக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, உங்கள் பயணம் மகிழ்ச்சியாகவும், பிடித்தமானதாகவும் இருக்கும்.

Read more...

தன் தேவைகளை தானே செய்து பழக வேண்டும் ஏன் ?

செவ்வாய், 18 செப்டம்பர், 2018


நடுத்தர வயதிலிருந்தே, தன் தேவைகளை தானே செய்து பழக வேண்டும். ஏனெனில், திடீரென கணவன் அல்லது மனைவிக்கு ஏதாவது நேர்ந்து விட்டால், பின்னாளில் சிரமம் ஏற்படாததுடன், மற்றவர்களை சார்ந்திருக்காமல், தனியாக வாழும் தைரியத்தையும் ஏற்படுத்தும். இல்லையெனில், அவர்களுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும், முதிய மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தாமரை இலை மேல் இருக்கும் தண்ணீர் போல, வாழக் கற்றுக் கொள்வது நல்லது. வீட்டுக்கு வருவோரிடம், உங்கள் புராணத்தை பாடாமல், அவர்கள் சொல்வதை முதலில் கேளுங்கள். அது, அவர்களை உற்சாகப்படுத்தி, உங்களை அடிக்கடி காண வரச் செய்யும். பிரச்னை இல்லாத மனிதர்கள், உலகில் யாருமே இல்லை. எனவே, 'நான் என்ன பாவம் செய்தேனோ; எனக்கு ஏன் இந்தக் கஷ்டம்...' என, மற்றவர்களிடம் புலம்புவதை தவிர்க்க வேண்டும்.சக்திக்கு ஏற்ற உழைப்பும், உழைப்புக்கு ஏற்ற ஓய்வும், முதுமைக் காலத்தில் அவசியம். முடிந்த அளவுக்கு, குடும்பத்துடன் சுற்றுலா செல்வதில் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள். குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று நண்பர்களை, உயிருக்கு உயிராக நேசியுங்கள். உறவு கள் கைவிட்ட காலத்தில், நட்பு கைகொடுக்கும். உடலுக்கு ஏதாவது தொல்லை வந்துவிட்டால், பெரிதாக கற்பனை செய்து, அலட்டவும் கூடாது; அதே சமயம், அலட்சியப்படுத்தவும் கூடாது.மேலும், எந்த ஒரு டாக்டரிடமும் முழு நம்பிக்கை வைக்காமல், இவரிடமிருந்து அவர், அவரிடமிருந்து இவர் என மாறாதீர். தன் மறைவுக்குப் பின், யார் யாருக்கு, சொத்து போய்ச் சேர வேண்டும் என்பதை தெளிவாக, சாட்சிகள் முன்னிலையில் எழுதி வைப்பது மிக அவசியம். இதனால், பிற்காலத்தில் பிள்ளை கள், அவர்களின் துணை மற்றும் வாரிசுகளுக்கிடையே ஏற்படும் மோதல் தொல்லைகளைத் தவிர்க்கலாம். முதுமை காலத்தில் வசிக்கப் போகும் இடம், வீடு பற்றி ஆரம்பத்திலேயே திட்டமிட்டு கொள்ளுங்கள். நல்ல உடல்நலம், தினமும் செய்யும் உடற்பயிற்சி, சத்தான உணவு, மன உறுதி, ஆன்மிக ஈடுபாடு, தொண்டு, பிராணாயாமம், தியானம் இவற்றோடு கொஞ்சம் பணமும் இருந்தால் போதும்... பலருக்கு புயலாக வரும் முதுமைக்காலம், உங்களுக்குப் பூங்காற்றாக வீசும்!

Read more...

திட்டமிட்டு செயல்படுத்தினால் நேரத்தை கட்டுப்படுத்தலாம்.

திங்கள், 2 ஏப்ரல், 2018


மண்ணில் மனிதன் பிறந்ததிலிருந்து நேரத்தின் பங்கு முக்கியமானது. நேரத்தை பொறுத்து தான் அனைத்து செயல்களும் அரங்கேறுகின்றன. ஒன்றை நாம் அடைய வேண்டு மெனில்,நேரத்தின் போக்கிற்கேற்ப ஓடிக் கொண்டிருக்கிறோம். ஏதாவது ஒரு நேரத்தில் வாழ்க்கை வாழ்வதை மறந்துவிட்டு ஓடுகிறோமே என்று தோன்றும். இதற்கு காரணம் நேரத்தை முறையாக திட்டமிட்டு பயன்படுத்தாமல் இருப்பது தான். 
சமநிலைப்படுத்துங்கள்
சமநிலை என்பது எல்லாவற்றிலும் இருப்பதால் இப்பூவுலகம் அன்றாடம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நாம் வேலை செய்வதில் துவங்கி வேடிக்கை விளையாட்டுகளில் ஈடுபடுவது முடிய அனைத்து செயல்களுக்கும் இது பொருந்தும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு செயலை எந்த அளவு முடிக்க முடியும் என திட்டமிட்டு அதன் படி, நேரத்தை சமநிலைப்படுத்துங்கள். பின் அந்த செயலை துவங்கி வெற்றிகரமாக முடியுங்கள். 
உங்களை அறியுங்கள்
நேர மேலாண்மையில் மிகவும் முக்கியமான ஒன்று இது தான். உங்களை நீங்கள் முழுமையாக அறிந்திருந்தால் மட்டுமே நேரத்தை உரிய முறையில் கட்டுப்படுத்தி நிர்வகிக்க முடியும். ஒரு காரியத்தை உங்களால் செய்ய முடியுமா? செய்வதற்கான திறமை உள்ளதா? செயல் திறம் உள்ளதா? உள்ளிட்டவற்றை நீங்கள் அறிந்தால் மற்றவர்களின் புத்திமதியோ, உதவியோ உங்களுக்கு தேவையில்லை. உங்கள் நேரத்தை தரமாக நிர்ணயித்து காரியத்தை வெற்றிகரமாகவும் குறித்த நேரத்திலும் முடிப்பீர்கள். 
எதார்த்தமாக பழகுங்கள்
எதார்த்தமான விஷயங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் செயல்களை உங்கள் திறமை மற்றும் செயல்திறம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு பாருங்கள். கடினமான செயல்களை உங்கள் மீது சுமத்திக் கொள்ளாதீர்கள். 
செயலை பிரித்துக் கொள்ளுங்கள்
பெரிய அளவிலான ஒரு காரியத்தை செய்யத் துவங்கும் முன் அதை சிறு சிறு பாகங்களாக பிரித்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் வேலைப்பளு மற்றும் மனஅழுத்தம் உங்களை மூழ்கடித்து விடும். நேரத்திற்கு தகுந்தவாறு சிறு பாகங்களாக செயலை பிரித்து செய்தால் அதை முழுமையாகவும், பதட்டம் இல்லாமலும் பார்க்கலாம். 
திட்டமிட கற்றுக்கொள்ளுங்கள்
உங்களுடைய வேலைகளையும் அவற்றை தகுந்த நேரத்தில் முடிப்பதற் கான வழிகளையும் திட்டமிட கற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் மேற்கூறியது போல், திட்டமிடும் பொழுதே ஒரு செயலுக்கான நேரமும், செயலை பாகங்களாக பிரித்து முடிப்பதற்கான முயற்சிகளும் நமக்கு தெரிந்துவிடும். இது போல் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு காரியத்தையும் திட்டமிட்டு செயல்படுத்தினால் நேரத்தை கட்டுப்படுத்தலாம்.         -     தினமலர்

Read more...

மாற்றம், முன்னேற்றம் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் எல்லாமே.

புதன், 16 ஆகஸ்ட், 2017

நம்மில் பலருக்கும் பணக்காரர் ஆக வேண்டும்; லட்சாதிபதி ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், நம்முடைய ஆசை நிறைவேறுகிறதா... கனவு நினைவாகிறதா என்றால், நிச்சயம் இல்லை. தினமும் அந்த வேலை, இந்த வேலை எனச் சிறிய சிறிய வேலைகளுக்காகவே நாயாக, பேயாக உழைக்கிறோமே தவிர, நம்முடைய வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ள, வசதியை மேம்படுத்திக்கொள்ளப் பெரிதாக நினைப்பதுமில்லை; நினைப்பதை நிறைவேற்றவும் முடிவதில்லை. 

`பணம் இருந்தால் மட்டும் பணக்காரர் ஆகிவிட முடியாது. சிக்கனம், சேமிப்பு, முதலீடு, திட்டமிடலும் இருந்தால் மட்டுமே பணக்காரர் ஆக முடியும்; தொடர்ந்து லட்சாதிபதியாக நிலைக்க முடியும்'' என்கின்றனர் சிகரத்தைத் தொட்டவர்கள். அதே சமயம் ``40, 50 வயதில் பணக்காரர் ஆக என்ன செய்ய வேண்டும் என்பதை 40, 50 வயதில் யோசிப்பதைவிட, 10, 20 வருடங்களுக்கு முன்பே அதுகுறித்து நன்றாக யோசித்துத் திட்டமிட்டு வாழ்க்கையை வழிநடத்தினால் வெற்றி கிட்டும்'' என்கின்றனர் அனுபவசாலிகள். 
அறிஞர்கள் அருளிய எளிய வழிகள் உங்களுக்காக...
வருமானத்தைப் பெருக்கிக்கொள்! 
இன்றைய பொருளாதார சூழ்நிலையில் பணக்காரர் ஆவது, அவ்வளவு கடினமான காரியம் அல்ல. ஆனால், அதற்கான முதல் படி ஒவ்வோர் ஆண்டும் நாம் வளர்வதைப்போல, நம்முடைய வருமானமும் வளர வேண்டும். அது மாத சம்பளதாரராக இருந்தாலும் அல்லது ஏதேனும் வியாபாரம் செய்பவராக இருந்தாலும் வருமானத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கவில்லையெனில், திறமையை வளர்த்துக்கொண்டு, உங்கள் துறையில் எங்கு நல்ல சம்பளம் கிடைக்கும் என்பதைப் பார்த்து அங்கு மாறிக்கொள்வது சிறந்தது. உங்கள் வருமானத்தைப் பெருக்கிக்கொள்வது நல்லது. 
இரண்டாவது வேலை! 
உங்களுக்கு என ஒரே பணி, ஒரே சம்பளம், ஒரே வருமானம் என வாழ்நாள் முழுவதும் வாழ்க்கையை நடத்தாதீர்கள். எந்த வழியில் எல்லாம் வருமானம் ஈட்ட முடியுமோ, அந்த வழியில் எல்லாம் முடிந்த வரை வருமானம் ஈட்டத் தயாராகுங்கள். வாழ்நாள் முழுவதும் ஒரே வேலையில் காலத்தைக் கடத்தாதீர்கள். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். ஆகையால், சிறிய வேலையாக இருந்தாலும் சரி, பெரிய வேலையாக இருந்தாலும் சரி முடிந்த வரை உங்களை வளைத்து வேலை செய்யுங்கள், வருமானத்தை ஈட்டுங்கள். 
சேமிக்கப் பழகு! 
உங்களுடைய முதல் மாதச் சம்பளம் அல்லது உங்களுடைய இப்போதைய வருமானத்திலிருந்து கிடைக்கும் சிறிய தொகையை இனியாவது சேமிக்கத் தொடங்குங்கள். சேமிப்பு என்பதற்காக அந்தப் பணத்தை உண்டியலிலோ, பீரோ லாக்கரிலோ போட்டு வைப்பது சேமிப்பாகாது. இதனால் எந்த ஒரு பலனும் இல்லை. மாறாக, உங்களுக்கு நன்கு தெரிந்த, விருப்பமான முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யுங்கள். தேவையில்லாத, அநாவசியமான செலவைக் குறைத்து நல்ல முதலீட்டுத் திட்டத்தில் நீண்டகாலத்துக்கு முதலீட்டை மேற்கொள்ளுங்கள். 
இலக்கை நிர்ணயிக்காதீர்கள்! 
வாழ்க்கையில் இலக்கு என்பது மிக அவசியம். ஆனால், வருமானம் விஷயத்தில் மட்டும் இலக்கு என எதையும் நிர்ணயிக்காமல், கடமையைச் செய்யுங்கள். பலனை எதிர்பாராமல் ஓடிக்கொண்டே இருந்தால் மட்டுமே அதிக வருமானத்தை ஈட்ட முடியும். உதாரணத்துக்கு, ஆண்டுக்கு `ஒரு லட்சம் ரூபாய் வருமானம் ஈட்ட வேண்டும்' என இலக்கு நிர்ணயித்து ஓடாமல், `10 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்ட வேண்டும்' என ஓடி உழையுங்கள். வருமானத்தைப் பொறுத்தவரை அத்தனைக்கும் ஆசைப்படுங்கள். அதே சமயம் அதற்காகப் பல மடங்கு பாடுபடுங்கள். 
நேரம் ஒதுக்குங்கள்! 
தினமும் தூங்குவதற்கு முன்போ அல்லது வேறு ஒரு நேரத்திலோ குறைந்தது 5 அல்லது 10 நிமிடம், இன்று என்ன செய்தோம் என்பதை யோசியுங்கள். வாழ்க்கையை வளமாக்குவதற்காக இதுவரை சரியாகச் செய்தோமோ, செய்துவருகிறோமோ என உங்கள் பாதையை நீங்களே பின்னோக்கிப் பாருங்கள். குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது நீங்கள் சரியான பாதையில்தான் செல்கிறீர்களா என உங்கள் பாதையைப் பார்த்துவிட்டு அதன் பிறகு பயணியுங்கள். இதில் ஏதாவது தவறு இருந்தால் உங்களை நீங்களே மாற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில், மாற்றம், முன்னேற்றம் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் எல்லாமே. 
நல்ல நண்பர்கள்! 
பணம் சம்பாதிப்பதைப் பொறுத்தவரை, நம்முடைய உழைப்பு மற்றும் வருமானத்தை மட்டுமே எதிர்பார்த்து வேலை செய்யக் கூடாது. பணம் சம்பாதிப்பதைவிட நல்ல நண்பர்களை, உறவுகளைச் சம்பாதிப்பதும் மிகவும் முக்கியம். ஆகையால், என்னதான் உங்களுக்கு வேலை அல்லது தொழில் பிரச்னையாக இருந்தாலும் அதை வேறு ஒருவரிடம் காட்டாமல், மென்மையான அணுகுமுறையையே என்றும் கையாளுங்கள். ஏனெனில், பிறருடைய ஒத்துழைப்பும் உதவியும் இல்லாமல் எந்த ஒரு லட்சியத்தையும் அடைய முடியாது; லட்சத்தையும் சம்பாதிக்க முடியாது.
  நன்றி - விகடன்


Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets