உங்கள் வருகைக்கு நன்றி

இது தான் அவர்களுக்கான எச்சரிக்கை.

வெள்ளி, 16 டிசம்பர், 2011

இரவில் தாமதமாக உறங்கிகாலையில் விரைவாக கண் விழிக்கும் வழக்கம் உடையவர்களுக்கு மாரடைப்புபக்கவாதம் வரும்'எனலண்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்காகதூங்கு மூஞ்சி ஆசாமிகள் சந்தோஷப்பட வேண்டாம். அளவுக்கு அதிகமாக தூங்கினாலும் மாரடைப்பு வருமாம். பிரிட்டனின் வார்விக் மருத்துவ பள்ளி பல்கலை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: தற்போது உலகம் முழுவதும் மக்களின் வாழ்க்கை முறைவேகமாக மாறி வருகிறது. உணவு பழக்கம்நடவடிக்கைகள் ஆகியவற்றிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலானோர் குறைவான நேரமே தூங்குகின்றனர். குறிப்பாகஇளைஞர்களின் தூக்க நேரம் குறைந்து விட்டது. இரவில் மிகவும் தாமதமாக தூங்கிஅதிகாலையில் கண் விழித்து விடுகின்றனர். இது பல்வேறு பிரச்னைகளுக்கு வழி வகுக்கும்.இவ்வாறு குறைவான நேரம் தூங்கும் வழக்கம் உடையவர்களுக்குஉணவு சாப்பிட்ட திருப்தியே இருக்காது. இதனால்அவர்களுக்கு கடுமையான பசி ஏற்படும். மேலும்மேலும்அதிகமாக சாப்பிடுவர். இதன்காரணமாகஅவர்களின் உடல் குண்டடித்து விடும். ரத்த அழுத்தம் அதிகமாகிஇருதய நோய்க்கு வழி வகுத்து விடும். இறுதியில்மாரடைப்புபக்கவாதம் போன்ற நோயின் பாதிப்புக்கு இவர்கள் எளிதில் ஆளாகி விடுவர்.

நாங்கள் நடத்திய ஆய்வில்தினமும் ஆறு மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குவோரில், 50 சதவீதம் பேர் இருதய நோயின் பாதிப்பிற்கும், 15 சதவீதம் பேர்பக்கவாத பாதிப்பிற்கும் ஆளாகியுள்ளது தெரியவந்துள்ளது.அதற்காகஎப்போது பார்த்தாலும் தூங்கி வழிந்து கொண்டிருக்கும்தூங்கு மூஞ்சி ஆசாமிகள் சந்தோஷப்பட வேண்டாம். அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். இரவு நேரங்களில் தொடர்ச்சியாக ஒன்பது மணி நேரத்துக்கும் அதிகமாக தூங்குவோருக்கும்இருதய நோய் பாதிப்பு ஏற்படும். அதிக நேரம் தூங்குவோருக்குசில நேரங்களில் அதிகம் களைப்பாக இருப்பது போல் தோன்றும். இது தான் அவர்களுக்கான எச்சரிக்கை. இதற்கு பின்னும்அவர்கள் சுதாரித்துக் கொண்டுதூங்கும் நேரத்தை குறைக்காவிட்டால்இருதய நோய் பாதிப்பு ஏற்படும்.இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets