உங்கள் வருகைக்கு நன்றி

காளானின் மருத்துவ குணங்களும், பயன்களும்

வெள்ளி, 23 டிசம்பர், 2011

காளான்கள்பொதுவாக மழைக்காலத்தில் விளை நிலத்திலும்கள்ளி வேலிக்கு அருகிலும்மக்கிய மரம் குப்பைகளிலிருந்து கூட்டம்கூட்டமாக வளர்ந்து காணப்படும். இந்தப் பகுதிகளில் இயற்கையாகவே காளான் வித்துகள் வளர்ந்துகாளான்களாக வெளியே தோன்றும். இந்த வகைக் காளான்களைஅரிசிக் காளான் என்று கிராமப் பகுதிகளில் அழைப்பதுண்டு. இத்தகைய காளான்களை குழம்பு வைத்துச் சாப்பிடலாம். இவை குளிர் காலங்களில் மட்டுமே கிடைக்கும்.
அறிவியலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால்தற்போது உணவுக் காளான்களை செயற்கை முறையில் வீடுகள்குடில்கள்ஆய்வுக் கூடங்கள்ஆராய்ச்சி மையங்கள் உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் உற்பத்தி செய்துஒரு தொழிலாக மேற்கொண்டுகுறைந்த காலத்தில் அதிக லாபம் பெறுகிறார்கள்.
குளிர்ப் பகுதிகளில் வெண் மொட்டுக் காளானும்வெப்பப் பகுதியில் சிப்பிக் காளான்பால் காளான்நெல் வைக்கோல் காளானும் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. இந்தக் காளான்களை பக்குவப்படுத்தி பல்வேறு விதமான உணவு வகைகளாகத் தயாரித்து உண்ணலாம். அவைநமது உடலுக்கு சக்தியைத் தருவதோடு புரதம்வைட்டமின்கள்தாதுப்பொருள்களை அளிக்கிறது.
காளான்சர்க்கரை நோய்க்கு ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில்கொழுப்புச் சத்து மிகமிகக் குறைவு. எனவேதற்போதுள்ள தட்பவெட்ப சூழ்நிலையின் காரணமாகஅனைவருமே காளானை உள்கொண்டால்நோயின்றி நீண்ட நாள் வாழலாம்.
மருந்துகளாகப் பயன்படும் காளான்கள்: அகாரிகஸ் கேம்பஸ் டிரிஸ்பிளாமுளினா வேலுடி பெஸ்லெண்டினஸ் எடோடஸ்கார்ட்டினெல்லெஸ் ஷிட்டேக்கோப்பரைனஸ் கொமேட்டஸ்கல்வேஷியா ஜெய்ஜான்டியாபோரியோலஸ் வெர்சிகலர்ஸ்பாலிபோரஸ் உள்ளிட்ட காளான் இனங்கள்மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன.
மருத்துவக் குணங்கள்: பாக்டீரியா நோய்கள்பூஞ்சாண நோய்கள்புற்று நோய்கள்இன்புளுயன்ஸô காய்ச்சல்சுரப்பிகளின் வீக்கம்நரம்புக் கோளாறுகாக்காய் வலிப்புமூளை நோய்வலிமை குறைவுதாம்பத்திய உறவுக்குமுதுமை குறைவுகாய்ச்சல்நீரிழிவு நோய்எய்ட்ஸ்பேதிபித்த சுரப்பி கோளாறு நோய்கள்குடல் கோளாறுகாது வலிமஞ்சள் காமாலைமூட்டு வலிநீர்க்கோர்த்தல் உள்ளிட்ட நோய்களைக் காளான் கட்டுப்படுத்துகிறது.
காளான் வளர்ப்பின் பயன்கள்: வேளாண்மையைச் சார்ந்த ஒரு துணைத் தொழில். இது சுவைமிக்கமணம் மிகுந்த உணவுப் பொருள். புரதம் மற்றும் நார்ச் சத்து நிறைந்தமாவுச் சத்து மற்றும் கொழுப்புச் சத்து குறைந்த ஒரு மருந்துப் பொருள்.
பண்ணைக் கழிவுகளை பணமாக்க உதவும். குறைந்த பரப்பளவில்குறைந்த முதலீட்டில் நிறைந்த நிகர லாபம் தரும் தொழில். பயிர் சாகுபடி செய்யாத காலங்களில் வருவாயை ஈட்டித் தரும் ஒரு தொழில். சிறந்த எருப்பொருள்மகளிருக்கு ஏற்ற சுய தொழில் மற்றும் நோயாளிகளுக்கு உகந்த உன்னத உணவுப் பொருளாகப் பயன்படுகிறது.
எனவேபடித்த இளைஞர்கள்மாணவிகள்சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள்மகளிர் சுய உதவிக் குழுக்கள்விவசாயிகள்தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தோர் வேளாண் அறிவியல் மையங்களைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்றார். 

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets