உங்கள் வருகைக்கு நன்றி

நீங்கள் எந்தவித செலவும் இல்லாமல் உங்கள் ஆரோக்கியத்தை காக்கவேண்டும் என்றால் !

புதன், 13 ஜூன், 2012


அப்பாவுக்கு 64 வயது. ஒரு தடவை இருதயத்தில் பிரச்னை ஏற்பட்ட பிறகு டாக்டரிடம் காண்பித்து சரியாக சிகிச்சைகள் பெற்று, சரியான மருந்துகளோடு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தார்.
திடீரென்று ஒரு நாள் அவர் காலையில் எழுந்திருக்கவில்லை. என்ன அப்பாவை இன்னும் காணோமே என்று அவருடைய அறைக்கு சென்று பார்த்த மகளுக்கு அதிர்ச்சியாகிவிட்டது. பார்த்தால் அவர் மயங்கிய நிலையில் பக்கவாதம் ஏற்பட்டு கிடந்தார். பேச்சு லேசாக திணறுகிறது. அவசர அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் மெல்ல வந்து அவருடைய மகளிடம் பேசிய போது, அவருடைய மகள் சொன்னார். ஹெல்த் வினுயத்தில் அப்பா ரொம்ப பர்பெக்ட் சரியான டயட், கரெக்டா வாக்கிங். டாக்டர் கொடுத்திருக்கிற மருந்துகளை தவறாமல் சாப்பிடுவார். மருந்து சீட்டுகளை வாங்கி பார்த்த டாக்டர் திருப்பி கொடுத்து விட்டு அவருடைய மகளிடம் சொன்னார் உங்க அப்பாவுக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் மேபிஉங்க அப்பா தொடர்ந்து சாப்பிடுற ஆஸ்பிரின் மாத்திரையால இருக்கலாம். இந்த செய்தி திரு.நாராயணசாமியின் மகளுக்கு மட்டுமல்ல. உங்களில் நிறைய பேருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். நாம் சாப்பிடுகிற சில மருந்து இவ்வளவு பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்துமா? அலோபதி மருந்துகளில் இந்த மாதிரியான தவிர்க்க முடியாத பிரச்னைகளை சந்திக்க நேரிடும். ஆஸ்பிரின் என்கிற மருந்து உயிர் காக்கும் மருந்து. இருதய நோயாளிகள் மூளையில் ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுகிறவர்கள் போன்ற பெரிய பிரச்னை உள்ள நோயாளிகளுக்கு ஆஸ்பிரின் மருந்து ஒரு அமுதம் போன்றது. அதை சாப்பிடுவதன் மூலமே அந்த நோயாளிகளுடைய வாழ்நாளை நீட்டிக்க முடியும். ஆனால் சிலருக்கு இந்த ஆஸ்பிரின் இம்மாதிரியான மூளை ரத்த கசிவு போன்ற பெரிய பிரச்னைகளை உருவாக்கிவிடுகிறது. இது தவிர வயிற்று அல்சர், வயிற்று அல்சரால் ஏற்படுகிற ரத்த வாந்தி போன்றவையும் சிலருக்கு ஏற்படலாம். ஏற்கனவே மூளை ரத்தக்குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இம்மருந்தை மாப்பிடுவதன் மூலம் ரத்தக்கசிவு ஏற்படுகிற அபாயம் ஆஸ்பிரினால் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது. இது தவிர சமீபத்திய ஆய்வுகளில் ஆஸ்பிரின் மருந்தால் கிட்னி மற்றும் கல்லீரலில் ஏற்படுகிற பிரச்னைகள் கறித்து விவாதிக்கப்படுகிறது. இது தவிர மேக்கியூலர் டிஜெனரேஷன் என்கிற பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்பார்வை இழக்கும் அபாயம் அதிகரிப்பதாக தகவல்கள் சொல்லப்படுகிறது. உலகம் முழுக்க ஆஸ்பிரின் மாத்திரையை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். லட்சக்கணக்கான நபர்களின் உயிர் ஆஸ்பிரின் மாத்திரையின் கையில் இருக்கிறது. அதற்காக இம்மாத்திரையால் ஏற்படுகிற பக்கவிளைவுகளை நாம் தெரிந்து கொள்ளாமல் இருப்பது நல்லதல்ல. இம்மாதிரி சில அலோபதி மருந்துகள் இரண்டு பக்கமும் கூர்மையான கத்திகள். எந்த பக்கம் பிடித்தாலும் மிக ஜாக்கிரதையாக பிடிக்க வேண்டும். எந்த அளவில் எந்த நேரத்தில் இந்த மருந்துகளை சாப்பிடுவது என்பதை துல்லியமாக எப்பொழுதும் உங்கள் டாக்டரின் அலோசனைகளோடு நடக்கவும். தற்சமயம் மெல்ல. இந்த மருந்தின் அளவை குறைப்பது எப்படி என்கிற விவாதங்களும் ஆய்வுகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதன் மிக அடிப்படையான வழி இருதயத்தையும், ரத்தத்தின் திரவத்தன்மையையும் பல்வேறு இயற்கையான வழிகளில் நாம் பாதுகாக்க முயற்சிக்க வேண்டும். இதயத்தை பாதுகாக்கும் சில இயற்கை விஷயங்கள் என்ன? ஆர்ஜினையின் வைட்டமின் கே, பெர்ரி, வைட்டமின் இ, கோயென்சைன் கியூ10, மீன் எண்ணெய், வைட்டமின் சி போன்றவை இருக்கிற எந்த உணவுப்பொருளும் உங்கள் இதயத்தையும், ரத்தத்தின் நீர்மைத்தன்மையையும் அற்புதமாக காக்கவல்லது. கூடவே ஆரோக்கியமான உணவு. போதுமான உடற்பயிற்சி. அலட்சியப்படுத்தாமல் காமன்சென்ஸ் லைப் ஸ்டைல் மூன்றும் மிக முக்கியமானவை. உடற்பயிற்சி ன்று வரும்போது பல்வேறு ஆய்வுகளும், மறுபடியும், மறுபடியும் நிரூபிப்பது வாக்கிங் தான். உலகின் மிகச்சிறந்த எக்ஸர்ஸைஸ் நடைப்பயிற்சி தான். நீங்கள் எந்தவித செலவும் இல்லாமல் உங்கள் ஆரோக்கியத்தை காக்கவேண்டும் என்றால் நடைப்பயிற்சியை மேற்கொள்வது மிக சிறந்த மிக அற்புதமான வழி.
ஓபி.கபூர் என்கிற மும்பை ஜஸ்லோக் மருத்துவமனையின் புகழ்பெற்ற மருத்துவர் டாக்டர்களுக்காக எப்பொழுது நீங்கள் ஆஸ்பிரின் மருந்தை கொடுக்கக்கூடாது என்று ஒரு சிறிய புத்தகம் எழுதியிருக்கிறார். அதன் முடிவில் அவர் சொல்வது இது தான். இந்த மருந்து சாதாரண மருத்துவர்களால் கூட சட்டென்று பரிந்துரைக்கப்பட்டு விடுகிறது. ஆனால் இது ஒரு முக்கியமான மருந்து தவிர இதன் பாதுகாப்பை பற்றியும் நிறைய சிந்திக்க வேண்டிய மருந்து. ஆகவே இதை பரிந்துரைப்பதற்கு மன் நீங்கள் மேலும் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களில் ஆலோசனையை பெற வேண்டும்.
இப்படி ஒவ்வொரு மருந்துக்கும் ஏதாவது பக்கவிளைவு இருக்கிறது என்று எண்ணி நீங்கள் சட்டென்று எந்த மாத்திரையையும் நிறுத்திவிடக்கூடாது. இம்மாதிரி மருந்துகளை நிபுணத்துவம் பெற்ற பெரிய மருத்துவர்களின் ஆலோசனைகளோடு மட்டுமே எடுத்துக்கொள்ள வேணடும். உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் எந்த அளவில் கொடுப்பது என்பதை அவர்களால் முடிவு செய்ய முடியும். எப்பொழுதும் நிபுணர்களின் ஆலோசனையோடு செயல்படுங்கள். அறிவுஎப்பொழுதும் மோசமான துயரங்களுக்கு பின் மட்டுமே வருகிறது என்று ஆஸ்கர்வைல்டு சொன்னார். ஒரு எளிய கட்டுரையை படிப்பதன் மூலம் கூட அதை நாம் பெற முடியும் என்பதை நாம் ஏன் நிரூபிக்ககூடாது?

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets