உங்கள் வருகைக்கு நன்றி

மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டிய கட்டாயம்

வெள்ளி, 29 ஜூன், 2012


மன அழுத்தம் ஒருவருக்கு பல நோய்களை கொண்டு வருகிறது. 60 சதவீத மனித வியாதிகளுக்கு மன அழுத்தமே காரணம் என்று அமெரிக்க மெடிக்கல் அசோஷியேஷன் கண்டுபிடித்துள்ளது. இதனால் மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

மன அழுத்தத்தால் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகள்தலைவலிமயக்கம்பயம்எரிச்சல்கோபம்பீதிஏ.டி.டி.,/ஏ.டி.எச்.டி.நோய் ஆகியவை ஏற்படுகின்றன. பற்களை கடிக்கும்போது தாடை பாதிக்கப்படுகிறது. இதயத்துடிப்பு அதிகரித்தல்பக்கவாதம்இதயநோய்கள்ரத்தஅழுத்தம்நீரிழிவு நோய் ஆகிய பாதிப்புகள் உண்டாகின்றன. செரிமானப் பிரச்னைவயிற்று எரிச்சல்அடி வயிற்று வலிகுடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. உடல் எடை அதிகரித்துஒபிசிட்டி எனப்படும் உடற்பருமன் ஏற்படுகிறது.உடல் எடை அதிகரித்துஒபிசிட்டி எனப்படும் உடற்பருமன் ஏற்படுகிறது. தசை இறுக்கம்நார்த் திசுக்கட்டிவலி ஆகியவை கால்களில் ஏற்படுகின்றன. மனஅழுத்தத்தால் தற்கொலை எண்ணம்போதைப் பொருட்களுக்கு அடிமையாதல்புகையிலைப் பொருட்களுக்கு அடிமையாதல்விபரீத எண்ணம்விபரீத பழக்கவழக்கங்கள் ஏற்படுகின்றன. தூக்கமின்மைபழக்கவழக்கத்தில் மாற்றம்உணர்வுப்பூர்வமாக மாற்றம்நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்ஆஸ்துமாஅல்சர்சத்துக் குறைபாடு,டென்ஷன்பதட்டம்பிரமை மற்றும் பல நோய்களையும் மனஅழுத்தம் கொண்டு வருகிறது. இயந்திர வாழ்க்கையில் மன அழுத்தம் சாதாரணமாக ஏற்படுகிறது. மன அழுத்தத்தை போக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.

முதல்படிசிறு பிரச்னைகளுக்கு கூட பெரிய அளவில் கவலைப்படுவதே மன அழுத்தத்துக்கான முதல்படி. மன அழுத்தத்தால் உடல்வேதியியல் மாற்றத்துக்கு உள்ளாகிறது. இதனால் இளம் வயதிலேயே வயதான தோற்றம் ஏற்படும். ஒருவரின் தனித்தன்மைமுயற்சிசக்தி ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படுகிறது.

நல்லவர்களையும் முட்டாளாக்கும்மன அழுத்தம்நல்ல அறிவு படைத்தவர்களையும்பழக்கவழக்கம்நடை,உடைபாவனைகளில் முட்டாள்களாக காட்டு கிறது. ஒருவருக்கு உடலளவிலும்மனதளவிலும் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. உறவினர்கள்நண்பர்களிடமிருந்து பிரியும் நிலை உண்டாகிறது.

உணர்வற்ற மனிதனாக்கும்மனித உணர்வில்பாதிப்பை உண்டு பண்ணுகிறது. தேவையில்லாத இடங்களில்,தேவையற்ற உணர்வுகளை வெளிப்படுத்த வைக்கிறது. சமுதாயத்திலிருந்து ஒரு மனிதனை பிரித்துக் காட்டுகிறது. இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரி செய்யாவிடில்மனநோய் அளவுக்கு கொண்டு செல்கிறது.

எவ்வாறு கட்டுப்படுத்துவதுஅவசர உலகில் மனஅழுத்தம் எல்லா மனிதர் களுக்கும் ஏற்படுகிறது. என்ன பிரச்னையாக இருந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்ளப் பழக வேண்டும். சிறு விஷயத்துக்கெல்லாம் கவலைப்படாமல்அதை சரி செய்ய வேண்டும். சரி செய்ய முடியாத பிரச்னை எனில்அதையே நினைத்து கவலை கொள்ளக் கூடாது.

உடனே சரிசெய்யுங்கள்பிரச்னை ஏற்பட்டு மன அழுத்தம் தோன்றும் போதுஎண்ணத்தை மாற்ற முற்படுங்கள். நண்பர் களுடன் மனம்விட்டு பேசுங்கள். இதனால் அழுத்தம் குறையும். எளிய உடற்பயிற்சியோகா மற்றும் தியானம் ஆகியவையே மனஅழுத் தத்துக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. வார இறுதி நாட்களில் புதிய இடங்கள்சுற்றுலாத் தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளுங்கள். எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளப் பழகிக் கொண்டால் மனஅழுத்தத்தை மறந்து விடலாம்.

மாறும் இதயத்துடிப்புசாதாரண மனநிலையில் இதயத்துடிப்பு எப்படியிருக்கும்மனஅழுத்தத்தின் போது எப்படியிருக்கும் என்பதை இந்த வரைபடம் காட்டுகிறது. சாதாரண மனநிலையில் இதயத்துடிப்பும் சீராக இருக்கிறது. மனஅழுத்தத்தின் போது இதயத்துடிப்பு வெவ்வேறு நிலைகளுக்கு மாறுகிறது. பயம்பதட்டம்கோபம் ஆகியவை ஏற்படுகிறது. எதிர்மறை எண்ணங்கள் ஏற்பட்டு எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை உண்டாகிறது என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். 

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets