உங்கள் வருகைக்கு நன்றி

உடம்பின் பாகங்கள் வெட்டுப்பட்டால்,,,,,, பேக்' செய்யப்பட்ட உணவு பண்டங்களால் சிறுநீரகத்துக்கு ஆபத்து

சனி, 10 மார்ச், 2012

உடம்பின் பாகங்கள் வெட்டுப்பட்டால்
மதுரை அரசு மருத்துவமனையில், இடது கை மணிக்கட்டுப்பகுதி வெட்டுப்பட்ட நிலையில் வந்த மதுரை பீ.பீ.குளத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பாண்டியின் (30) கையை, அரசு டாக்டர்கள் வெற்றிகரமாக செயல்பட வைத்தனர். இதுகுறித்து பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் பாலசுப்ரமணியன் கூறியதாவது :   5ம் தேதி, உறவினர்களால் இடது கை மணிக்கட்டு பகுதி வெட்டப்பட்ட நிலையில் பாண்டி "அட்மிட்' ஆனார். வெட்டப்பட்ட அரைமணி நேரத்தில் மருத்துவமனைக்கு வந்ததால், உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தோம். என் தலைமையில் பேராசிரியர் சேகர், டாக்டர் அறம் ஜெயக்கொடி, மயக்கவியல் டாக்டர் பாலமுருகன் இரவு 10 முதல் காலை 5 மணி வரை அறுவை சிகிச்சை செய்தோம். தற்போது அவரது கை செயல்பாட்டில் உள்ளது. மூன்று மாதங்களுக்கு பின் 85 சதவீத இயல்பு நிலைக்கு கை வந்து விடும்.  உடம்பின் பாகங்கள் வெட்டுப்பட்டால், வெட்டுப்பட்ட ஆறு மணி நேரத்திற்குள், அந்த பாகத்தை பாலிதீன் பையில் சுற்றி, ஐஸ்கட்டி பெட்டியில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு வரவேண்டும். அப்படிச் செய்தால், இழந்த பாகத்தை மீண்டும் பொருத்திவிடலாம். அரசு மருத்துவமனையில் இதுவரை ஆறுபேருக்கு  இத்தகைய ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ளது. வெளியில் இதற்கு சிகிச்சை பெற இரண்டு லட்ச ரூபாய் செலவாகும், என்றார்

பேக்' செய்யப்பட்ட உணவு பண்டங்களால் சிறுநீரகத்துக்கு ஆபத்து
 நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள், நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக, பாக்கெட்டுக்களில் அடைக்கப்பட்ட உணவுப் பண்டங்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். நேர விரயத்தை தவிர்ப்பதை தவிர, இந்த உணவுப் பண்டங்களால் வேறு பயன் இல்லை. மாறாக, உடலுக்கு தீங்கையே அவை விளைவிக்கின்றன என்று மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன.

இதுகுறித்து, மும்பை மருத்துவ அறிவியல் மைய பேராசிரியர் டாக்டர் கிருபாளினி, மும்பை, ஏசியன் இருதய மருத்துவமனையின் சிறுநீரகத் துறை மருத்துவர் உமேஷ் கண்ணா உள்ளிட்டோர் கூறியதாவது:
பாக்கெட் செய்யப்படும் உணவு பண்டங்கள், கெட்டுப் போகாமல் இருப்பதற்கும், கவர்ச்சியாக தெரிவதற்கும் அதில் செயற்கையான வண்ணக் கலவைகள், அதிகப்படியான உப்பு, ரசாயன பவுடர்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன. அவைகள் மனித சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.இந்தியாவில்சிறுநீரக நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  ஆண்டுதோறும் இரண்டு லட்சம் பேர் சிறுநீரகம் செயலிழப்பால் பாதிக்கப்படுகின்றனர். சிறுநீரக நோய்க்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மாறிவரும் உணவுப் பழக்கங்கள் முக்கிய காரணமாக உள்ளன.நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள்தற்போது பாக்கெட்டுக்களில்  அடைக்கப்பட்ட உணவுப் பண்டங்களை பயன்படுத்துகின்றனர். இந்த பண்டங்களில் எந்தவிதமான சத்துக்களும் இருப்பதில்லை.

மாறாக, உடலுக்கு தீங்கு இழைக்கக் கூடிய ரசாயனங்கள் தான் உள்ளன. மேலும், சிறுநீரகம் தொடர்பாக சிறுசிறு பாதிப்பு இருப்பவர்களுக்கும், இந்த உணவுப் பண்டங்கள் நோயை அதிகப்படுத்துகின்றன. சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் பாக்கெட் உணவுப் பொருட்களை அறவே தவிர்ப்பது நல்லது. பழங்கள், பழச்சாறுகள், காய்கறிகள் உள்ளிட்ட இயற்கை உணவு பொருட்களை எடுத்துக்கொள்வது நல்லது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets