உங்கள் வருகைக்கு நன்றி

ஓரினச் சேர்க்கை, நீதிபதிகளின் விளக்கமும், இஸ்லாத்தின் எச்சரிக்கையும்

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

மாறி வரும் சமூக சூழலை கருத்தில் கொண்டு ஓரினச் சேர்க்கை விவகாரத்தை பார்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரே பாலினத்தை சேர்ந்த இருவர் பரஸ்பர சம்மதத்துடன் பாலியல் உறவு கொள்வது சட்டப்படி குற்றமல்ல என்று டெல்லி உயர் நீதிமன்றம் 2009ம் ஆண்டு அளித்த தீர்ப்பு நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஒழுக்க நெறிமுறைகளுக்கும் கலாசாரத்துக்கும் ஓரினச் சேர்க்கை எதிரானது என்றும்சட்ட விரோதமானது என்றும்  பல அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.


இந்த வழக்குகள் நீதிபதிகள் சிங்விமுகோபாத்யாயா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஓரினச் சேர்க்கைக்கு எதிராக மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் அம்ரேந்திர சரண் வாதாடினார். அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘1860ம் ஆண்டுக்கு முன்பே ஓரின சேர்க்கை குற்றமாக கருதப்படவில்லை.
 

கஜுராஹோவில் உள்ள ஓவியங்களும் சிற்பங்களும் இதை காட்டுகின்றன’’ என்றனர். அதற்கு பதிலளித்த சரண், ‘‘சிற்பங்களை வைத்து சமூக பிரச்னைகளை முடிவு செய்யக் கூடாது’’ என்று வாதிட்டார். 


இதற்கு பதிலளித்து நீதிபதிகள் கூறியதாவது: சிற்பங்களும் ஓவியங்களும் அந்த காலகட்டத்தை வெளிப்படுத்துகின்றன.
 
ஓரினச் சேர்க்கையை வெறும் பாலியல் ரீதியான உறவாக மட்டுமே பார்க்கக் கூடாது. 20 ஆண்டுகளுக்கு முன் ஒழுக்கமற்றதாக கருதப்பட்டவைகளை சமூகம் இப்போது ஏற்றுக் கொள்கிறது. திருமணம் செய்து கொள்ளாமலே இருவர் சேர்ந்து வாழ்வது

செயற்கை முறையில் கருத்தரித்தல்வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது போன்றவை30 ஆண்டுகளுக்கு முன் இயற்கைக்கு முரணாக கருதப்பட்டது. இப்போதுசெயற்கை முறையில் கருத்தரித்தல் வெற்றிகரமான வியாபாரமாக நடந்து வருகிறது. சமூகம் மாறிக் கொண்டு வருகிறது. மாறி வரும் சமூக சூழலை கருத்தில் கொண்டு ஓரினச் சேர்க்கை விவகாரத்தை பார்க்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர். 

ஓரினச் சேர்க்கை முறை கேடான உறவே.
கடுமையாக எச்சரிக்கும் இஸ்லாம்

உலகில் வாழும் காலத்தில் மனிதன் தனது உடல் உணர்ச்சியைத் தீர்த்துக் கொள்வதற்காக ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் படைக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால் இதைத் தாண்டி இன்று பலர் ஆணுக்கு ஆணும், பெண்ணுக்கு பெண்ணும் என்ற ஓரினச் சேர்க்கை முறையை சரி கண்டு வருகிறார்கள்.

இதற்காக பல நாடுகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா போன்ற நாடுகள் இந்த ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு சட்டத்தின் மூலம் அனுமதியும் கொடுத்துவிட்டது.

இந்த நிலை உலகம் முழுவதும் உருவானால் நிலைமை எவ்வாறு இருக்கும்?

இப்படிப்பட்ட மானங்கெட்ட முறைகளைக் கையான்டு தங்கள் உணர்வுகளை தீர்த்துக் கொள்பவர்களின் இறுதி கட்டத்தைப் பார்த்தால் தனது தள்ளாத வயதில் தனக்க கஞ்சி ஊற்றுவதற்குக் கூட வாரிசு இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடும்.

ஆணோடு ஆண், பெண்ணோடு பெண் என்ற நிலை உருவானால் எப்படி வாரிசுகள் கிடைக்கும்? வாரிசுகள் இல்லாவர்களின் இறுதி நிலை தன்னை கவணிக்கக் கூட யாரும் அற்ற அநாதையாகவே அவன் ஆகிவிடுவான்.

ஒருவன் திருமணம் செய்திருந்தால் அவனுக்கு அவன் மணைவி இறுதி நேரத்தில் கூட துணையாக இருப்பால் ஆனால் ஆணுக்கு ஆண், பெண்ணுக்குப் பெண் என்ற நிலையில் இருக்கும் யாருக்கும் இறுதி நேரத்தில் இப்படிப்பட்ட துணைகள் கிடைப்பதில்லை. கிடைக்கவும் மாட்டாது. இதுதான் நிதர்சனமான உண்மையாகவும் இருக்கிறது.

இப்படிப்பட்ட இழிந்த காரியத்தில் ஈடுபட்டதற்காக ஒரு சமுதாயத்தையே அல்லாஹ் அழித்திருக்கிறான் என்று இஸ்லாம் நமக்கு சொல்லித் தருகிறது.

நபி லூத் அவர்களின் சமுதாயம் தான் இப்படி அழிக்கப்பட்டவர்கள். இவர்கள் தான் முதன் முதலில் இந்த இழிந்த செயல்பாட்டில் மூழ்கிய சமுதாயத்தவர்கள். அந்த முதல் சமுதாயத்தையே இறைவன் அழித்து விட்டான்.

லூத்தையும் (தூதராக அனுப்பினோம்) உலகில் உங்களுக்கு முன் யாரும் செய்திராத வெட்கக் கேடான காரியத்தையா செய்கிறீர்கள்? என்று தமது சமுதாயத்திடம் கேட்டார். (அல் குர்ஆன் 7 - 80)

நீங்கள் பெண்களை விட்டு இச்சைக்காக ஆண்களிடம் செல்கிறீர்கள்! நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாகவே இருக்கிறீர்கள் (என்றும் கூறினார்) (அல் குர்ஆன் 7 - 81)

உலகிலேயே இந்த இழி செயலை செய்தவர்களில் முதல் கூட்டம் இவர்கள் தான். இதற்காகத் தான் அந்தக் கூட்டத்தையே இறைவன் அழித்ததாக தனது திருமறையில் சொல்லிக் காட்டுகிறான்.

நமது கட்டளை வந்த போது அவ்வுரின் மீது சுடப்பட்ட கட்களால் கல் மழை பொழிந்து அதன் மேல் பகுதியை கீழ்ப் பகுதியாக்கினோம்.(அல் குர்ஆன் 11-82)

இந்த ஓரிணச் சேர்க்கை மற்றும் கட்டுப்பாடு அற்ற உறவு ஆகியவை எயிட்சுக்கு காரணம் என்று இன்று கண்டுபிடித்துள்ளார்கள்.

இந்த இரண்டு முறைகளில் தான் எயிட்ஸ் உருவாகிறது (எயிட்ஸ் தொற்று பல விதங்களில் உண்டாகிறது) என்பதை நாம் தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஆக முஸ்லீம்களாகிய நாம் எந்தக் காரணம் கொண்டும் திருமணத்தை வெறுப்பதாக சொல்லிக் கொள்ளும் துறவரத்தை ஆதரிக்கக் கூடாது.

அதே போல் ப்ரீ செக்ஸ் என்ற கட்டுப்பாடற்ற உறவு முறைக்கு எதிராக கடுமையான நிலைபாடுகளை எடுப்பதோடு பேசவும் வேண்டும்.

எந்தக் காரணம் கொண்டும் ஓரிணச் சேர்க்கைக்கு துணையாக இருந்துவிடக் கூடாது.

இந்தக் காரணங்கள் அணைத்தும் குடும்பத்தின் நல்லொழுக்கத்தை சீர் குலைப்பதுடன், குடும்ப வாழ்வையே நாசப்படுத்தும் செயல்பாடுகளுமாகும்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets